Lekha Books

A+ A A-
06 Jun

அலிபாபாவின் மரணம்

அலிபாபாவின் மரணம்

அஜீத் கவுர்

தமிழில் : சுரா

றுதியாக ஒருநாள் அவன், தன்னுடைய அலுவலகத்தின், டவுன் ஹாலின் நான்காவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். சிறிது மனிதனாகவும், அதிகமாக கிளார்க்காகவும் இருந்த ராம்லால்.

மறுநாள் பத்திரிகையில் வட்டாரச் செய்திகள் பிரசுரமாகும் மூன்றாவது பக்கத்தில், ஓரிரு வரிகளில் ராம்லாலின் மரணச் செய்தி வெளிவந்திருந்தது. ‘நகராட்சியில் கிளார்க்காகப் பணியாற்றிய ராம்லால், டவுன்ஹாலில் நான்காவது மாடியிலிருந்து குதித்து மரணமடைந்துவிட்டான்!’ சாதாரண கெட்ட செய்திகள்தான் பொதுவாகவே அந்தப் பக்கத்தில் பிரசுரமாகும்.

Read more: அலிபாபாவின் மரணம்

30 May

புதிய புதிய முகங்கள்

புதிய புதிய முகங்கள்

எம்.முகுந்தன்

தமிழில் : சுரா

ல்லூரி வேலைநாள் அது. எனவே ஸ்டேஷனுக்கு செல்வதற்காக விடுமுறை எடுக்க வேண்டிய சூழ்நிலை தேவகி டீச்சருக்கு உண்டானது. அதிகாலை வேளையிலேயே கண்விழித்து, குளித்துமுடித்து, பாதி நரைத்துவிட்டிருந்த கூந்தலை உலரவைத்தவாறு வண்டி வரும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். மங்களாபுரம் மெயில் பதினொரு மணிக்குத்தான் வரும். நேரம் முன்னோக்கி நகரவேயில்லை.

Read more: புதிய புதிய முகங்கள்

29 May

ஞாபகம்

ஞாபகம்

பி.பத்மராஜன்

தமிழில் : சுரா

சில நாட்களுக்கு முன்பு-

சங்கரநாராயணப் பிள்ளையும் அவரது குடும்பமும், தேசிய நெடுஞ் சாலையின் வழியாக வாடகைக் காரில் திருவனந்தபுரத்திலிருந்து கற்றானம் என்ற இடத்திற்குப் பயணித்துக் கொண்டிருந்தார்கள். பிள்ளை முன்னிருக்கையில் கனத்த முகத்துடன் அமர்ந்திருந்தார். பின்னிருக்கைகளில் மனைவி கமலம்மாவும் மகள் ஷைலஜாவும் மகளின் கணவன் சோமன் நாயரும் அவர்களுடைய குழந்தை ப்ரீதியும்... எல்லாருடைய முகங்களிலும் இறுகிய தன்மையும் கண்ணீரால் உண்டான சிறிது ஈரமும்...

Read more: ஞாபகம்

29 May

ஆற்றைக் கடந்து மரங்களுக்கு மத்தியில்...

ஆற்றைக் கடந்து மரங்களுக்கு மத்தியில்...

டி.பத்மநாபன்

தமிழில் : சுரா

ற்றைக் கடந்து மரங்களுக்கு மத்தியில்- ஒரு சிறப்பும் இல்லாத சாதாரண வார்த்தைகள். வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் காட்சிகளும் முற்றிலும் சாதாரணமானவையே. ஏதாவது சிறப்பான விசேஷமான ஒரு அர்த்தம் அவற்றுக்கு இருக்கிறதென்று யாருக்கும் தோன்றுவதற்கும் வழியில்லை. ஆனால், அதற்குப் பிறகும் என்ன காரணத்திற்காக கடந்த எவ்வளவோ வருடங்களாக இந்த புத்தகத்தின் பெயர் மனதை வேட்டையாடிக் கொண்டே இருக்கிறது? வேட்டையாடல் என்று கூறினால் முற்றிலும் சரியாக இருக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. இங்கு வேதனை உண்டாக்குவது மட்டுமல்ல- சந்தோஷப்படுத்துவதும் ஆச்சரியப்படுத்துவதும்கூட இருக்கின்றனவே!

Read more: ஆற்றைக் கடந்து மரங்களுக்கு மத்தியில்...

13 May

பயணத்தின் ஆரம்பம்

பயணத்தின் ஆரம்பம்

டி.பத்மநாபன்

தமிழில் : சுரா

வன் எந்த ஸ்டேஷனில் வண்டியில் ஏறியிருப்பானென்று நான் ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்த்தேன். நிச்சயம் அது காலை பரபரப்பு ஆரம்பமாவதற்கு முன்பாகத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் அவனுக்கு உட்கார இடம் கிடைத்திருக்கும் வாய்ப்பே இல்லையே! இடமென்று கூறும்போது அவனுக்கு ஒரு ஆளின் இடமல்ல- இரண்டு ஆட்களுக்கான இடம் தேவைப்படும். அதற்கேற்ற உயரமும் அவனுக்கிருந்தது. நின்றால், கிட்டத்தட்ட மேற்கூரையில் தட்டக்கூடிய அளவுக்கு இருக்கும்...

Read more: பயணத்தின் ஆரம்பம்

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel