Lekha Books

A+ A A-
09 Mar

போர் முடியவேண்டுமென்றால்...!

por mudiyavendumendral

“போர் முடிய வேண்டுமென்றால்..!'' பற்களை இறுக்கமாகக் கடித்துக் கொண்டு, உதடுகளின் இடது ஓரத்தைத் திறந்து, அதன் வழியாக "ஸ்’’ என்ற சத்தத்தை உண்டாக்கி, ஆனந்தத்துடன் வறட்டுச் சொறி சொறிந்து கொண்டு, சாய்வு நாற்காலியில் மல்லாந்து படுத்துக் கிடக்கும் ஆழமான சிந்தனையாளரும், நல்ல பலசாலியும், மிகுந்த கோபம் கொண்டவருமான அந்த புகழ்பெற்ற இலக்கியவாதி, தன்னைப் பார்ப்பதற்காக வந்திருந்த பத்திரிகையாளரான இளைஞனின் கேள்விக்கு பதில் என்பதைப் போல கேட்டார்:

Read more: போர் முடியவேண்டுமென்றால்...!

09 Mar

பூவன் பழம்

poovin palam

"பூவன் பழம்” என்ற இந்தக் கதையை நான் மனப்பூர்வமாக முன்வந்து எழுதவில்லை. அப்துல்காதர் சாஹிப்பின் தொடர்ச்சியான தொந்தரவினால்தான் இந்தக் கதையையே நான் எழுதுகிறேன். "இதில் ஒரு பாடம் இருக்கிறது” என்று கூறுகிறான் அவன். அவன் மனைவி ஜமீலா பீபியைப் பற்றிய கதையே இது.

Read more: பூவன் பழம்

09 Mar

போலீஸ்காரனின் மகன்

policekaranin magan

ள்ளிரவு தாண்டி விட்டிருந்தது. போலீஸ் லாக்-அப்பில் இருந்தவர்கள் எல்லாரும் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள். அந்த நேரத்தில் "அய்யோ!” என்ற பயங்கரமான அழுகைச் சத்தம் கேட்டது. மனித இதயங்களை நடுங்கச் செய்த அந்தக் குரல் காவல் நிலையத்தின் சுவர்களை நடுங்கச் செய்தது. பயத்தில் அதிர்ச்சியடைந்து கண்விழித்த கைதிகள் பொந்துக்குள் இருக்கும் பூச்சிகளைப்போல லாக்-அப்களின் கதவுகள் வழியாக வெளியே எட்டிப் பார்த்தார்கள். பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த மின் விளக்கிற்குக் கீழே இருந்த மேஜைக்கு முன்னால் அமர்ந்திருந்த ஹெட் கான்ஸ்டபிளும் முன்னால் நின்றிருந்த போலீஸ்காரரும் திண்ணையில் கிடந்த இளைஞனிடம் கட்டளையிட்டார்கள்!

Read more: போலீஸ்காரனின் மகன்

09 Mar

பேருந்து பயணம்

perunthu payanam

றுவடை முடிந்து தரிசாகக் கிடந்த வயல்களுக்கு நடுவிலிருந்து வரப்பின் வழியாக அவருடன் வேகமாக நடந்து கொண்டிருந்தார்கள். கோட்டை மடித்து தோளில் இட்டுக்கொண்டு, மேற்துண்டைக் கொண்டு தலையில் ஒரு கட்டு கட்டிக்கொண்டு, அரை வயதுகூட ஆகாத குழந்தையை மார்புடன் சேர்த்து வைத்துக்கொண்டு திரு. பத்மநாபன் வேகமாக நடந்தார். அவர் இடையில் அவ்வப்போது திரும்பிப் பார்த்தார்.

Read more: பேருந்து பயணம்

09 Mar

பத்து தலைவர்கள் வரவேண்டும்

pathu thalaivargal varavendum

பெரும் மதிப்பிற்குரிய தலைவரே,

ஸலாம். என்னுடைய உடல்நிலை மிகவும் நன்றாக இருக்கிறது. தாங்கள் திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த நலிந்து நாறிப்போயிருக்கும் சமுதாய அமைப்பில் தங்களுக்கு ஒரு மனைவி தேவைதானா? எது எப்படியோ- தங்களின் பெயரையே சதா நேரமும் உச்சரித்துக் கொண்டிருக் கும் இங்கேயுள்ள தொழிலாளிகள் தாங்கள் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டப் போகிறீர்கள் என்பதை அறிந்து ஆனந்த வெள்ளத்தில் மூழ்கித் திளைத்திருக்கிறார்கள்.

Read more: பத்து தலைவர்கள் வரவேண்டும்

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel