ஐந்தரை வயதுள்ள சிறுவன்
- Details
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 9109
ஐந்தரை வயதுள்ள சிறுவன்
எம்.முகுந்தன்
தமிழில் : சுரா
சேகரன், நளினி தம்பதியின் ஒரே மகன் ஜெயன். முதல் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறான்.
வகுப்பு இருக்கும் ஒருநாள்.
“மணி எட்டாகிவிட்டதே! ஜெயன், நீ இன்னும் எழுந்திரிக்கலையா?”
பால் காய்ச்சிக்கொண்டிருந்த நளினி சமையலறையிலிருந்து அழைத்துக் கேட்டாள். அவள் கேட்டது முன்னறையில் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்த சேகரனிடம்.