ஒரு காலத்தில் மனிதனாக இருந்தான்
- Details
- Category: புதினம்
- Written by சுரா
- Hits: 6639

கனமான சுவரையும் உறுதியான மேற்கூரையையும் கொண்ட இந்த போர்வீரர்கள் தங்கியிருக்கக் கூடிய கட்டிடத்திற்கு ஒரு பங்களாவிற்குரிய மதிப்பு இருந்தது. வெளியே இருக்கும் கருவேப்பிலை, நாவல் மரங்களின் நிழல் படர்ந்திருக்கும் சாலையின் வழியாக நடந்து செல்லும்போது நீங்கள் சற்று பாருங்கள். ஓ... சுவாரசியமற்றதாக இருக்கும்... வெறுப்பைத் தரக் கூடியதாக இருக்கும்.