Lekha Books

A+ A A-

ஆற்றைக் கடந்து மரங்களுக்கு மத்தியில்...

ஆற்றைக் கடந்து மரங்களுக்கு மத்தியில்...

டி.பத்மநாபன்

தமிழில் : சுரா

ற்றைக் கடந்து மரங்களுக்கு மத்தியில்- ஒரு சிறப்பும் இல்லாத சாதாரண வார்த்தைகள். வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் காட்சிகளும் முற்றிலும் சாதாரணமானவையே. ஏதாவது சிறப்பான விசேஷமான ஒரு அர்த்தம் அவற்றுக்கு இருக்கிறதென்று யாருக்கும் தோன்றுவதற்கும் வழியில்லை. ஆனால், அதற்குப் பிறகும் என்ன காரணத்திற்காக கடந்த எவ்வளவோ வருடங்களாக இந்த புத்தகத்தின் பெயர் மனதை வேட்டையாடிக் கொண்டே இருக்கிறது? வேட்டையாடல் என்று கூறினால் முற்றிலும் சரியாக இருக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. இங்கு வேதனை உண்டாக்குவது மட்டுமல்ல- சந்தோஷப்படுத்துவதும் ஆச்சரியப்படுத்துவதும்கூட இருக்கின்றனவே!

சானிட்டோரியத்தில் இறுதி நாள். அவர் மேனேஜரின் அறையில் பலவற்றையும் ஆலோசனை செய்தவாறு அமர்ந்திருந்தார். அப்போது அடர்த்தியான இருட்டில், பிரகாசத்தின் மிகச் சிறிய ஒரு பகுதி கடந்து வருவதைப்போல அந்த வார்த்தைகளும், அந்த புத்தகமும், புத்தகத்தின் அட்டைப்படமும் மனதில் தோன்றின. காலம் எவ்வளவாகிவிட்டது! நாற்பது- அல்ல... அப்படி இல்லையென்றாலும், எவ்வளவு வேண்டுமானாலும் ஆகட்டும். வருடங்களில் என்ன இருக்கிறது? நினைத்துப் பார்க்க முடிகிறதா என்பதல்லவா முக்கியம்?

அவர் இப்போதும் எல்லாவற்றையும் தெளிவாக நினைத்துப் பார்க்கிறார்- புத்தகத்தின் பெயரை மட்டுமல்ல; அதன் கதையை மட்டுமல்ல; அதன் அட்டைப் படத்தைக்கூட!

சில நேரங்களில் தோன்றியிருக்கிறது... அட்டைப் படம்தானே அதிகமான பலத்துடன் மனதிற்குள் வேகமாக நுழைந்தது? கதை நன்றாக இல்லை என்றால்; நன்றாகவே இருந்தது. அப்படிக் கூறினாலும் போதாது- மிகவும் அதிகமாக மனதைத் தொட்டது. சென்னையில் படிப்பதற்காகச் சென்ற ஆரம்ப நாட்களில்தான் புத்தகம் வாங்கியதும் வாசித்ததும். அதற்கு முன்பே நிறைய கேள்விப்பட்டிருக்கிறார். புகழ்பெற்ற விமர்சகர்கள் பெரிய பத்திரிகைகளில் எழுதிய கருத்துக்கள் அனைத்தும் எழுத்தாளருக்கு எதிராக இருந்தன. ‘முடிந்தது; ஹெமிங்வேயின் கதை முடிந்தது. வயதும் நோயும் அவரை முழுமையாகக் கீழ்ப்படியச் செய்துவிட்டன. இனி அவர், எழுதி வாசகர்களை சிரமத்திற்குள்ளாக்க வேண்டாம்....’

வேறு சிலர் எழுதினார்கள்.

‘இது என்ன நாவல்? இதில் ஒரு கதை எங்கே இருக்கிறது? இவர் முன்பு எழுதியவற்றுக்கு அருகில் வைக்கும் அளவுக்கு ஏதாவது இந்த இறுதியாக வெளிவந்த புத்தகத்தில்...’

சானிட்டோரியத்தின் மேனேஜரின் அறையில் அவர் அப்போதும் தனியாகத்தான் இருந்தார். அவர் தனக்குத்தானே மெதுவாகக் கூறிக் கொண்டார். ‘இல்லை... அது எதுவும் சரியாக இல்லை....’

புத்தகம் வந்துவிட்டதா என்பதை விசாரிப்பதற்காக தினமும் மாலை வேளைகளில் ‘ஹிக்கின்பாதம்ஸுக்கு வேகவேகமான, வெறிபிடித்ததைப் போன்ற நடை! இறுதியில் கிடைத்தபோது, வாசித்த முடித்தபோது, மீண்டும் மீண்டும்... அட்டையில்... வயதாலும், போரில் பெற்ற காயங்களாலும் தளர்ந்துபோன அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்தவர். கர்னல். ஒவ்வொரு நிமிடமும் மரணத்தை நோக்கி..’

தெரிந்து கொண்டே நீந்திச் சென்ற மனிதர், எல்லாவற்றையும் அறிந்து கொண்டே தன்னுடைய தந்தையின் வயதிருக்கக்கூடிய, இறக்கப்போகும் அந்த மனிதரை ஆழமாகக் காதலித்த இத்தாலிய பிரபு வம்சத்தைச் சேர்ந்த இளவரசி...

