Lekha Books

A+ A A-

பகவத் கீதை

Bhagavath Geethai

டவுளின் ஆசியுடன் ஆரம்பிப்போம். சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளை, ஜோசப் முண்டசேரி, வைக்கம் முஹம்மது பஷீர்- இந்த மூன்று பேரில் உத்தமமான ஆள் யார்? உண்மையிலேயே பெரிய ஒரு விஷயம்தான். தலையைப் பிய்த்துக்கொண்டு சிந்திக்க வேண்டிய சமாச்சாரம்தான். இப்படியொரு பிரச்சினையைக் கிளப்பிவிட்டது யார் தெரியுமா?

ப்ரம்மஸ்ரீ ஏ.கெ.டி.கெ.எம். வாசுதேவன் நம்பூதிரிப்பாடு அவர்கள் தான். மங்களோதயம் புத்தக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அவர். நல்ல மினுமினுப்புடன், சதைப்பிடிப்பான உடம்புடன், வெளுத்துப் போய் பூவன் பழத்தைப் போல இருக்கும் நல்ல மனிதர் அவர். "அஞ்சாம்ப்ரான்” என்று பயபக்தியுடன் எல்லாரும் அவரை அழைப்பார்கள். கொச்சி மகாராஜாவின் சகோதரியைத்தான் அவர் திருமணம் செய்துகொண்டி ருக்கிறார். திருமணம் என்று கூட அதைக் கூறுவதற்கில்லை. அரண்மனையில் இருந்த தம்புராட்டியை அழைத்துக் கொண்டு வந்து தன்னுடைய தேசமங்கலம் இல்லத்தில் தங்க வைத்துக்கொண்டார். அதற்கு முன்பு அப்படியொரு சம்பவம் நடைபெற்றதே இல்லை. நம்பூதிரியைக் கொண்டு போய் மகாராஜாவின் அரண்மனையில் தங்க வைப்பது வேண்டுமானால் நடந்திருக்கிறது. ஆனால், தம்புராட்டி அரண்மனையில்தான் இருப்பாள். தனக்கு வசதிப்படுகிற மாதிரி நம்பூதிரி அங்கு போய்க் கொள்ளலாம். ஏதாவது பிரச்சினை என்று வந்தால்... அவ்வளவுதான். என்ன நடக்குமென்றே சொல்ல முடியாது. இப்படி அடிபிடியும் கொலையும் நிலவிக்கொண்டிருந்த காலத்தில்தான் தம்புராட்டியை தேசமங்கலம் வீட்டிற்குக் கொண்டு போகிறார் நம்பூதிரி. மனிதர் பயங்கர தைரியசாலி என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

அவர் ராஜகம்பீரத்துடன் திருச்சிவப்பேரூர் மங்களோதயம் நிறுவனத்தின் மேல் மாடியில் பச்சை நிற விரிப்பு விரிக்கப்பட்ட பெரிய மேஜைக்கு முன்னால் அமர்ந்திருக்கிறார். இரண்டு கண்ணாடிகள் இருக்கின்றன. ஒன்று- மேஜை மேல், இன்னொன்று- அவர் முகத்தில். படிப்பதற்கும் அழகிற்காகவும் உள்ளவை அவை. மேஜையைச் சுற்றி வெறுமனே இருக்கும் நாற்காலிகள். நாற்காலிகளுக்குப் பின்னால் பணிவுடன் நின்றுகொண்டிருக்கும் ஆட்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் கவிஞர்கள், இலக்கியவாதிகள். "அடியேன்... அடியேன்... நான்...” -இப்படி வசனங்கள்.

யாரும் அவருக்கு முன்னால் உட்கார மாட்டார்கள்.

இந்த விஷயங்கள் எதுவுமே தெரியாமல் நான் முதல் முறையாக அவருக்கு முன்னால் போய் நின்றேன். கதர் ஜிப்பா, கதர் வேஷ்டி. கையில் ஒரு குடை. வேஷ்டியை மடித்துக் கட்டியிருக்கிறேன். நான் போனபோது சில ஆட்கள் நாற்காலிகளுக்குப் பின்னால் பயபக்தியுடன் நின்று கொண்டிருந்தார்கள். போன வேகத்தில் அவரை வணங்கிவிட்டு அவருக்கு முன்னால் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன். குடையை அவரின் மேஜை மேல் வைத்தேன். பிறகு ஜிப்பா பாக்கெட்டில் இருந்து தீப்பெட்டியையும் பீடியையும் எடுத்தேன். பீடியைப் பற்ற வைத்துப் புகைக்க ஆரம்பித்தேன். தீக்குச்சியை எங்கே போடுவது என்று தெரியவில்லை. உடனே அவர் எங்கோ இருந்து ஒரு ஆஷ்ட்ரேயை எடுத்துக்கொண்டு வந்து எனக்கு முன்னால் வைத்தார். நான் கரிந்து போயிருந்த தீக்குச்சியை அதில் போட்டேன்.

நாங்கள் ஒரு வியாபார விஷயமாகப் பேசப் போகிறோம். என்னுடைய ஒரு புத்தகம் இன்னொரு நிறுவனத்திற்காக மங்களோதயம் பிரஸ்ஸில் அச்சடிக்கப்படுகிறது. அதன் புரூஃப்பைப் பார்ப்பதற்காக நான் எர்ணாகுளத்திலிருந்து வந்திருக்கிறேன். அப்போதுதான் அவர் என்னை அழைக்கிறார். என்னுடைய எல்லா புத்தகங்களையும் மங்களோதயம் நிறுவனம் பதிப்பிக்க தயாராக இருப்பதாகவும், இது விஷயமாகப் பேசுவதற்காகவும்தான் என்னை அவர் அழைத்திருந்தார்.

நான் சொன்னேன்:

“நாம சேர்றது கஷ்டம்!''

ஏன் அப்படிச் சொன்னேன் என்றால் எழுத்தாளர்களுக்கு சரியாகப் பணம் தருவதில்லை. ஐந்து ரூபாய், பத்து ரூபாய், நூறு ரூபாய்க்கு பதிப்புரிமையை வாங்கிக் கொள்வார்கள். பொதுவாக பதிப்பாளர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள். எழுத்தாளராக ஆக வேண்டும் என்றால், முதலில் அவன் கையில் ஒரு துண்டு இருக்க வேண்டும். கை இடுக்கில் அதை வைத்து பயபக்தியுடன் நிற்க வேண்டும். வசதிப்பட்டால், முதுகெலும்பை மூன்று மடங்கு ஒடித்து நின்றாலும் நல்லதுதான். அப்படி ஒரு நிலை வந்தால், எவ்வளவு வேண்டுமானாலும் குனிந்து பணிவைக் காட்ட முடியுமே!

அவர் கேட்டார்.

“அதென்ன இப்படிச் சொல்றீங்க- நாம ரெண்டு பேரும் சேர முடியாதுன்னு?''

நான் சொன்னேன்:

“நான் அப்படிச் சொல்றதுக்காக மன்னிக்கணும். எனக்கு வாழ்க்கையில எவ்வளவோ அனுபவங்கள் இருக்கு. நான் பல வருடங்கள் எத்தனையோ மாநிலங்கள்ல எத்தனையோ நாட்கள் அலைஞ்சு திரிஞ்சிருக்கேன். எனக்கு எத்தனையோ வேலைகளைச் செய்யத் தெரியும். அந்த வேலைகள்ல எழுதுறதும் ஒண்ணு. எழுதவும் தெரியும். எழுதினதை அச்சடிச்சு புத்தகமாக்கி விற்பனை செய்யவும் தெரியும்!''

தொடர்ந்து புத்தகங்கள் அச்சடிப்பதைப் பற்றிச் சொன்னேன். விற்பனை செய்வதைப் பற்றிச் சொன்னேன். ஹோட்டல்களில் சாப்பாடு ஒன்றுக்கு ஒன்றேகால் அனா விலை. பெரிய ஹோட்டல்கள் என்றால் இரண்டு அணா. ஒன்றே கால் அணாவுக்கு உள்ள சாப்பாடு சாப்பிட்டாலே போதும்தான். அதனால் புத்தகங்களின் விலை ஒன்றே கால் அணா. ஒரு புத்தகம் விற்றால் ஒரு சாப்பாடு கிடைக்க வேண்டும். இப்படி புத்தகங்களை ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி, வீடு வீடாக எடுத்துக்கொண்டு நான் நடந்து சென்று விற்றேன். அந்தப் புத்தகத்தை ஐந்து அல்லது ஆறு நிமிடங்களில் அவர்கள் படித்து முடித்துவிடுவார்கள். புத்தகத்தை விற்று, காசு வாங்கிய பிறகும் நான் அங்கேயே நின்றிருப்பேன். அவர்கள் படித்து முடித்ததும் நான் கேட்பேன்! "இந்தப் புத்தகத்தை நான் கொண்டு போகட்டுமா?” பெரும்பாலானவர்கள் "சரி” என்று சம்மதித்து, கையில் புத்தகத்தைத் தந்துவிடுவார்கள். இப்படி ஒரே புத்தகத்தை எட்டு அல்லது பத்து முறைகள் விற்பேன். சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வார்கள்: "சே... நான் தர மாட்டேன். என் பொண்டாட்டி படிக்கணும்.” அவனுக்கு ஒரு பொண்டாட்டி! அவள் இதைப் படித்து என்ன செய்யப்போகிறாள்?

நான் சொன்னேன்:

“இப்படித்தான் நான் புத்தகம் விற்பேன்!''

“பரவாயில்லையே!'' நான் சொன்னது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் மணியை அடித்தார். ப்யூன் வந்தான்.

“சாயா வேணுமா, காபி வேணுமா? உங்க ஜாதிக்காரங்க என்ன குடிப்பாங்க?''

“ஜாதிக்காரங்களா?''

“ஹே... ஹே... எழுத்தாளர்கள்... இலக்கியவாதிகள். இப்படி ஒரு எழுத்தாளரை நான் இப்பத்தான் முதல் தடவையா பார்க்குறேன்.''

“மனிதர்கள் என்ன குடிப்பாங்களோ, அதைத்தான் நானும் குடிக்கிறேன்!''

“அப்ப காபி சாப்பிடுங்க. நல்ல காபி இங்கே கிடைக்கும். மசால் தோசை வாங்கிட்டு வரச்சொல்றேன். சரியா?''

“சரிதான். அப்படியே எனக்கு ஒரு டம்ளர் தண்ணியும் வேணும்.''

ப்யூன் போனான். அவர் சொன்னார்:

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel