Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

சோசலிசமும் மனிதனும் - Page 7

socialisamum manidhanum

அதில் இருக்கும் முதலாளித்துவ அம்சங்கள் அதன் சாரம் என்ன என்பதைப் புரிந்து கொள்வதற்கு தடையாக இருப்பதற்கு மத்தியில், அது நடந்து கொண்டிருக்கிறது.

மார்க்சிஸ்ட் தத்துவம் மற்றும் மாறுதலுக்கான கட்ட சித்தாந்தம் ஆகியவற்றின் படிப்படியான வளர்ச்சிக்கு தடையாக நின்றிருந்த பண்டிதத்தனத்தையும் சேர்த்து கணக்கில் எடுத்தால், இப்போதும் கொள்கைகளின் குழப்பத்தில் இருக்கிறோம் என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். மேலும் பரவலான ஒரு பொருளாதார அரசியல் கொள்கையைப் பற்றி விளக்கிக் கூறுவதற்கு முன்னால், இந்தக் கால கட்டத்தின் முக்கிய குண விசேஷங்களைப் பற்றி இன்னும் அதிகமாக ஆராய்ச்சி செய்ய நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டியது அவசியத் தேவையாக இருக்கிறது.

அதன் விளைவாக உண்டாகக் கூடிய கொள்கை, சோசலிசத்தின் உருவாக்கத்திற்கான இரண்டு மிகப் பெரிய தூண்களில் மேலும் கவனம் செலுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை. அவைதான் புதிய மனிதனின் கல்வியும் தொழில் நுட்ப வளர்ச்சியும். இந்த இரண்டு விஷயங்களிலும் நாம் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் தொழில் நுட்ப விஷயத்திற்கான கால தாமதம் முழுமையாக இருக்காது. காரணம்- கண்களைக் கட்டியவாறு முன்னோக்கிச் செல்லும் பிரச்னை அல்ல அது. அதற்கு மாறாக, உலகத்தில் அதிகமாக வளர்ச்சி அடைந்த நாடுகள் திறந்து தந்த மிகவும் விசாலமான பாதைகள் வழியே செல்லும் பயணம் அது. அதன் முன்னணி பிரிவில் இருப்பவர்களுக்கு, தொழில் நுட்ப பயிற்சி அளிப்பதன் தேவையைப் பற்றி ஃபிடெல் வற்புறுத்தி கூறுகிறார்.

உற்பத்தி சம்பந்தப்பட்ட செயல்பாடுகளுடன் தொடர்பு இல்லாத கொள்கைகளைப் பொறுத்த வரையில்- மேலோட்டமான- தார்மீக ரீதியான வேறுபாடு சாதாரணம். நீண்ட காலமாக கலை - கலாச்சாரச் செயல்பாடுகள் மூலம் அடிமைத் தளத்தில் இருந்து தப்பிக்க மனிதன் முயற்சித்துக் கொண்டிருக்கிறான். எட்டோ அல்லது அதைவிட அதிகமான மணி நேரங்களோ தன்னுடைய உழைப்பை விற்கும்போது, அவன் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருக்கிறான். அதற்குப் பின்னாலிருக்கும் தார்மீக (ஸ்ப்ரிச்சுவல்) செயல்கள் மூலமாக அவனுக்கு வாழ்க்கை மீண்டும் கிடைக்கிறது.

ஆனால், நோய்க்கான வித்துகள் இந்த மருந்தில்தான் இருக்கின்றன. தனிமையில் இருக்கும் மனிதன் என்ற நிலையில் அவன் சுற்றியிருக்கும் சூழ்நிலையுடன் ஒத்துப் போக முயற்சிக்கிறான். தன்னுடைய நோய் வாய்ப்பட்ட தனித்துவத்தை அவன் கலையின் ஊடகத்தின் வழியாக காப்பாற்றுகிறான். மதிப்புடன் வாழ விரும்பும் ஒரு மனிதன் என்ற நிலையில் அவன் அழகுணர்வு கொள்கைகளுடன் போராடுகிறான்.

எது எப்படி இருந்தாலும், அவன் செய்வதெல்லாம் தப்பித்துச் செல்வதற்கான முயற்சிகள் மட்டுமே. உற்பத்தி சம்பந்தப்பட்ட வெளிப்படையான ஒரு பின் விளைவு மட்டுமல்ல நோக்கம். சோதனை மயமான பாதைகளை மட்டும் பயன்படுத்தும் குத்தகை முதலாளிகள் கலையை அறிவு பூர்வமான ஒரு கருவியாக இருக்கும் வண்ணம் அதைச் சுற்றிலும் மிகவும் பலமான வலைகளை உண்டாக்கி வைக்கிறார்கள். எப்படிப்பட்ட கலையில் கலைஞன் பயிற்சி பெற வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது மேலிடம். அதை எதிர்ப்பவர்கள் அச்சுறுத்தலால் கீழடக்கப்படுவார்கள்:திறமைசாலிகளான அபூர்வமான சிலர் மட்டுமே தங்களின் சொந்த படைப்புத் திறனை வெளிப்படுத்துகிறார்கள். மற்றவர்களெல்லாம் சிறிதும் வெட்கமில்லாமல் கூலி எழுத்தாளர்களாகவே இருந்து மண்ணில் மடிகிறார்கள். அதாவது- மிதித்து நசுக்கப்படுகிறார்கள்.

கலைஞனின் ‘சுதந்திரம்’ என்ற ஒரு சிந்தனை அலை உண்டாக்கப்படுகிறது. நாம் அதை நேரடியாக சந்திக்கும்வரை அது புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது என்றாலும், அதன் உள் அம்சங்களுக்கும் எல்லை இருக்கவே செய்கிறது. அதாவது- மனிதன் மற்றும் அவனுடைய அடிமைத்தனம் பற்றிய உண்மையான பிரச்னை வெளியே தெரியும்வரை மட்டும். அதனால் அர்த்தமற்ற கவலையும் ஆபாசமான கேளிக்கையும் மனிதனுக்குள்ளிருந்து வெளியே குதிக்கக்கூடிய வழிகளாக மாறுகின்றன. கலையை ஒரு கருவியாக ஆக்கி பயன்படுத்துவது என்ற கொள்கை எதிர்க்கப்படுகிறது.

சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனுக்கு எல்லா ஆதரவுகளும் கிடைக்கின்றன. சிறுவன் விளையாடும் குரங்கிற்கு கிடைக்கக்கூடிய எல்லா வசதிகளும். இனம் புரியாத அந்த கூட்டிற்குள்ளிருந்து தப்பிப்பதற்கு ஒரு ஆள் கூட முயற்சி செய்யக் கூடாது என்பது நம் மீது சுமத்தப்படும் கட்டுப்பாடு.

புரட்சி அதிகாரத்திற்கு வந்தபோது, இவர்கள் கூட்டமாக பின்னோக்கி ஓடியதுதான் நடந்தது. மற்றவர்கள் (அவர்கள் புரட்சியாளர்களாக இருந்தாலும், இல்லாவிட்டாலும்) தங்களுக்கு முன்னால் ஒரு புதிய பாதை திறந்து விட்டிருப்பதைப் பார்த்தார்கள். கலைத்தன்மை கொண்ட தேடலுக்கு ஒரு புதிய ஒளி கிடைத்தது. எப்படி இருந்தாலும் அதற்கான வழி ஏறக்குறைய முன்பே உண்டாக்கப்பட்டுவிட்டது. சுதந்திரம் என்ற வார்த்தையின் மறைவில் ஒளிந்திருந்தது புறம் காட்டி ஓடும் எண்ணம். புரட்சியாளர்கள் மத்தியில் பல நேரங்களில் இந்த நிலையைப் பார்க்க முடிந்தது. அவர்களின் உணர்வில் இப்போதும் பூர்ஷ்வா கொள்கைகள் கலந்திருக்கின்றன என்பதைத்தான் இது காட்டுகிறது.

இதே விதத்திலுள்ள செயல் மூலம் கடந்து சென்ற நாடுகளில், இப்படிப்பட்ட செயல்பாடுகளை அவர்கள் எதிர்ப்பது கடுமையான வழிமுறைகள் கொண்டுதான். பொதுவான கலாச்சாரம் வெளிப்படையாக மறுக்கப்பட்டதுதான் உண்மையில் நடந்தது.கலாச்சார வெளிப்பாட்டின் இலக்கு இயற்கையை கிட்டத்தட்ட அதே விதத்தில் காட்டக்கூடியதாக இருக்கவேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட சமூக யதார்த்தத்தின் இயந்திரத்தனமான அடையாளமாக மாற்றப்பட்டது. அவர்கள் உண்டாக்க விரும்பிய போட்டிகளோ மோதல்களோ இல்லாத இலட்சிய சமூகம்.

சோசலிசத்திற்கு வயது குறைவு. பல தவறுகளும் நடந்திருக்கின்றன. அதுவரை தொடர்ந்து வந்த பாதைகளிலிருந்து வேறுபட்ட பாதைகளைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு புதிய மனிதனைப் படைக்க வேண்டும் என்ற கடமையை நிறைவேற்றுவதற்குத் தேவையான புத்திபூர்வமான தைரியமும் அறிவும் பல வேளைகளில் புரட்சியாளர்களிடம் இல்லாமலிருந்தது. பரம்பரை பரம்பரையாக பின்பற்றப்பட்டு வந்த பாதைகள் மீது, அவற்றைப் படைத்த சமூகத்தின் பாதிப்பு இருக்கத்தான் செய்யும்.

உள்ளடக்கத்திற்கும் வடிவத்திற்குமிடையே இருக்கும் தொடர்பு பிரச்னையைத்தான் மீண்டும் நாம் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

உத்வேகம் இல்லாமலிருப்பது அதிகரித்திருக்கிறது. புற உண்டாக்கலுடன் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் முன்வரிசையில் வந்து நின்று கொண்டிருக்கின்றன. புரட்சி சம்பந்தமாக அதிகாரபூர்வமான முடிவை எடுக்க முடிகிற சூழ்நிலையில், கலை சம்பந்தமாக அதிகாரபூர்வமான முடிவு எடுக்கக்கூடிய கலைஞர்கள் இல்லை என்பதுதான் உண்மை. மக்களின் கல்வி என்ற முக்கியமான இலக்கை அடைவது என்ற கடமையைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதற்குப் பிறகு அவர்கள் அக்கறை செலுத்தியது எளிமையான விஷயங்களில். எல்லோருக்கும் புரியக்கூடிய கலையை அவர்கள் தேடினார்கள். யதார்த்தமான கலைவடிவங்கள் நிராகரிக்கப்பட்டன.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version