
சுராவின் முன்னுரை
சாராதிந்து பந்தோபாத்யாய் (Saradindu Bandupadhyay) எழுதிய வங்கமொழிப் புதினமான ‘ம்ரித ப்ரதீப்’யை ‘மண்விளக்கு’ (Mann Vilakku) என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன்.
வங்க மொழியின் மூத்த எழுத்தாளரான சாராதிந்து பந்தோபாத்யாய் 1899-ஆம் ஆண்டில் பிறந்தவர். ஏராளமான நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதியிருக்கும் அவர் திரைப்படத்துறையிலும் பணிபுரிந்திருக்கிறார்.
பல இந்தி, வங்க மொழிப் படங்களில் திரைக்கதாசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். அவரின் பல கதைகள் இந்தியிலும், வங்க மொழியிலும் திரைப்படங்களாக வந்திருக்கின்றன. அவர் எழுதிய ‘சிறியாக் கானா’ என்ற புதினத்தை சத்யஜித்ரே வங்க மொழியில் திரைப்படமாக இயக்கியிருக்கிறார். அவரின் ‘தாதர் கீர்த்தி’ என்ற சிறுகதை தருண் மஜூம்தார் இயக்க, வங்கமொழியில் படமாக வந்திருக்கிறது. கொல்கத்தா பல்கலைக்கழகம் அவருக்கு விருது வழங்கி கெளரவித்திருக்கிறது.
1970-ஆம் ஆண்டில் மரணத்தைத் தழுவிய சாராதிந்து பந்தோபாத்யாய் எழுதிய இந்த நாவலை மொழிபெயர்க்க வாய்ப்பு கிடைத்ததற்காகப் பெருமைப்படுகிறேன்.
இந்த நல்ல நூலை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com) நிறுவனத்திற்கு நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook