Lekha Books

A+ A A-
09 Mar

பாதச்சுவடு

pathasuvadu

"பாதச் சுவடு” என்ற இந்தக் கதை, ஒரு அரசியல்வாதி சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இரவு நேரத்தில் ஒரு இலக்கியவாதியின் அறைக்குள் நுழைந்து அவரிடம் நேரில் சொன்ன ஒன்று.

இந்தக் கதையைக் கேட்ட இலக்கியவாதி சில நிமிடங்களுக்கு என்ன பேசுவதென்றே தெரியாமல் சிலை என அப்படியே நின்றுவிட்டார். இதை அந்த இலக்கியவாதியே என்னிடம் ஒருநாள் சொன்னார்.

நான் இப்போது அந்தப் பழைய கதையை நினைத்துப் பார்ப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது என்ன காரணம் என்பதைப் பின்னால் சொல்கிறேன்.

Read more: பாதச்சுவடு

09 Mar

பரீதின் ஆவி

parethin aavi

நான் எப்போதாவது ஒரு ஆவியை நேரில் பார்த்திருக்கிறேனா என்று நீங்கள் கேட்கிறீர்கள். நான் பார்த்திருக்கிறேன்- ஒரு முறை மட்டும். மறக்க முடியாத ஒரு காட்சியாக இருந்தது அது. நான் அந்தக் கதையைக் கூறுகிறேன்.

நடுப்பகல் நேரத்தில் தனியாகப் போகும்போது நீங்கள் அந்தப் பக்கம் கொஞ்சம் பார்த்தால் போதும்; அதிர்ச்சியடைந்து விடுவீர்கள். உங்களுடைய கண்களை சிறிது நேரம் பிடித்து நிறுத்தக் கூடிய பிசாசுத்தனமான ஒரு வசீகர சக்தி அங்கே இருக்கிறது என்று தோன்றுகிறது.

Read more: பரீதின் ஆவி

09 Mar

பணத்தை விட மதிப்புள்ளவன் மனிதன்

panathai vida mathippulavan manithan

டாக்டர் பதைபதைத்துப் போனார். பலவிதப்பட்ட நோய்களையும், எத்தனையோ வகையான மரணங்களையும் பார்த்துப் பழகிப் போன அந்த மனிதர், தன்னுடைய மனைவி இரத்த வாந்தி எடுத்தாள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் ஒரு மாதிரி ஆகிவிட்டார். தோல் பையைக் கையில் எடுத்துக்கொண்டு அவர் காரில் ஏறினார்.

நோயாளிகள் பரிதாபமாக அவரைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள். சிலருக்கு ஊசி போட வேண்டும். சிலருக்கு மருந்து எழுதித் தரப்பட வேண்டும். சிலருக்கு நோய்களைப் பற்றி டாக்டர் கூற வேண்டும்.

Read more: பணத்தை விட மதிப்புள்ளவன் மனிதன்

09 Mar

பாம்பும் கண்ணாடியும்

pampum kanadium

“உங்க யாரோட உடம்புலயாவது பாம்பு சுத்தியிருக்கா? ஸ்டைலான ஒரு நல்ல பாம்பு?''

எல்லாரும் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். இந்தக் கேள்வியைக் கேட்டது ஒரு டாக்டர். ஹோமியோபதி டாக்டர் அவர். பாம்புகளைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, இந்தக் கேள்வி வந்தது. நாங்கள் ஆர்வத்துடன் அவரையே பார்த்தோம்.

டாக்டர் தொடர்ந்து சொன்னார்: “பாம்பும் கண்ணாடியும்- இதுதான் சம்பவம்.

Read more: பாம்பும் கண்ணாடியும்

09 Mar

படகோட்டி

padakotti

தேங்காய்களை எடை போட்டு கணக்கு முடித்து பணம் கையில் கிடைத்தபோது தெரு விளக்குகள் எரியத் துவங்கி விட்டிருந்தன. “சரி... நாம போகலாம்'' என்று படகோட்டியிடம் கூறிய முதலாளி படகின் நடுப்படியில் ஏறினான்: “உன் விளக்கை இங்கே கொஞ்சம் எடு.''

கார்ளோஸ் தகர விளக்கை எரிய வைத்து ஜானியிடம் நீட்டினான். அவன் அதை வாங்கி அருகில் வைத்துவிட்டு நோட்டுகளை மீண்டும் எண்ணி தாளில் சுற்றி மடிக்குள் பத்திரமாக வைத்தான். பிறகு லாப- நஷ்டங்களை மனதிற்குள் கணக்கு போட்டுப் பார்க்க ஆரம்பித்தான்.

Read more: படகோட்டி

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

பார்

பார்

February 15, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel