Lekha Books

A+ A A-
09 Mar

விடைபெறும் துபாய்காரன்

vidaiperum dubaikaran

ண்ணெய் சாயத்தால் ஆன ஓவியங்களுக்குப் பின்னால் தேள்களும் எட்டுக்கால் பூச்சிகளும் ஒளிந்திருந்தன. மூன்று வருடங்களுக்குப் பிறகு தன் சொந்த வீட்டிற்கு வந்திருக்கிறாள் அம்மிணி. படுக்கைமீது முஷ்டியால் அடித்தபோது தூசிப்படலம் உயர்ந்தது. எலியை ஞாபகப்படுத்தும் ஒரு நாற்றம் அறையில் தங்கி நின்றது. "இரவில் என்னால் இங்கு படுக்க முடியாது.''

Read more: விடைபெறும் துபாய்காரன்

09 Mar

வெளுத்த குழந்தை

velutha kulanthai

ச்சிப் பொழுது. கோடை வெயில் பயங்கரமாகத் தகித்துக் கொண்டிருந்தது. பூமியிலிருந்து நெருப்பு ஜூவாலைகள் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றவோ என்பது மாதிரி இருந்தது. அந்த மணல் மீது கால் வைத்தால் நெய்யப்பம்போல கால்கள் வெந்துவிடும். ஒரு மனிதனால்கூட அந்தச் சமயத்தில் அதில் நடக்க முடியாது. எனினும், குஞ்ஞிமோன் நடந்தான். குழந்தைகளை அடையும்போது வெயில் குளிர்ந்துவிடும் அல்லவா? ஆனால், எவ்வளவு நேரம் வெயில் அப்படி குளிர்ச்சியாக இருக்க முடியும்? குஞ்ஞிமோன் அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தான்.

Read more: வெளுத்த குழந்தை

09 Mar

வெள்ளப்பெருக்கு

vellaperukku

கிராமத்திலேயே சற்று மேடான இடம் கோவில் இருக்கும் இடம்தான். அங்கு கழுத்து வரை இருக்கும் நீருக்குள் கடவுள் நின்றிருந்தார். வெள்ளம்! கடவுளைச் சுற்றிலும் எங்கு பார்த்தாலும் நீர் மயம்! ஊரில் இருந்த ஒவ்வொருவரும் கரையைத் தேடிப் போய்விட்டார்கள். வீட்டுக் காவலுக்கு என்று ஒரு ஆளை வைத்துவிட்டுப் போய்விட்டார்கள். வீட்டில் படகு இருக்கிறதா என்றால் இருக்கிறது. கோவிலைச் சேர்ந்த மூன்று அறைகள் கொண்ட கட்டடத்தில் 67 குழந்தைகள் இருந்தார்கள். 356 ஆட்கள் இருந்தார்கள். நாய், பூனை, ஆடு, கோழி போன்ற வளர்ப்புப் பிராணிகளும்தான். எல்லாம் ஒற்றுமையாக இருந்தன. ஒரு சிறு சண்டைகூட இல்லை.

Read more: வெள்ளப்பெருக்கு

09 Mar

வரப்போகும் மாப்பிள்ளை

varapogum mapillai

மிகப் பெரிய பணக்காரனாக இருக்க வேண்டும்; மிகுந்த அழகு படைத்தவனாக இருக்க வேண்டும்; நிறைய அதிகாரங்கள் படைத்தவனாக இருக்க வேண்டும். இந்தத் தகுதிகள் தனக்கு வரப்போகும் மாப்பிள்ளையிடம் இருக்க வேண்டும் என்பது சரோஜினியின் விருப்பமாக இருந்தது. திருமணத்தைப் பற்றி கேள்விப்பட்ட நாளிலிருந்து- அதைப் பற்றி நினைக்கத் தொடங்கிய நாளிலிருந்து அவள் தன்னுடைய எதிர்கால கணவனைப் பற்றி கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்தாள்.

Read more: வரப்போகும் மாப்பிள்ளை

09 Mar

வளையல் அணிந்த கை

valayal anintha kai

“வளையல் அணிந்த கைகளைப் பார்த்தாலே என்னையும் அறியாமல் நான் சிரிச்சிடுவேன்'' என்று கூறிச் சிரித்தவாறு அந்த திருமணமாகாத நண்பர் தொடர்ந்தார்: “என் மனசு வெளுப்பான நீண்ட விரல்களை உடைய ஒரு வளையல் அணிஞ்ச கையையே நினைச்சுக்கிட்டு இருக்கு. அதை நினைக்கிறப்போ மனசுல இனம் புரியாத ஒரு உணர்வு உண்டாகுது. பாயில் படுத்துத் தூங்குறப்போ கூட அதை நினைச்சா சிரிப்புத்தான் வருது.

Read more: வளையல் அணிந்த கை

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel