Category: சிறுகதைகள் Written by சுரா
வாழைக்குலை, முருங்கைக்காய், வெண்டைக்காய், கீரை, கரிசலாங்கண்ணி, தாழம்பூ, ரோசாப்பூ, தேங்காய், இளநீர்- இப்படி பலவகைப்பட்ட விஷயங்கள் நாராயணியின் கூடையில் இருக்கும். அவளின் வழக்கமான வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கக் கூடியவைதான் அவை எல்லாம்.
Category: சிறுகதைகள் Written by சுரா
எகிப்தின் முஸ்லிம் வாழ்க்கையின்- அடைக்கப்பட்ட அறைக்குள் இருக்கும் இருட்டுக்குள் முகத்தைப் பார்த்து எழுதக் கூடியவர் ஆலிஃபா. அரேபிய மொழியில் பெரிய அளவில் பட்டங்கள் எதுவுமில்லை. ஆங்கிலம் தெரியாது. எகிப்தை விட்டு வேறெங்கும் சென்றதுமில்லை. எழுதுவது, பேசுவது எல்லாமே அரபு மொழியில்தான். ஆனால், எழுதும்போது எப்படிப்பட்ட எழுத்தாளரையும்விட, மிகச்சிறந்த படைப்புகள் உருவாகக்கூடிய ஊற்றாக இருக்கிறார் கெய்ரோவைச் சேர்ந்த இந்த பெண் எழுத்தாளர்.
Category: சிறுகதைகள் Written by சுரா
நடந்து நடந்து கடைசியில் நான் வந்து சேர்ந்தது பரந்து கிடக்கும் ஒரு மைதானத்தில். எனக்கு முன்னால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை இருந்தது.
குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. வெயில் சற்று குறைவாக இருந்த மாலை நேரம். மைதானத்திலிருந்த வானொலியில் சோகம் நிறைந்த ஒரு இனிமையான பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. சோகம் ததும்பும் காதல் உணர்வு கொண்ட பாடல்களென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அதில் ஒரு கஷ்டம் இருக்கிறது. பாடலைக் கேட்டு முடித்தவுடன் நான் அழ ஆரம்பித்து விடுவேன்.
Category: சிறுகதைகள் Written by சுரா
முதன் முதலாக நான் பால் குடித்தது அவளிடம் தான். அவளின் மகன் ஸ்ரீதரன் என்னைவிட இரண்டு மாதங்கள் மூத்தவன். அவளின் இன்னொரு மகனாகத்தான் நான் வளர்ந்தேன். “இன்னொரு அம்மா” என்றுதான் நான் அவளை அழைப்பேன்.
நானும் ஸ்ரீதரனும் ஒன்றாகவே வளர்ந்தோம். நாங்கள் ஒன்றாகவே படித்தோம். படிப்பை நிறுத்தியது கூட ஒன்றாகவேதான். ஒரே தொழிற்சாலையில் ஒரே நாளில் இருவரும் வேலையில் சேர்ந்தோம். எங்களின் சம்பளம்கூட ஒரே மாதிரி தான். ஆனால், யூனியனில் ஸ்ரீதரனுக்கு என்னைவிட முக்கியமான இடமும் வேலைகளும் இருந்தன.
Category: சிறுகதைகள் Written by சுரா
வாசலில் சென்று நின்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி, “212 ஆசாரி பறம்பில்” என்று தனக்குத்தானே கூறியவாறு உரத்த குரலில் கேட்டான்: “இங்கே யாருமில்லையா?”
ஓலையால் மறைத்து உண்டாக்கப்பட்ட அறைக்குள்ளிருந்து ஒரு பெண் வாசலை நோக்கி வந்தாள்.
“உங்க பேரு உம்மிணியா?” கையிலிருந்த தாளைப் பார்த்தவாறு அந்த மனிதன் கேட்டான்.
அந்த இளம் பெண்ணின் அகலமான விழிகள் மேலும் பெரிதாக விரிந்தன. வழக்கோ, போலீஸோ என்று அவள் மனதிற்குள் பதைபதைத்தாள்.