Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

சாயங்கால வெளிச்சம்

சாயங்கால வெளிச்சம்

எம்.டி.வாசுதேவன் நாயர்

தமிழில் : சுரா

தவைத் திறந்தபோது, தாங்கமுடியாத ஒரு வாசனை வெளிப்பட்டது. விரித்துப் போடாமலிருக்கும் ஈரத்துணியின் வாசனை. அங்கு காற்றில் ஈரப்பதம் இருப்பதைப் போல தோன்றியது. சிமெண்ட் பெயர்ந்து சிதிலமாகியிருந்த தரையில், பணியாள் பெட்டிகளையும், தோள் பையையும் அடுக்கி வைத்தான். அந்த இருண்ட சூழலில், அறையின் நடுப்பகுதியில் கண்களைப் பதிய வைத்து நின்றிருந்தான் அவன்.

Last Updated on Wednesday, 18 February 2015 17:45

Hits: 5552

Read more: சாயங்கால வெளிச்சம்

முதல் காதல் கடிதம்

Mudhal Kadhal Kaditham

முதல் காதல் கடிதம்

பாறப்புரத்து

தமிழில் : சுரா

ழு நாட்களுக்குப்பிறகு, இன்றுதான் சூரிய ஒளியே தென்படுகிறது. மேகங்களால் மூடப்பட்டிருந்த வானம் தெளிவான நீல நிறத்திற்கு மாறியிருக்கிறது. ஒரு வாரத்திற்கு முன்பு, வானம் இருண்டு மூடிக்கிடந்தபோது, இந்த அளவுக்குப் பனி விழுமென்று நினைக்கவே இல்லை. இரண்டு நாட்கள் முழுவதும் பிரசவ வேதனை எடுத்து நின்றுகொண்டிருக்கும் கர்ப்பிணியைப்போல, மழைமேகங்கள் நிறைந்திருந்த வானம் மூச்சைப் பிடித்துக்கொண்டு காட்சியளித்தது.

Last Updated on Tuesday, 16 February 2016 14:51

Hits: 6541

Read more: முதல் காதல் கடிதம்

ஒளிவிளக்கு

Olivilakku

ஒளிவிளக்கு

சாராதிந்து பந்தோபாத்யாய்

தமிழில் : சுரா

ன்கு படித்த ஒரு மனிதரின் பெயரை, நினைத்துப் பார்க்கமுடியாத ஒரு செயலுடன் இணைத்துவிட்டால், யாருமே அதை நம்பாமல் இருக்க மாட்டார்கள். ‘இன்றிரவு அடர்த்தியான இருட்டில்­நடந்து போய்க் கொண்டிருந்தபோது நான் ஒரு பேயைப் பார்த்தேன்’ என்று கூறினால், என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே ‘இந்த மனிதன் ஒரு பொய்யனாக இருக்க வேண்டும் அல்லது ஒரு குடிகாரனாக இருக்க வேண்டும்’ என்று சொல்வார்கள்.

Last Updated on Tuesday, 16 February 2016 14:55

Hits: 5775

Read more: ஒளிவிளக்கு

ஒரு முத்தத்தின் ஞாபகம்

ஒரு முத்தத்தின் ஞாபகம்

பாறப்புரத்து

தமிழில் : சுரா

ளம் மஞ்சள் நிறமுடைய சிறிய இலைகளையும், சிவப்பு நிற சிறிய மலர்களையும் கொண்ட அழகான முட்புதரால் மூடப்பட்டுக் கிடந்தது அந்த மண்மேடு. மண்மேடு என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலும், உயிர்பிரிந்த ஒருவன் அங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கிறான் என்பதற்கு ஆதாரமாகக் கூறும் வகையில் என்ன இருக்கிறது? குஞ்ஞுமோள் கூறியிருக்காவிட்டால், அதைப்பற்றி எனக்கு எதுவுமே தெரிந்திருக்காது.

Last Updated on Thursday, 19 February 2015 10:33

Hits: 5601

Read more: ஒரு முத்தத்தின் ஞாபகம்

ஒரு காதல் கதை

Oru Kadhal kathai

ஒரு காதல் கதை

தகழி சிவசங்கரப் பிள்ளை

தமிழில் : சுரா

து ஒரு சாதாரண காதல் கதை. அவளொரு கூலிவேலை பார்ப்பவனின் மகள். அவன் ஒரு பெரிய பணக்காரரின் மகன்.

அவன் படிப்பை முழுமை செய்துவிட்டு, தன் ஊருக்குவந்து சொந்தமாக சில வியாபாரங்களைச் செய்தவற்கு திட்டமிட்டிருக்கிறான். அதன் ஆரம்ப வேலைகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டன. தன் தந்தையின் தோட்டத்தில் சில நாட்கள் ஓய்வெடுப்பதற்கும் சுற்றிப் பார்ப்பதற்கும் வந்தபோதுதான் அவன் அவளை முதல்முறையாகப் பார்த்தான்.

Last Updated on Tuesday, 16 February 2016 14:58

Hits: 7716

Read more: ஒரு காதல் கதை

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version