Lekha Books

A+ A A-

நீலவானமும் சில நட்சத்திரங்களும்

neela vaanamum sila natchathirangalum

ஜெயில் சூப்பிரெண்டு பிள்ளை தன் முன் மேஜையின் மேல் வைக்கப்பட்டிருந்த அந்தக் கடிதத்தையே வைத்தகண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தார். அதிலிருந்து ஏதோ விஷக்காற்று தன்னை நோக்கி வீசுவது போலிருந்தது அவருக்கு. நெடுநேரம் அதையே பார்த்துக் கொண்டிருக்கவும் அவரால் முடியவில்லை. தலையைச் சற்று உயர்த்திப் பார்த்தார். அப்போதுதான் அவருடைய கண்கள் அங்கு வந்து நின்று கொண்டிருந்த ஜெயிலர் தாமஸை சந்தித்தன. கருத்துப்போய் அச்சம் தரக்கூடிய வகையான கோலத்துடன் நின்று கொண்டிருந்த தாமஸை நோக்கிக் கேட்டார் பிள்ளை.

“அவனை உள்ளே அடைச்சாச்சி, இல்லையா?”

“ஆமாம் ஸார்.”

மீண்டும் தன்முன் இருந்த அந்தக் காகிகத் துண்டைப் பார்த்துக் கொண்டார் பிள்ளை. “பதினெட்டாம் தேதி அதிகாலை அஞ்சரை மணிக்கு முன்னாடியே...” ஒரு நிமிடம் என்ன காரணத்தாலோ தான் கூற வந்ததைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்ட பிள்ளை தாமஸிடம் கேட்டார்.

“தாமஸ், இந்த ஜெயில்ல இதுக்கு முன்னாடி யாரையாவது தூக்குல போட்டிருக்கா?”

“நெறைய போட்டிருக்கு.”

“நான் அதைக் கேட்கல. இப்போ சமீபத்துல போட்டிருக்கான்னு கேக்குறேன்...”

“சமீபத்துல இல்ல... ரெண்டு வருஷத்துக்கப்புறம் இதுதான்...”

“ம்...”- காகிதத்தை எடுத்து மடித்து பைக்குள் வைத்தவாறே கேட்டார் பிள்ளை, “ஆமா... இன்னைக்கு என்ன, தேதி?”

“பத்து”

“இன்னும் எட்டே எட்டு நாட்கள்தான் இருக்கு. இல்லியா? ம்... தாமஸ், நீ யாரையாவது தூக்குல போட்டிருக்கியா?”

“போட்டிருக்கேன் சார்.”

ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டார் பிள்ளை. ம்... இங்கு கயிறு இருக்கு இல்லியா?”

“இருக்கு சார்...” - அவனுடைய குரலில் ஒரு தயக்கம்.

“என்ன விஷயம் தாமஸ்?”

“ஒண்ணுமில்லை சார்... கயிறு கொஞ்சம் பழசாப் போயிருக்கு.”

“எங்கே பார்க்கலாம்...” எழுந்து முன்னே நடந்தார் பிள்ளை. தாமஸ் பிள்ளையின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடந்தான். சாமான்கள் அ¬த்து வைக்கப்பட்டிருந்த அறையை அடைந்ததும் தாமஸ் அங்கிருந்த ஒருவனை அழைத்து அவ்வறையின் சாவியை வாங்கிக் கதவைத் திறந்தான். இருளடைந்து போய்க் காணப்பட்ட அந்த அறையினுள்ளிருந்து கெட்ட ஒரு நாற்றம் வெளி வந்தது. உள்ளே நுழைந்த தாமஸ் முறுக்கேறிப் போயிருந்த ஒரு கயிற்றுச் சுருளுடன் மூச்சை அடக்கிக் கொண்டே வெளியே வந்தான். சுருண்டு போயிருந்த அந்தத் தூக்குக் கயிற்றை நோக்கிய பிள்ளையின் கைகள் அவரையும் மீறி அவருடைய கழுத்துப் பகுதியைத் தடவிப் பார்த்துக் கொண்டன.

“இந்தக் கயிறு எத்தனை வருஷமா புழக்கத்துல இருக்கு?”

“அஞ்சு வருஷமா...” இதைக் கூறிய தாமஸ் என்ன காரணத்தாலோ மெல்ல சிரித்துக் கொண்டான். அவன் அவ்வாறு சிரித்தது ஏன் என்று பிள்ளைக்குப் பிடிபடவேயில்லை.

“இது எங்க தாங்கப்போகுது? தூக்குல போடும்போது அறுந்து போயிடும் போலிருக்கே! எங்கே... ஒரு தடவை டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டா பரவாயில்லை.”

“நீங்க சொல்றதுதான் சரி...”

“அப்படின்னா தாமஸ், நீ போயி அதுக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய். எல்லாம் உனக்குத் தெரியுமில்ல?”

“தெரியும் ஸார்! இது தெரியாமலா?”