புத்தகத்தைப் பற்றி எல்லாரிடமும் கூறினார்- வாசிப்பு என்பதை பழக்கமாகக் கொண்டிருக்கும் நன்கு தெரிந்தவர்களிடமும், நண்பர்களிடமும், ‘இதோ ஒரு புத்தகம். ஹெமிங்வேயின் மிகச் சிறந்த புத்தகம். சற்று வாசித்துப் பாருங்கள்- அதற்குப் பிறகு கூறுங்கள்- அவருடைய திறமைகள் அனைத்தும் தீர்ந்து போய்விட்டனவா என்று.’

ஆனால், அவர்கள் எல்லாரும் கூறியது:

‘இது என்ன புத்தகமா? இது புதினமா? இதில் என்ன இருக்கிறது? இதிலிருக்கும் கதையின் அர்த்தமென்ன? இறக்கப்போகும் ஒரு கிழவனின், அவனைக் காதலிப்பதாகக் கூறும் ஒரு இளம்பெண்ணின்...’

அப்போது அவர்களிடம் சொன்னார்: ‘வேண்டாம். வேண்டாம். அப்படி கதையைச் சுருக்கமாகக் கூறவே வேண்டாம். உங்களுக்கு விருப்பமில்லையென்றால், அதை கூறினால் போதும். அப்படியில்லாமல்... பிறகு.... அர்த்தத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டீர்களே? ஒன்று கேட்கட்டும்மா? நம்முடைய இந்த வாழ்க்கைக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? பிறகு... காண்பதற்கும் கேட்பதற்கும் எல்லாம் அர்த்தம் உண்டாக்கி புரிந்து கொண்டேயாக வேண்டுமென்றும் இருக்கிறதா என்ன? பிறகு... இந்த உலகத்தில் காண்பதற்கும் கேட்பதற்கும் அப்பால் சில... அப்படியும் இருக்கலாம் அல்லவா? அப்படி இருக்கும்போது இந்தப் புத்தகத்தின் அர்த்தத்தைப் பற்றி நாம்...’

ஆனால், அவர்கள் அவற்றையெல்லாம் சிரித்துக் கொண்டே ஒதுக்கிவிட்டார்கள். இன்று அதைப் பற்றியெல்லாம் நினைத்துப் பார்த்தபோது, அவரும் புன்னகைத்தார். மொத்தத்தில் அந்தப் புத்தகத்தை தான் எத்தனை முறை வாசித்திருப்போம் என்பதையும் அவர் நினைத்துப் பார்த்தார். பலமுறை என்று கூறமுடியுமே தவிர, எத்தனை முறை என்பதைக் கூற முடியாதே! பலமுறை... பலமுறை.... வாழ்க்கையின் வினோதமான ஒவ்வொரு கட்டங்களில், சந்தேகத்துடன் நின்றிருந்த விழிகளின் திருப்பங்களில்....

அப்போதெல்லாம் இந்தப் புத்தகம் ஒரு வெளிச்சமாக இருந்ததே! படத்தில் கர்னல், பிரபு வம்சத்தைச் சேர்ந்த இளவரசி இருவரையும் தவிர மரங்களும் இருந்தன. இளவரசி கர்னலின் தளர்ந்துபோன மார்பின்மீது தலையை வைத்துப் படுத்திருந்தாள். தூரத்தில் மரங்கள் இருந்தன. ஆனால், அங்கு எந்த இடத்திலும் ஆறு இல்லை. அதனால் முதலில் அவருக்கு ஒரு குறை தோன்றியது. ‘ஆற்றைக் கடந்து மரங்களுக்கு மத்தியில்... என்றுதானே வருகிறது? அப்படியென்றால், அங்கு ஆறு எங்கே? ஆறு இல்லையே!’

பிறகு அவர் மனதைத் தேற்றிக் கொண்டார். ஆறு இருக்கிறது. கண்களுக்குத் தெரியவில்லை என்பதுதான் விஷயம். பிறகு... உள்ளவை எல்லாவற்றையும் பார்த்தேயாக வேண்டுமென்று இல்லையே! கங்கையும் யமுனையும் சரஸ்வதியும்... ஆனால், சரஸ்வதியை யார் பார்த்திருக்கிறார்கள்? அதனால் சரஸ்வதியே இல்லையென்று கூறுவிட முடியுமா?

சரஸ்வதி காலத்தில் ஓட்டத்தில் மறைந்துவிட்டது.... கண்ணுக்குத் தெரியாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது...

மேனேஜர் அறைக்குள் வந்தபோது, அவருடன் இளைஞரான டாக்டரும் இருந்தார். டாக்டர் புன்னகைத்துக் கொண்டே சொன்னார்.

“அப்படியென்றால்... இன்னைக்கு திரும்பிப் போறீங்க. அப்படித்தானே?”

அவரும் புன்னகைத்தார். ஆனால், எதுவும் கூறவில்லை.

டாக்டர் மீண்டும் கூறினார்:

“வீட்டில் எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். இல்லையா?”

அவர் அதிர்ச்சியடைந்தார். எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்களா யார்? யாரை?‘

அவர் எதுவுமே கூறாமல் உட்கார்ந்திருந்தார். மனதில் அப்போது ஒரு குழப்பம் இருந்தது. குழப்பம் தெளிவானபோது- அதற்கு சிறிது நேரமானது- அவர் நினைத்துப் பார்த்தார்:

இங்கு வருவது இது இரண்டாவது முறையா? அல்லது மூன்றாவது முறையா?

இதற்கு முன்பும் வந்திருக்கிறோம். உண்மை.... அப்படித்தானே டாக்டருடனும் மேனேஜருடனும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு நோயாளியின் அன்பும் பழக்கமும் உண்டாயின?

இந்த முறை பார்த்தபோது டாக்டர் முதலில் கேட்டார்:

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel