Category: பொது Written by chitralekha
மனிதராய் பிறந்துள்ள ஒவ்வொருவருக்கும், பிறந்தது முதல் கடைசி மூச்சு உள்ள வரை கிடைக்கும் அனுபவங்கள் ஏராளம்.
தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் பொழுது எதுவுமே புரியாத அனுபவம். அப்போது கிடைக்கும் அனுபவம் அழுகை மட்டுமே. அழுதால் பால் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளுவது ஆரம்ப அனுபவம்.
Category: பொது Written by chitralekha
குழந்தைப் பருவம், சிறுவ-சிறுமியர் பருவம், கன்னிப் பருவம், வாலிபப் பருவம், இளம்பெண் பருவம், பேரிளம் பெண் பருவம், பேரிளம் ஆண் பருவம், வயோதிகப் பருவம், அதன்பின் தள்ளாத பருவம்.
இயற்கை ஏற்படுத்தும் பருவங்கள், மனித வாழ்க்கையில் மாறி மாறி வரும் இனிமைகள்! ஆம்! ஒவ்வொரு பருவமும் இனிமைதான். இளமை மட்டுமே இனிமை என்பதல்ல. முதுமையிலும் அந்த இளமையை நமக்குள் உருவாக்கலாம், உணரலாம். உல்லாஸமாய் வாழலாம்.
Last Updated on Monday, 18 April 2016 11:42
Hits: 5604
Category: பொது Written by chitralekha
நம் உடலின் முக்கியமான அங்கம் இதயம். மனது என்பது இதயம் என்கிற உடல் அங்கத்திற்கு அப்பாற்பட்டு, நம்முள் ஐக்கியமாகிப் போன ஒன்று. நினைவுகளின் சுரங்கம் மனது.
சாதாரணமாக நாம் பேசும் பொழுது மனசு என்று தான் குறிப்பிடுகிறோம். இதயத்தை ஸ்கேன் செய்து பார்த்தால் அதிலுள்ள அனைத்தும் ஃபிலிமில் தெரிந்து விடும். ஆனால் இந்த மனசு இருக்கே? இது என்ன நினைக்கிறது? யாரைப்பற்றி நினைக்கிறது என்பதை எந்த ஸ்கேன் சாதனம் கொண்டும் அறிய முடியாது.
Category: பொது Written by chitralekha
நட்பு என்பது மாசு, மறுவில்லாத மகத்தான உணர்வு. மலர்ந்து மணம் வீசும் உணர்வு. அன்பு, நேசம், பாசம், விட்டுக் கொடுத்தல், தியாகம் போன்ற அனைத்து உணர்வுக் கோர்வைகளின் அற்புதமான கலவை நட்பு. ஆயிரமாயிரம் அர்த்தங்கள் அடங்கிய அபூர்வ நேயம் நட்பு!
'உனக்காக நான், எனக்காக நீ' என்ற உணர்வின் உந்துதலை அளிப்பது நட்பு. அது எப்படி? வேறு ஒரு தாய் வயிற்றில் பிறந்த ஒருவரும் இன்னொரு தாய் வயிற்றில் பிறந்த ஒருவரும் ஓருயிர், ஈருடலாய் நண்பர்களாவது எப்படி சாத்தியம்? நட்பில் அடங்கியுள்ள மகத்தான சக்திதான் காரணம்.
Category: பொது Written by chitralekha
காதல் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையே அல்ல. பூமியில் பிறந்ததும் பெற்ற அன்னையைக் காதலிக்கிறோம். அன்னை அவள் 'இதோ உன் அப்பா' என்று காட்டும் பொழுது தகப்பனைக் காதலிக்கிறோம். உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவைக் காதலிக்கிறோம். நமக்குத் தேவையானவற்றை விரும்புகிறோம். நம்மை சேர்ந்தவர் களைக் காதலிக்கிறோம். ஆரம்பத்தில் நம் தேவைகளை விரும்ப ஆரம்பிக்கிறோம். அதன்பின் விருப்பமானவற்றை தேர்ந்தெடுக்கின்றோம்.
வாழ்க்கையில் பொருட்களை விரும்புகிற நாம்,