தாமஸ் புறப்படத் தயாராக நின்றபோது பிள்ளை கூறினார். கல்லுக்கு அவனோட எடையை விட ஒன்றரை மடங்கு அதிகமா எடை இருக்கணும். அப்படின்னாத்தான், எவ்வளவு எடை இருந்தா கயிறு தாங்கிக் கொள்ளும்னு தெரிஞ்சுக்க முடியும். அவனோட எடை எவ்வளவுன்னு தெரியும்லே...?”

“தெரியும் ஸார். நூத்தி அஞ்சு ராத்தல்...”

“வெறும் நூத்தி அஞ்சு ராத்தலா? ஒரு கொலைகாரனோட எடையா இது? உயரம்...?”

“அஞ்சடி அஞ்சு அங்குலம்...”

“இருபத்து மூணு வயசு... இந்த இளம் வயசுல இவன் கொலை செஞ்சிருக்கான்...”

“பாவம் சின்னப் பையன் ஸார். ஆளப் பார்த்தா இவனா கொலை செஞ்சான்னு சொல்லத் தோணும்...”

பிள்ளை அதற்குப் பதிலொன்றும் கூறவில்லை. வளைந்து பாம்பு போல சுற்றிக் கிடந்த அந்தக் கயிற்றுச் சுருளையே அவருடைய கண்கள் திரும்பத் திரும்ப வட்டமிட்டுக் கொண்டிருந்தன. திடீரென்று என்ன நினைத்தாரோ, திரும்பி நின்று தாமஸிடம் கூறினார். “ஓ.கே. தாமஸ், நீ போயி செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்...”

பிள்ளை தன்னுடைய அறைக்குத் திரும்பி வந்தார். தான் எப்போதும் அமர்கின்ற சுழல் நாற்காலியில் அமர்ந்த அவர், சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தார். கால்களை முன்னாலிருந்த மேஜை மேல் வைத்துக் கொண்டு, சிகரெட் புகையை வட்ட வட்ட வளையங்களாக சிந்தனையில் ஆழ்ந்தவாறு விட்டுக் கொண்டிருந்தார். ‘ஒரு பெண் சம்பந்தப்பட்ட பயங்கரமான கொலை வழக்கு’ என்று பலவிதமாக அந்த வழக்குப் பற்றி பத்திரிகைகளில் செய்தி வந்த செய்திகளை அவர் மனம் அசை போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது. பத்மினி என்ற தன்னுடைய அண்ணன் மனைவி யாரோ அன்னியன் ஒருவனுடன் உடலுறவு கொள்வதைக் காண நேர்ந்த ராமதாஸ் என்ற தம்பி அரிவாள் கொண்டு அவனைக் கழுத்தில் வெட்டிக் கொலை செய்து விட்டானாம்- இதுதான் அந்தச் செய்தி. அது நம்பமுடியாத செய்தியாகத்தான் எல்லாருக்கும் தோன்றியது. ஆனால், ராமதாஸோ கொலை செய்த இரத்தம் தோய்ந்த அரிவாளுடன் “நான்தான் கொலை செய்தேன்” என்று கூறிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் போய் நின்றபோது சந்தேகத்துக்கே இடமில்லாமல் போய்விட்டது. அதைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள் அதைக்காட்டிலும் வினோதமாயிருந்தன. ராமதாஸின் நண்பர்கள் சிலர் ஒன்றுசேர்ந்து வெளியிட்டிருந்த பத்திரிகைக் குறிப்புதான் அது. கொலை நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் ராமதாஸ் தங்களுடன் ஒரு நாடகம் சம்பந்தமாக ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்ததாக இருந்தது அவர்களுடைய கூற்று. கொலை நடந்த சிறிது நேரத்தில் அங்கே போன ஒருவர் கூறியதோ, தான் போனபோது இரத்த வெள்ளத்தின் மேல் ராமதாஸ் புரண்டு கிடந்தான் என்றிருந்தது. இறுதியில் எல்லாமே ஒரு முடிவில் வந்து முற்றுப்புள்ளியாயின. நீதிமன்றத்தில் தான்தான் கொலையைச் செய்ததாக ராமதாஸே கூறினான். கொலை செய்ததற்கான காரணத்தைக் கேட்டபோது ராமதாஸ் அன்று கூறியதை ஒருமுறை ஞாபகப்படுத்திப் பார்த்துக்கொண்டார் பிள்ளை.

“தாய் தந்தை இல்லாத நான் என் அண்ணனின் சம்சாரத்தை என் தாய் மாதிரி இத்தனை வருடமும் நினைச்சுக்கிட்டிருந்தேன். அவுங்கதான் எனக்கு இந்தப் பெரிய உலகத்துலே எல்லாமேன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். ஆனா... அப்படிப்பட்ட அவுங்களே... நான் கடவுளுக்குச் சமமா நினைச்ச அவுங்களே வார்த்தையாலே சொல்ல முடியாத ஒரு தப்பச் செய்யிறதப் பார்த்தப்போ, என்னாலே அந்த முடிவுக்குத்தான் வர முடிஞ்சது- அண்ணனைக் காப்பாத்துற ஒரே எண்ணத்தில்...”

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel