Lekha Books

A+ A A-
19 Feb

கமலத்திற்கு ஒரு கதை

கமலத்திற்கு ஒரு கதை

தகழி சிவசங்கரப்பிள்ளை

தமிழில்: சுரா

 

து நான் முன்பு ஒருமுறை எழுதியது.  பத்து... முப்பது வருடங்களுக்கு முன்பு.  முதல் கதையைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன்.  அந்த வார இதழின் பெயர் ஞாபகத்தில் இல்லை.  வார இதழை நடத்திக் கொண்டிருந்தவர் டி. என். கோபிநாதன் நாயரும் ராஸ்கோட் கிருஷ்ணபிள்ளையும்.  அடூர் பாஸியும் அவர்களுடன் இருந்தார் என்று நினைக்கிறேன்.  ஆமாம்... புகழ் பெற்ற திரைப்பட நட்சத்திரம் அடூர் பாஸிதான்.  அந்த கட்டுரை இப்போது என்னிடம் இல்லை.  விஷயங்களை நான் நினைத்துப் பார்க்கிறேன்.  அவை மறக்கக் கூடியவை அல்ல.

Read more: கமலத்திற்கு ஒரு கதை

17 Feb

வாழ்க்கையின் ஒரு பக்கம்

வாழ்க்கையின் ஒரு பக்கம்
பாறப்புரத்து
தமிழில்: சுரா

ல வேளைகளில் முயற்சித்தும், ஒரு கதைக்கான இலக்கணத்திற்குள் அடங்காத, வாழ்க்கையின் பழைய ஒரு பக்கம். உண்மையில் நடைபெற்ற இந்த கதையை வெளிப்படுத்தினால் என்னுடைய ஒழுக்கம் பற்றிய எண்ணம் எப்படி விமர்சிக்கப்படும் என்ற கடுமையான குழப்பம் இருக்கத்தான் செய்தது. அதனால் இவ்வளவு காலமும் நான் இதை இதயத்தின் அடித்தளத்தில் மறைத்து வைத்துக் கொண்டு நடந்து திரிந்தேன். ஆனால், இப்போது இந்த இதயச் சுமையை இறக்கி வைப்பது என்பது தவிர்க்க முடியாத விஷயமாக ஆகி விட்டிருக்கிறது....

Read more: வாழ்க்கையின் ஒரு பக்கம்

13 Feb

யுதிஷ்டிரன்

யுதிஷ்டிரன்

(பஞ்சாபி கதை)

அஜீத் கவுர்

தமிழில்: சுரா

 

ந்த முறை மீண்டும் வெள்ளப் பெருக்கு வந்தது.  கிராமம் முழுவதும் கலங்கிய நீரால் நிறைந்து காணப்பட்டது.

ஏரிகள் கரையைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்க, அருகிலிருந்த மரங்களால் உறுதியுடன் நிற்க முடியவில்லை.  அவை சிறிதும் எதிர்பாராமல் பெயர்ந்து விழுந்தன.  பெரிய மரங்கள் மட்டும் தப்பித்தன.  ஆனால், நீரின் பலமான ஓட்டம் அவற்றை அசைப்பதைப் போல தோன்றியது.  எனினும், அவை தைரியம் கொண்ட வீரர்களைப் போல உறுதியாக நின்றிருந்தன.

Read more: யுதிஷ்டிரன்

13 Feb

பொன்னம்மாவின் புடவை

பொன்னம்மாவின் புடவை

(மலையாளக் கதை)

தகழி சிவசங்கரப்பிள்ளை

தமிழில்: சுரா

 

பொன்னம்மா ஒரு முறை திருவனந்தபுரத்திற்குச் சென்றிருக்கிறாள்.  இன்னொரு முறை எர்ணாகுளத்தைப் பார்க்க முடிந்தது.  நான்கு தடவைகள் ஆலப்புழைக்கும் போயிருக்கிறாள்.  அன்று திருவனந்தபுரத்திற்குச் சென்றபோது தோன்றிய ஆசை அது.  ஒரு புடவை.  எல்லா வருடங்களும் அம்பலப்புழை திருவிழாவிற்குச் செல்லும்போது அவளுடைய ஆசை மீண்டும் உயிர்த்தெழும்.  அவள் தன் தாயைத் தொந்தரவு செய்ய ஆரம்பிப்பாள்.  அவளுடைய அன்னை கூறுவாள்: 'உனக்கு ஒருத்தன் வர்றப்போ, அவன்கிட்ட சொல்லு, அது வரை இது போதும்.'

Read more: பொன்னம்மாவின் புடவை

13 Feb

மரணத்திற்குப் பிறகு

மரணத்திற்குப் பிறகு

(மலையாளக் கதை)

தகழி சிவசங்கரப்பிள்ளை

தமிழில்: சுரா

 

ணவன் இறந்து, மனைவி சுய நினைவில்லாமல் படுத்திருக்கிறாள்.  அந்த கணவனுக்கும் மனைவிக்குமிடையே இருந்த உறவு ஊரில் ஒரு முன் மாதிரியாக இருந்தது.  அன்பு செலுத்தி... அன்பு செலுத்தி அவர்கள் ஒன்றாக ஆகி விட்டிருந்தார்கள்.  அப்படி இருக்கும்போது ஒருவர் இன்னொரு ஆளை தனியாக ஆக்கி விட்டு, எங்கோ போய் விட்ட நிலை உண்டானது.

Read more: மரணத்திற்குப் பிறகு

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel