Lekha Books

A+ A A-
08 Mar

உயிரின் வழி

uyirin vali

ரு மாலை நேரத்தில்தான் முருங்கை மரம் சாய்ந்து கீழே விழுந்தது. அப்போது காற்றோ மழையோ எதுவும் இல்லை. நான் தைலத்தைத் தேய்த்தவாறு குளியலறையில் நின்றுகொண்டிருந்தேன். அப்போதுதான் "டே'' என்ற அந்த சத்தம் கேட்டது. முதலில் அந்த ஒரு சத்தம் மட்டும்தான் கேட்டது. பிறகு மழைக்காலத்தின் ஆரம்பத்தில் லேசாக இடி இடிப்பதைப்போல இரண்டு மூன்று முறை "டே, டே'' என்று கேட்டது. முதலில் எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால், பிறகு சிரமப்பட்டு வெளியே வந்து பார்த்தபோதுதான் எனக்கே தெரிந்தது- என் முருங்கை மரம் சாய்ந்து கீழே விழுந்திருக்கிறது!

Read more: உயிரின் வழி

08 Mar

'இதா இவிடெ வரெ' விளம்பர வண்டி புறப்படுகிறது

'itha ividae varae' vilambara vandi purappadugirathu

தை இதோ தொடங்குகிறது. ஒரேயொரு பிரச்சினை. அதை இப்போதே கூறிவிடுகிறேன். இது உண்மையில் நடந்த ஒரு சம்பவம். இதற்கு இலக்கியரீதியாக வர்ணனைகளைக் கொண்டு வரமுடியுமா என்பது பற்றிச் சிந்திக்க வேண்டி இருக்கிறது. உண்மைச் சம்பவங்களை விவரிக்கிறபோது நாடகத்தனமான அம்சங்களும், நடையும் சற்று குறைந்த அளவிலேயே இருக்கும். இருந்தாலும், இவை இரண்டுமே இல்லாமல் எப்படி ஒரு விஷயம் இலக்கியம் ஆகமுடியும்?

Read more: 'இதா இவிடெ வரெ' விளம்பர வண்டி புறப்படுகிறது

08 Mar

தம்பி

thambi

முன்பு எப்போதோ நடந்தது. என்னுடைய தம்பி அப்துல் காதர் என்னைவிட ஒரு வயது இளையவன். அப்துல் காதருக்கு வலது காலில் ஒரு ஊனம் உண்டு. அதன் மூலம் பரிதாபம் முழுவதும் அவன் மீதுதான்.

அவனையும் என்னையும் ஒன்றாக ஒரே நேரத்தில் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள். அப்போது அது முஹம்மதியர்களின் பள்ளிக்கூடமாக இருந்தது. உம்பி அண்ணன் என்ற புகழ் பெற்ற ஒரு பக்தர் அந்தப் பள்ளிக்கூடத்தைக் கட்டியிருந்தார்.

Read more: தம்பி

08 Mar

பிறந்த நாள்

pirantha naal

னவரி 19-ஆம் தேதி. இன்று எனது பிறந்தநாள். என்றைக்கும் இல்லாதது மாதிரி இன்று அதிகாலை நேரத்திலேயே படுக்கையை விட்டு எழுந்து காலைக்கடன்களை முடித்தேன். இன்றைக்கு அணிய வேண்டும் என்று எடுத்து வைத்திருந்த வெள்ளை நிற கதர் சட்டையையும், வெள்ளை நிற கதர் வேஷ்டியையும் வெள்ளை நிற கேன்வாஸ் ஷூவையும் அணிந்து அறையில் என்னுடைய சாய்வு நாற்காலியில் வெந்து போன இதயத்துடன் நான் மல்லாக்க சாய்ந்திருந்தேன்.

Read more: பிறந்த நாள்

08 Mar

பைத்தியம்

pythiyam

ருணாவிற்கு பைத்தியம் பிடிக்கத் தொடங்கியிருக்கிறது என்று பலரிடமிருந்தும் கேட்க நேர்ந்த பிறகுதான் நான் அந்தத் தகவலையே நம்பத் தயாரானேன். டில்லியிலிருந்து வந்த மறுநாளே நான் அவளுடைய வீட்டிற்குச் சென்றேன்.

அவளுடைய அழகான நேப்பாளி வேலைக்காரிதான் கதவைத் திறந்தாள். அவள் வெற்றிலைக் கறை படிந்த பற்களை வெளியே காட்டியவாறு சிரித்தாள்.

"உன் எஜமானியம்மா எங்கே?'' நான் கேட்டேன்.

Read more: பைத்தியம்

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel