Lekha Books

A+ A A-

என் பம்பாய் நண்பர்கள்

En Bombai Nanpargal

ன் வாழ்க்கையில் ஞாபகத்தில் நிற்கும் சில வருடங்களை நான் பம்பாய் நகரத்தில் செலவிட்டேன். வாழ்க்கையில் சுவாரசியங்களும் விஷத் தன்மைகளும் நிறைந்த பல பக்கங்களைப் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் அனுபவிக்கவும் என்னைத் தூண்டிய அந்தப் பெரிய நகரத்தில் எனக்கு நிறைய நண்பர்களும் உண்டு. பல நேரங்களில் தூரத்தில் இருக்கும் அந்த தனித்துவ குணம் கொண்ட நண்பர்களைப் பற்றி நான் நினைத்துப் பார்ப்பதுண்டு.

பம்பாய்க்குப் போகும்போதெல்லாம் அவர்கள் அனைவரையும் போய் பார்ப்பதை நான் ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறேன். அவர்களுக்கு என்னைப் பார்க்க முடியாத ஒரு கவலை இருக்கவே செய்கிறது.

கடந்த முறை நான் பம்பாய்க்குச் சென்றிருந்த போது அவர்களில் பலரையும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடைய வேண்டியதிருந்தது. அவர்கள் எங்கு போனார்கள்? பம்பாயை விட்டுப் போய் விட்டார்களா? அல்லது வாழ்க்கை என்ற நதி இறுதியில் பாய்ந்து விழும் கண்ணுக்குத் தெரியாத அந்தப் பள்ளத்திற்குள் அவர்களும் மறைந்து போய் விட்டார்களா? என்னவோ? எதுவாக இருந்தாலும், அந்த நண்பர்கள் இப்போதும் என்னுடைய மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மாலை நேரத்தின் மர நிழல்களைப்போல, என்னுடைய இலக்கிய படைப்புக்களில் அவர்கள் அமைதியாக நடந்து வந்து கொண்டிருப்பதை விலக் கவோ அழிக்கவோ என்னால் முடியவில்லை. அவர்களில் ஒவ்வொரு ஆளின் தோற்றமும் நடத்தையும் ஆடைகள் அணிவதும் சிறப்பு குணமும் குறும்பத்தனங்களும் சேர்ந்த வினோத உருவங்கள் என்னுடைய இதயச் சுவரில் தொங்கிக் கொண்டிருப்பதை அகற்றி வைக்க என்னால் முடியவில்லை. அவர்களுக்கு மட்டுமே சொந்தமான பாட்டுகளும் முழக்கங்களும் கூப்பாடுகளும் என் இதயமெனும் தட்டெழுத்து இயந்திரத்தில் இப்போதும் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த நண்பர்களில் பலரின் பெயர்கள் எனக்குத் தெரியாது. நான் அவர்களுக்கு என் மனதில் தோன்றியபடி ஒவ்வொரு புதிய பெயரையும் கற்பனை பண்ணி வைத்திருக்கிறேன். அது மட்டுமல்ல- நான் அவர்களுடைய அமைதியான ரசிகன் என்று அவர்களுக்கு இதுவரை தெரியாது. அதுதான் எங்களுக்கிடையே இருக்கும் உறவின் இன்னொரு விசேஷம்.

அவர்களில் நான்கைந்து பேரைப் பற்றி நான் இங்கு கூறப் போகிறேன்.

ரோமியோவும் ஜுலியட்டும்

காதலின்- ஆணுக்குப் பெண்ணிடமோ பெண்ணுக்கு ஆணிடமோ இரண்டும் சேர்ந்தோ உண்டாகிறது என்று கூறப்படும் அந்த மனரீதியான நிலைமையின் சிறப்பையும் பாதிப்புகளையும் பற்றி நான் எவ்வளவோ படித்திருக்கிறேன். காதலைப் பற்றி எவ்வளவோ சிறுகதைகளையும் நான் எழுதியிருக்கிறேன். ஆனால், அந்த ஆண்- பெண் காதல் என்பது, உணர்ச்சியின் ரசாயன செயல்பாட்டால் விஷக்கறை அழிந்த சுயநலம் மட்டுமே என்று தனிப்பட்ட முறையில் நம்பிக் கொண்டிருந்தவன் நான். என் நம்பிக்கையை முதலில் கேலி செய்தது "ரோமியோ- ஜூலியட்” ஆகியோரின் காதல் உறவுதான். எட்டு வருடங்களுக்கு முன்பு நடந்த கதை அது.

பம்பாயில், க்வின்ஸ் சாலைக்கு அருகில் உள்ள, அரண்மனை யைப் போன்ற ஒரு அலுவலகத்தில் நான் வேலை பார்த்தேன். மதிய நேர உணவு முடிந்து, நான் ஓய்வு அறையில் இருக்கும் சோஃபாவில் சாய்ந்து படுத்திருப்பேன். அலுவலகக் கட்டிடத் திற்குப் பின்னால் திறந்து கிடக்கும் ஒரு சிறிய மைதானம் இருந்தது. அதன் எல்லையில் இரண்டு மூன்று பூ மரங்கள் நின்றிருந்தன. சோஃபாவில் சாய்ந்து, சிகரெட் புகைத்தவாறு நான் முன்னால் இருந்த பெரிய சாளரத்தின் வழியாக மைதானத்தைப் பார்த்தவாறு படுத்திருப்பேன். காலப்போக்கில் அந்தப் பூ மரங்களில் ஒன்றிற்குக் கீழே எப்போதும் இருக்கும் இரண்டு உருவங்கள் என்னுடைய கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தன.

