Category: சிறுகதைகள் Written by சுரா
அனாதை பிணம்
தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில் : சுரா
ம
க்கார் அப்படித்தான் இறந்தான். இறப்பதற்குத்தான் ஊர்ந்து ... ஊர்ந்து அவன் மருத்துவமனைக்குச் சென்றான். அந்த பயணத்தில் அவன் நகரத்திலிருக்கும் பல முக்கிய வீடுகளின் வாசற்படிக்குச் சென்றான். அங்கு கிடந்து இறப்பதற்காக அல்ல... நாழி கஞ்சி நீருக்காக.... நான்கு விரல்கள் அளவிற்கு அகலம் கொண்ட துணிக்காக .... மழை நிற்கும் வரை அமர்ந்திருப்பதற்கு மட்டும் ... எல்லா இடங்களிலிருந்தும் அவன் விரட்டியடிக்கப்பட்டான். அப்படி விரட்டியடித்தவர்களை குறை கூற வேண்டிய அவசியமில்லை. வீட்டின் முன் பகுதியில் ஒரு அனாதை பிணம் கிடப்பது என்பது எந்த அளவிற்கு தொல்லை அளிக்கக் கூடிய ஒரு விஷயமாக இருக்கும்!
Category: சிறுகதைகள் Written by சுரா
பாரம்பரியம்
தகழி சிவசங்கரப்பிள்ளை
தமிழில் : சுரா
ஒ
ரு நாள் காலையில் அந்த பிச்சைக்காரன் சுமை தாங்கிக் கல்லின் மீது சாய்ந்த நிலையில் இறந்து கிடந்தான். சுமை தாங்கிக் கல்லின் மீது ஒரு சிறிய மூட்டையும், அதற்கு மேலே அந்த வாளும் வைக்கப்பட்டிருந்தன. சந்திப்பிலிருந்த வியாபாரம் செய்பவர்களும் மற்றவர்களும் சுற்றிலும் கூடினார்கள். எல்லோரும் இரக்கத்துடன் நான்கு வார்த்தைகளைக் கூறினார்கள்,
Category: சிறுகதைகள் Written by சுரா
கயிறு
எம். முகுந்தன்
தமிழில் : சுரா
ரா
மகிருஷ்ணனின் மேஜையின் மீது தாள்கள் குவிந்து கிடந்தன. அவன் இரண்டு மணிக்கு அந்த தாள்களின் மீது தலையைத் திருப்பினான். நேரம் கடந்து போவதை அவன் அறியவில்லை. ஐந்து மணி தாண்டியதும், அவனுடன் பணியாற்றுபவர்களில் ஒருவனான பவ்லோஸ் கூறினான்:
'ஐந்து மணி தாண்டிருச்சுடா, மகனே!'
ராமகிருஷ்ணன் தன் கடிகாரத்தைப் பார்த்தான். ஐந்து மணி தாண்டி விட்டது என்பதை அவன் தெரிந்து கொண்டான்.
Category: சிறுகதைகள் Written by சுரா
'மிஸ். என்'னின் கதை
(ரஷ்ய கதை)
ஆன்டன் செக்காவ்
தமிழில் : சுரா
ஒ
நல்ல கால நிலையாக இருந்தது. ஆனால், நாங்கள் திரும்பி வந்தபோது வானத்தில் இடிச் சத்தங்கள் கேட்டன. கறுத்து இருண்டு போய் காணப்பட்ட ஒரு மேகம் கோபத்துடன் எங்களை நோக்கி வேகமாக வந்தது. மேகம் எங்களை நெருங்கி...நெருங்கி வந்தது. நாங்கள் மேகத்தை நோக்கி...
Category: சிறுகதைகள் Written by சுரா
தூண்டில்
பி. பத்மராஜன்
தமிழில் : சுரா
மேற்பகுதிக்குச் சற்று கீழே ஒரு பச்சை நிற தவளை, கண்களையும் பின் கால்களையும் உயர்த்தி முன் கைகளை அழுத்தியவாறு மிதந்து கொண்டிருந்தது, இடையில் அவ்வப்போது அது பின் கால்களை துடிக்கச் செய்து, மிதந்து கொண்டிருந்த கட்டையைத் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தது.
மிதந்து கொண்டிருந்த மரத் துண்டில் சுற்றப்பட்டிருந்த கயிறு கீழ் நோக்கி போய்க் கொண்டிருந்தது.