Lekha Books

A+ A A-
07 Mar

ஒரு பெண் எழுத்தாளர் கடத்தப்படுகிறாள்

oru pen eluthalar kadathapadukiral

ழகான தோற்றத்தையும், நீலக்கண்களையும், மென்மையான கால்களையும் கொண்ட ஒரு எட்டுக் கால் பூச்சி, வலையிலிருந்து ஊஞ்சலில் தொங்குவது மாதிரி தொங்கிக் கொண்டே கீழே வந்து தன் முகத்திற்கு முன்னால் நின்று தன்னை நோக்கிச் சிரிப்பதையும், பிரகாசமான கண்களுடன் தன்னைப் பார்ப்பதையும், பஞ்சுபோன்ற கால்களால் நடனமாடுவதையும் அந்தப் பெண் எழுத்தாளர் தன் கனவில் கண்டாள்.

Read more: ஒரு பெண் எழுத்தாளர் கடத்தப்படுகிறாள்

07 Mar

ஒரு ஒவியத்தின் கதை

oru oviyathin kathai

"தந்தை மகளின் கழுத்தில் கத்தி வைப்பதும், குருதி பெருக்கெடுத்து வழிவதும்..." என்ற வரிதான் கவரை உடைத்து கடிதத்தை எடுத்தவுடன் கண்ணில்பட்டது. அப்போது அந்தக் கடிதம் ஆயிரம் மைல்களுக்கும் அப்பால் இருக்கிற ஒரு இடத்திலிருந்து ஓவியரான என் நண்பர் அனுப்பியிருக்கும் கடிதம் என்று நினைக்கவில்லை. அடியில் எழுதப்பட்டிருந்த பெயரைப் பார்த்த பிறகுதான் நண்பர் எழுதிய கடிதம் என்பதே தெரியவந்தது.

Read more: ஒரு ஒவியத்தின் கதை

07 Mar

ஒரு நல்ல பாம்பு

oru nalla pambu

டத்தை விரித்து சீறிக்கொண்டு ஆடுகிற ஒரு பயங்கரமான நல்ல பாம்பு. அவனைப் பார்த்தாலே பயமாக இருக்கும். பொதுவாக எந்தப் பாம்பைப் பார்த்தாலும், பயப்படுவது நல்லது. இரவு நேரங்களில் எரிகிற பந்தங்களுடன் கிராமவாசிகள் நடந்து போவார்கள். அவர்கள் கையில் ஒரு கொம்பு வேறு இருக்கும். இப்படி அவர்கள் நடந்து போவதைப் பற்றிக் கேட்டால், நகரத்தில் உள்ளவர்கள் சிரிப்பார்கள்.

Read more: ஒரு நல்ல பாம்பு

06 Mar

முதல் கதை

muthal kathai

ரு வீழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறது- ஒரு சைக்கிள் விபத்து.

அப்போது நான் ஒரு விளையாட்டுப் பொருட்களின் ஏஜென்டாக இருந்தேன். கம்பெனி சியால்கோட்டில் இருந்தது. ஒன்பது பத்து வருடங்கள் இந்தியா முழுக்கப் பயணம் செய்து முடித்துவிட்டு வந்திருந்தேன். பயணம் அகில இந்தியாவில் மட்டுமல்ல. கப்பலில் ஒரு கலாஸியாக அரேபியாவில் இருக்கும் ஜித்தா வரை சென்றேன். விளையாட்டுப் பொருட்களின் ஏஜென்டாக எர்ணாகுளத்திற்கு வந்திருந்தேன். ஒரு ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். அன்று நான் ஒரு நாகரீக மனிதனாக இருந்தேன். சுருள் முடி, தொப்பி, டை, கோட்டு, ட்ரவுசர், சாக்ஸ், ஷூ.

Read more: முதல் கதை

02 Mar

ஊனக்கால் பெண்

oonakkal pen

நீண்டு நிமிர்ந்து, மார்பை முன்னோக்கித் தள்ளிக் கொண்டு, "நான் இனிமேலும் அடிப்பேன்" என்பதைப் போல நடந்து கொண்டிருக்கும் ஆணுக்குப் பின்னால், "ஓ... அதற்கு நான் எதுவும் சொல்லலையே!’’ என்பதைப் போல, அவனுடன் சேர்ந்து நடக்க படாதபாடு படும் ஊனமுற்ற காலைக் கொண்ட பெண்ணைப் பார்த்து பூங்காவில் அமர்ந் திருந்தவர்கள் அனைவரும் சிரித்தார்கள்.

Read more: ஊனக்கால் பெண்

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

மமதா

மமதா

May 23, 2012

நான்

நான்

February 17, 2015

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel