Category: சிறுகதைகள் Written by சுரா
பருவ மழைக் காலம்
டி.பத்மநாபன்
தமிழில் : சுரா
பருவமழைக் காலத்தின் ஆரம்பத்தில் ஒரு நாள். இளம் பெண் கல்லூரிக்குச் செல்லாமல் புகை வண்டி நிலையத்திற்குச் சென்றாள். தூரத்திலிருந்த வீட்டிலிருந்து அவள் காலையிலேயே புறப்பட்டாள். எனினும், புகை வண்டி நிலையத்தில் வந்து சேர்ந்தபோது, வண்டி வந்து விட்டிருந்தது. அதனால் அவள் ஓடினாள். தனக்கு அறிமுகமானவர்கள் யாராவது பார்ப்பார்களா, தனக்கு என்ன ஆனது என்று ஆட்கள் ஆச்சரியப்படுவார்களா என்பது பற்றியெல்லாம் அவள் அப்போது நினைத்துப் பார்க்கவில்லை.
Category: சிறுகதைகள் Written by சுரா
ஒரு இலையுதிர் கால மாலை வேளை
மாக்ஸிம் கார்க்கி
தமிழில் : சுரா
ஒரு இலையுதிர் கால மாலை வேளையில் நான் தாங்கிக் கொள்ள முடியாத, சந்தோஷமற்ற நிலையில் இருந்தேன். நான் சமீபத்தில் வந்து சேர்ந்த நகரத்தில் கையில் காசு எதுவும் இல்லாமல், தலைக்கு மேலே ஒரு கூரை இல்லாமல் இருப்பதை உணர்ந்தேன். அந்த ஊரில் எனக்குத் தெரிந்தவர் என்று கூறுவதற்கு ஒருவர் கூட இல்லை.
Category: சிறுகதைகள் Written by சுரா
நான்
எம்.முகுந்தன்
தமிழில் : சுரா
கண்களைத் திறந்தான். தான் எங்கு இருக்கிறோம்? நான்கு பக்கங்களிலும் திகைப்புடன் பார்த்தான். எதையும் பார்ப்பதற்கோ கேட்பதற்கோ முடியவில்லை. அப்படியென்றால், தான் எங்கே இருக்கிறோம்? எப்படி தெரிந்து கொள்ள முடியும்? எங்கேயும் இருக்கலாம்.
Category: சிறுகதைகள் Written by சுரா
இருள் நிறைந்த வானம்
பாறப்புரத்து
தமிழில் : சுரா
நேரம் அதிகமாக ஆகி விட்டிருந்தாலும், கடைசி வண்டி வரும் என்று வெற்றிலை, பாக்கு கடைக்காரன் கூறுகிறான். இனியும் வண்டியை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம் என்று பீடி சுற்றும் மனிதன் கூறுகிறான்.
Category: சிறுகதைகள் Written by சுரா
இரண்டாவது திருமணம்
தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில் : சுரா
ஒரு இளம்பெண் ஆணைப் பற்றி சிந்திக்கக் கூடிய ஒரு வயது இருக்கிறது. அவள் ஆணை, கனவு காணக் கூடிய இன்னொரு பருவதிற்குள் நுழைகிறாள். பிறகு... அவள் ஒரு ஆணுக்காக காத்திருக்கிறாள். அந்த காத்திருத்தல் ஒரு ஆண் வெறுப்பு என்ற நிலைக்கு மாறி விடக் கூடிய வாய்ப்பும் உண்டாகலாம். நாற்பத்தைந்தாவது வயதில் ஒருத்திக்கு திருமண அதிர்ஷ்டம் உண்டாகிறது என்றால், அது எப்படி இருக்கும்?