ஒன்று மிகவும் உயரமாக இருக்கும் ஆண்- மிகவும் அழுக்கடைந்து போயிருக்கும் ஒரு அவலட்சணமான உருவம். பம்பாய் தெருக்களில் குப்பைத் தொட்டிகளில் இருந்து பொறுக்கி எடுத்த எல்லாவிதமான துணித் துண்டுகளும் அவனுடைய உடலில் தொங்கிக் கொண்டிருந்தன. தாடி ரோமங்கள் வளர்ந்து மூடிய நீளமான முகம். ஏதோ மாலுமி வீசி எறிந்துவிட்டுப் போன பெரிய ஒரு நீலநிறத் தொப்பியை அவன் தலையில் வைத்திருந்தான். கப்பல் விபத்தில் சிக்கி, ஆள் அரவமற்ற ஏதோ ஒரு தீவில் ஆறு வருடங்கள் அலைந்து திரிந்து வரும் ஒரு கறுப்பு இன கப்பல் ஊழியனோ என்று திடீரென்று அவனைப் பார்த்தால் தோன்றும்.

இன்னொரு உருவம்- பெண். அழகியாக இல்லையென் றாலும், அவலட்சணமானவள் அல்ல. கறுத்து மெலிந்த குள்ள சரீரம். கொழுத்து, திரண்டு, அசாதாரணமாகத் தோற்றமளிக்கும் மார்பகங்கள். மணிக்கட்டிலிருந்து முழங்கை வரை ஒரே மாதிரி பச்சை குத்திய கைகளில் ஐந்தாறு கண்ணாடி வளையல்களும், கழுத்தில் கறுப்பு நிறத்தில் கல் மாலையும் அணிந்து, சிறிய ரவிக்கையும் சிவப்பு நிறத்தில் கிழிந்த புடவையும் அணிந்து, அழகாகப் புன்னகைக்கும் ஒரு இளம் வயதுப் பிச்சைக்காரி.

அந்த உயரமான மனிதன் ஒரு கண் பார்வை இல்லாதவன். சில நேரங்களில் அவன் சில மிருகங்களின் குரல்களை எழுப்புவான். அவனுடைய செயல்களைப் பார்க்கும்போது ஒரு பைத்தியக்காரனாக இருப்பானோ என்று தோன்றும். ஆனால், அந்த இளம் பெண் கைகளால் இடும் கட்டளையைக் கேட்டவுடன் அந்த அரக்கன் ஒடுங்கிப் போய் விடுவதை நாம் பார்க்கலாம்.

பெரும்பாலும் அவர்களுடைய நடத்தை காதலன்- காதலி நடந்து கொள்வதைப் போலவே இருக்கும்.

நான் அவர்களுக்கு "ரோமியோவும் ஜுலியட்டும்” என்று பெயர் வைத்தேன். ஜுலியட் வெளியிலிருந்து உணவைப் பிச்சை எடுத்துக் கொண்டு வருவாள். அவர்களுடைய மதிய உணவும் ஒரு மணிக்குத்தான். பூ மரத்தின் கிளையில் ஒரு பெரிய மூட்டை தொங்கிக் கொண்டிருந்தது. அவர்களுடைய விரிப்பும் பாத்திரங்களும் சில கருவிகளும் அந்தத் துணி மூட்டையில் இருந்தன. அவள் மரத்தில் ஏறி, துணி மூட்டையில் இருந்து ஒரு பழைய தட்டையும் குவளையையும் வெளியே எடுத்து, கீழே இறங்குவாள். கொண்டு வந்த எச்சில் சாப்பாட்டை அதில் கொட்டி, பிறகு இருவரும் சாப்பிட உட்காருவார்கள்.

அந்தப் பார்வை தெரியாத மனிதன் அவசர அவசரமாக வாரி விழுங்குவான். உணவு கையில் கிடைத்தவுடன், அவனுக்குத் தன் சினேகிதியைப் பற்றிய நினைவே முழுமையாக இல்லாமல் போய்விடும். எனினும், அவனுக்குப் போதும் என்று தோன்றும் அளவிற்கு சாப்பிடுவதற்கு அவள் கொண்டு வந்திருப்பாள். அந்த எச்சில் சாப்பாட்டின் எச்சிலை அவளும் சாப்பிடுவாள்.

சாப்பிட்டு முடித்து இருவரும் ஓய்வெடுப்பதைப் பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். ரோமியோ ஜுலியட்டின் மடியில் தலையை வைத்துப் படுத்திருப்பான். அவள் அவனுடைய அழுக்கடைந்த தலையில் பேன் எடுத்து அவற்றைக் கொன்று கொண்டிருப்பாள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

பயணம்

பயணம்

September 24, 2012

உப்புமா

உப்புமா

February 23, 2012

தம்பி

தம்பி

March 8, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel