மர பொம்மைகள் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 10723
பொழுது விடிஞ்சப்போ நான் வீட்டை விட்டுப் போறதா சொன்னேன். “ஏன் பெண்ணே போறே?”ன்னு அந்த ஆள் கேட்டாரு. “இங்கே இனிமேல் இருந்தா நான் யாரையாவது உளியை வச்சு கொன்னுடுவேன். அதனால நான் போயிடுறதுதான் நல்லது”ன்னு நான் சொன்னேன். “அப்ப என் கை பூப்பறிக்கப் போயிருக் காது”ன்னு அந்த மிருகம் சொல்லிச்சு. அந்த மிருகத்தோட வாழ முடியாதுன்னு சொல்லிவிட்டு நான் ரோட்டுக்கு வந்து பஸ் ஏறி இங்கே வந்துட்டேன். அதுக்குப் பிறகும் இருக்கு எத்தனையோ கசப்பான கதைகள்...”
அவள் சொல்லியதை நிறுத்தியதும், அந்த மனிதன் எழுந்தான்.
“இதை வேணும்னா வச்சுக்கோங்க” என்று சொல்லியவாறு அவள் தன் கையிலிருந்த பொம்மையை அவனிடம் நீட்டினாள்.
அவன் மகிழ்ச்சியுடன் அந்த பொம்மையை வாங்கிப் பார்த்தான். கோபம் பொங்க பொம்மை வடிவத்தில் அவள் இருந்தாள். அதைப் பார்த்ததும் அவன் முகத்தில் இருந்த பிரகாசம் சற்று குறைந்தது. எனினும், நன்றி கூறிவிட்டு அவன் ஒரு துண்டுத் தாளை அங்கே வைத்துவிட்டு சொன்னான். “இதைப் பாருங்க.”
அவள் பார்த்தாள். அவளின் உருவத்தை அவன் படமாக அந்தத் தாளில் வரைந்திருந்தான். அவள் அதையே பார்த்தாள்.
“நாம பேசிக்கிட்டே இருந்த நேரத்துல இதை வரைஞ்சது ஆச்சரிய மான ஒரு விஷயம்தான். அந்த பொம்மையை கொஞ்சம் இங்கே தாங்க” என்று சொன்ன அவள் உள்ளே போய் பார்வதி தவம் செய்யும் சற்று பெரிதாக இருக்கும் ஒரு பொம்மையைக் கொண்டு வந்து அந்த ஓவியனுக்குப் பரிசாகத் தந்தாள். அவன் அதை மகிழ்ச்சியும் நன்றியும் குடிகொள்ள அவளிடமிருந்து வாங்கினான்.
“சரி... புறப்படுங்க...” என்று சொல்லியவாறு அவள் வாசலுக்கு வந்தாள். அவன் அடுத்த வீட்டை நோக்கி நடந்தான். அவனுடைய இதயத்தில் வீணையின் கம்பியை மீட்டும் போது உண்டாகக் கூடிய இசை எதிரொலித்துக் கொண்டிருந்தது.
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,