Lekha Books

A+ A A-

மரணம் - Page 3

maranam

இதென்ன சோர்வு தரும் விஷயங்கள்!

புதிய உலகம் எங்கே?

மேனேஜர் தன்னுடைய அறைக்குள் நுழைந்தான். அவன் பத்திரிகை ஆசிரியருடைய அறைக்குள்...

மற்ற பத்திரிகை ஆசிரியர்கள் வழக்கம்போல வெறுப்பு உண்டாகும் அளவிற்கு நலம் விசாரித்துக் கொண்டார்கள்.

வெறுப்புடன் அவன் மேஜைக்கு அருகில் சென்றான்.

கடிதங்கள்... ரிப்போர்ட்டுகள்... கட்டுரைகள்... கதைகள்... கவிதைகள்... வாசித்தான்.

எல்லாமே பழையவைதான். எதிலும் புதுமை இல்லை.

புஷ்பாங்கதன் அவ்வப்போது தேநீர் கொண்டு வருகிறான். எப்போதும் வரக்கூடிய வெளிஆட்கள் உள்ளே வருகிறார்கள். அமர்கிறார்கள். வாய்ச்சவடால் அடிக்கிறார்கள். போகிறார்கள். கம்பாசிட்டர்கள் அவ்வப்போது வந்து தொல்லை தருகிறார்கள்.    

வாசித்தான். எழுதினான். என்னென்னவோ செய்தான்.

மதியம் ஒரு சாப்பாட்டை வரவழைத்தான்.

எதைச் செய்யும்போதும், புதியதைத் தேடினான். 

கிடைக்கவில்லை. பார்க்க வில்லை.

வழக்கம்போல பத்திரிகை உரிமையாளர் மாலை நேர வருகை புரிந்தார்.

‘‘என்ன சார், விசேஷம்?”

‘‘ஒண்ணுமில்ல.”

‘‘சுகம்தானே?”

‘‘ஆமா...”

பிறகு விவாதம். புதிய வளர்ச்சி திட்டங்கள். அதுவும் வழக்கமான சடங்குதான்.

தலையைத் தடவியவாறு, வீங்கிய கன்னங்கள் குலுங்குகிற மாதிரி, பத்திரிகை உரிமையாளர் சிரித்தார்.

தொடர்ந்து மது அருந்தும் இடம் இணைந்திருக்கும் ஹோட்டலில் எப்போதும் இருக்கக்கூடிய நிகழ்ச்சி. ஹெய்க் என்ற விஸ்கி. நெப்போலியன் என்ற ப்ராண்டி. ரோத்மன் என்ற சிகரெட். போலியான சிரிப்புகள் போலித்தனமான, உரத்த பேச்சு.

இறுதியில், வழக்கம்போல பத்திரிகை உரிமையாளரின் ஓட்டுநர் காரின் கதவைத் திறந்து கொண்டு நிற்கும்போது, அவனுக்குள் இருக்கும் புரட்சிக்காரன் விழிப்படைந்து கத்துகிறான்:

‘‘நான் நடந்து போய்க் கொள்கிறேன்.”

மேனேஜர் வற்புறுத்தினான். பத்திரிகை உரிமையாளர் கட்டாயப்படுத்தினார். அதைக் காதுகளிலேயே அவன் போட்டுக் கொள்ளவில்லை. நடக்கலாம். வழக்கமான ஒரு செயலை மாற்றினது மாதிரி இருக்கும்.

நடந்தான். தெருவின் ஓரம் வழியாக மூச்சு இரைக்க நடந்தான்.

மருத்துவமனை திருப்பத்தில் நோயாளிகளும், கூட்டிக் கொடுப்பவர்களும், விலை மகளிர்களும், பிக்-பாக்கெட் அடிப்பவர்களும் அலைந்து கொண்டிருப்பதை அவன் பார்த்தான்.

பழைய விஷயங்கள்தான்.

வீணாக ஒரு பகல் கழிந்திருக்கிறது. வீணான ஒரு இரவு கொடி கட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறது.

தெருவில் விழுந்து கிடந்த வீணான இரவை மிதித்துச் சிதற விட்டவாறு அவன் நடந்தான்.

இறுதியில், பழைய பாதைகளைக் கடந்து, பழைய காலடிச் சுவடுகளுக்கு மேலே காலடிகளைப் பதித்து, அசுத்த நீர் ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றின் கரையில் இருக்கும் பர்ணசாலையை அடைகிறான். சாராய புட்டிகளின், பீடிகளின், கொசுக்களின் உலகத்திற்குத் திரும்பவும் வந்திருக்கிறான்.

புதிதாக எதைப் பார்த்தான்? எதையும் பார்க்கவில்லை.

பழைய, சிதிலமடைந்த, பொய்யான நாட்களைப்போல, மேலும் ஒருநாள் முடிந்தது. பழைய நாட்களின் ஒன்றுமில்லாததை நோக்கித் திறந்த கண்கள் - புதியவற்றை, வீண் இல்லாதவற்றைப் பார்ப்பதற்கு ஆர்வத்துடன் திறந்த கண்கள் - பழைய சிலந்திவலை படர்ந்திருக்கும் அறையில் சொறி பிடித்த சுவர்களையும், கரையான் அரித்த மரக்கதவுகளையும், துரும்பு பிடித்திருக்கும் ஜன்னல் கம்பிகளையும் மட்டுமே பார்க்கின்றன.

மாடியில் காலடிச் சத்தம் கேட்கிறது.

கீழேயிருக்கும் தெருவிலிருந்து வந்திருந்த விலைமாதர்களாக இருக்குமோ? இல்லாவிட்டால், அவர்களைக் கூட்டிக் கொடுக்கும் சக்ரபாணியா?

யாராக இருந்தாலும் ஒன்று தான். பழைய உலகத்தின் காவல்காரர்கள். அவர்களைக் குறைகூற வேண்டியதில்லை. தெய்வங்களும் சிலைகளும் பழையவைதானே!

புதிய கடவுள்கள் எங்கே? புதிய சிலைகள் எங்கே?

பார்க்க முடியவில்லை.

பிறந்தது முட்டாள்தனமான ஒன்றாகி விட்டது. கடந்து போன எத்தனையோ எத்தனையோ வருடங்கள் பாழ் நிலங்களாக இருந்தன என்ற புரிதல் உதயமானபோதுதான் கண்கள் திறந்தன. அப்போதுதான் அவன் பிறந்தான். ஒரு பகல் முடிந்தவுடன், அவனுக்குப் புரிய வருகிறது, இன்றும் பாழ்நிலம்தான். இனி இருக்கும் பாதையும் பாழ் நிலங்கள் வழியாகத்தான்.

பிறந்திருக்கக் கூடாது. கண்களைத் திறந்திருக்கக் கூடாது.

அவன் படுத்துக் கண்களை மூடினான். கைகளையும் கால்களையும் நீட்டிப் படுத்தான். அறைக்கு வெளியே, நாற்றமெடுத்துக் கொண்டிருந்த ஆற்றின் கரையில், இரவின் கறுத்த சிறகுகளுக்கு மத்தியில், கொசுக்களைப்போல அவனுடைய மரணம் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துப் பதுங்கிக் கொண்டிருந்தது.

அன்று இரவு அவன் இறந்து விட்டான்.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

தேன் மா

தேன் மா

March 8, 2012

பார்

பார்

February 15, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel