Lekha Books

A+ A A-

சோசலிசமும் மனிதனும் - Page 6

socialisamum manidhanum

எங்களின் கடமையை முழுமை செய்பவர்களுக்கு அது உதவி செய்கிறது. புதிய சமூகத்தின் வளர்ச்சிக்கு எதிராக நிற்பவர்களை அது தண்டிக்கவும் செய்கிறது.

புரட்சி இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அரசாங்கமும் ஒட்டு மொத்த சமூகமும் முழுமையாக ஒன்றாக இருக்கக் கூடிய ஒரு சூழ்நிலைக்கான தேடலில்தான் நாங்கள் இருக்கிறோம். சோசலிசத்தை உண்டாக்குவதற்குத் தேவையான சூழ்நிலைகளில் ஒன்று அது. அதே நேரத்தில் சட்டங்களை உண்டாக்கும் குழு போன்ற பூர்ஷ்வா ஜனநாயகத்தின் பொது நிறுவனங்களை வடிவமெடுத்துக் கொண்டு வரும் புதிய சமூகத்தில் வெறுமனே பறித்து நடுவதைத் தவிர்ப்பதற்கு தீவிரமான முயற்சிகளைச் செய்ய வேண்டும்.

புரட்சி சம்பந்தமான வடிவத்தை படிப்படியாக வளர்த்துக் கொண்டு வருவதற்கான சில முயற்சிகள் தேவையற்ற வேகம் காட்டாமல் நடந்திருக்கின்றன. இதற்கு முன்னால் இருக்கும் மிகப் பெரிய தடையே எங்களின் பயம்தான். அதற்குக் காரணம்- மேலோட்டமாக ஒரு அடையாளம் தெரிந்தால் கூட போதும், நாங்கள் பொது மக்களிடமிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம். மாய வலைகளில் இருந்து மனிதர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற நிரந்தரமும் முக்கியத்துவமும் வாய்ந்த புரட்சிக் கொள்கையிலிருந்து இது எங்களின் கவனத்தை திசை திருப்பி விடும்.

படிப்படியாக திருத்தப்பட வேண்டிய அளவிற்கு இடம் இல்லை என்றாலும், பொதுமக்கள் ஆழமான சிந்தனை கொண்ட மனிதர்களின் கூட்டத்தைப் போல, அதே இலட்சியத்திற்காக வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெளிப்படையான சூழ்நிலையில் வளர்ச்சி தெரிந்தாலும் சோசலிசத்திற்குக் கீழே மனிதன் மேலும் முழுமையடைந்த நிலையில் காணப்படுகிறான். மிகச் சரியான செயல்பாடு இல்லாவிட்டாலும், சமூக அமைப்பில் தானே இணைந்து இருக்கவும், அதன் குரலாக மாறவும் உள்ள சூழ்நிலைகள் அவனுக்கு நிறைய கிடைக்கின்றன.

உற்பத்தி, நிர்வாகம் ஆகியவற்றின் அனைத்து செயல் பிரிவுகளிலும் மனிதனின் தனியான பிறருடன் சேர்ந்த சுய உணர்வு கொண்ட பங்கேற்றலை பலப்டுத்துவது மிகவும் அவசியமான ஒன்று. அது மட்டுமல்ல- அதை கொள்கை ரீதியாகவும் நவீன வளர்ச்சிகளைக் கொண்ட கல்வியுடன் இணைக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் அவனுக்கு இந்தச் செயல்கள் எந்த அளவிற்கு ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருப்பவை என்பதும் அவற்றின் வளர்ச்சி எந்த அளவிற்கு சீராக இருக்கிறது எனபதும் தெரியும். அந்த வகையில் அவன் தன்னுடைய சமூக ரீதியான கடமையைப் பற்றி முழுமையான புரிதலுடன் இருக்க முடியும். ஒரு முறை அடிமைத்தனத்தின் சங்கிலி இணைப்புகளை உடைத்தெறிந்து விட்டால், தான் ஒரு மனிதப் பிறவிதான் என்பதை முழுமையாக புரிந்து கொள்வதற்கு அவனால் முடியும்.

இது அவனுக்கு அவனுடைய இயல்பு குணம் சுதந்திரமாக்கப்பட்ட கடின உழைப்பு மூலம் கிடைக்கும் கலாச்சாரம், கலை ஆகியவற்றின் மூலமாக அவனுடைய சரியான மன ஓட்டங்களை வெளிப்படும்.

இதில் முதலில் கூறியபடி அவனுக்கு முன்னேற்றம் உண்டாக வேண்டுமென்றால், தொழிலுக்கு ஒரு புதிய மரியாதை உண்டாக வேண்டும். சரக்கு உறவுகள் மூலம் மனிதனுக்கு உண்டாகியிருக்கும் இருப்பு முடிவுக்கு வர வேண்டும். அவன் செய்து முடிக்க வேண்டிய சமூக கடமைகள் எவ்வளவு இருக்கின்றன என்று விளக்கிக் காட்டக் கூடிய ஒரு சூழ்நிலை உண்டாக்கப்பட வேண்டும். கருவிகள் சமூகத்திற்குச் சொந்தமானவை. கடமையை நிறைவேற்றக் கூடிய ஒரு வழி மட்டுமே இயந்திரம்.

தன்னுடைய செயலில் மனிதன் தன் சாயலைப் பார்க்க தொடங்குகிறான். செய்து முடித்த செயல்கள் மூலம், தான் படைத்த பொருட்கள் மூலம் மனிதப் பிறவி என்ற நிலையில் தனக்கு இருக்கும் இடம் என்ன என்பதை தெளிவற்ற நிலையில் அவன் புரிந்து கொள்ள தொடங்குகிறான். தனக்குச் சொந்தமில்லாத விற்கப்படும் உழைப்பு சக்தியின் வடிவத்தில் தன் சொந்த அடையாளத்தின் ஒரு பகுதியை அர்ப்பணிக்க வேண்டிய மோசமான நிலையை, வேலை அவனுக்கு உண்டாக்கி வைக்கவில்லை. எனினும் சாதாரண மக்கள் வாழ்க்கைக்கு தான் தரும் கொடையின் எதிரொலியாக தன்னுடைய சமூக ரீதியான கடமையின் முழுமை என்ற அளவில், தானே வடிவம் மாறி வருவதாக அவன் உணர்கிறான்.

சமூக கடமை என்ற இந்தப் புதிய பதவியை கடின உழைப்பிற்குக் கொடுக்க நாங்கள் எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறோம். மேலும் அதிக பரப்பில் விடுதலைகளுக்கான சூழ்நிலையை உண்டாக்கும் தொழில் நுட்பங்களின் முன்னேற்றத்துடன் கடின உழைப்பைச் சேர்க்க ஒரு பக்கம் நாங்கள் முயல்கிறோம். இன்னொரு பக்கம் சொந்த உழைப்பை சரக்கு வடிவத்தில் விற்பதற்கான கட்டாயம் இல்லாத ஒரு சூழ்நிலையில் மனிதன் உற்பத்தி செய்யும்போதுதான் அவன் முழுமையான மன ரீதியான சூழ்நிலைகளை அடைகிறான் என்ற மார்க்ஸிய பார்வையின் அடித்தளத்திலிருக்கும் இயல்பான செயல்பாட்டுடன் அதை இணைக்க நாங்கள் முயற்சிக்கிறோம்.

உழைப்பு இயல்பாகவே செயலாக மாறும் போது, வேறு பல விஷயங்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறது என்பது உண்மைதான். தன்னைச் சுற்றியிருக்கும் அழுத்தக் கூடிய ஏற்பாடுகளை மனிதன் இப்போது கூட சமூக குணம் கொண்டவையாக மாற்றவில்லை. தன்னுடைய சமூகத்தின் ஆக்கிரமிப்பிற்கு அடி பணிந்து கொண்டுதான் அவன் இப்போதும் உற்பத்தி செய்வதில் ஈடுபட்டிருக்கிறான் (ஃபிடல் இதை தார்மீகமான நிர்பந்தம் என்று கூறுகிறார்).

புதிய இயல்புகள் மூலமாக சமூக சூழ்நிலைகளுடன் உறவு கொண்டிருந்தாலும், அதன் வெளிப்படையான ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலையான தன்னுடைய பணியை நோக்கிய செயலைப் பொறுத்த வரையில் மனிதன் முழுமையாகவும் தார்மீகமான ஒரு மாற்றத்திற்கு அடிபணிய வேண்டியவனாகவும் இருக்கிறான். அதுதான் கம்யூனிஸம்.

பொருளாதார சூழ்நிலையில் இயல்பாக (இயந்திரத் தனமாக) மாறுதல் வராததைப் போல, அறிவு ரீதியாகவும் இயல்பான (இயந்திரத் தனமான) மாறுதல் நடக்காது. மாறுதல்கள் மிகவும் மெதுவாகத்தான் நடக்கும். எப்போதும் அப்படித்தான் நடக்கும் என்று கூறுவதற்கில்லை. சில நேரங்களில் அவை படுவேகமாக நடக்கும். சில வேளைகளில் எந்தவித அசைவும் இல்லாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கும் வேறு சில நேரங்களில் பின்னோக்கி நகரும்.

அது மட்டுமல்ல. நான் முதலிலேயே சுட்டிக் காட்டியதைப் போல நாம் ஒரு விஷயத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ‘க்ரிட்டிக் ஆஃப் தி கோதா ப்ரோக்ரா’மில் மார்க்ஸ் கூறியிருப்பதைப் போன்ற வெறும் ஒரு மாறுதலுக்கான கால கட்டத்துடன் அல்ல நாம் பழகிக் கொண்டிருப்பது. அவர் கூறியிராத ஒரு புதிய இக்கட்டான கட்டம் இது. கம்யூனிஸத்திற்கான இடப் பெயர்ச்சியின் ஒரு முதல் கட்டம்-சிரமங்கள் நிறைந்த வர்க்கப் போராட்டங்களுக்கு மத்தியில் நடைபெறுகிறது.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel