அன்பு எங்கு இருக்கிறதோ அங்கு ஆண்டவர் இருக்கிறார்
- Details
- Category: புதினம்
- Written by சுரா
- Hits: 7193

நகரமொன்றில் செருப்பு தைக்கும் மனிதன் ஒருவன் வாழ்ந்தான். அவனுடைய பெயர் மார்ட்டின் அவ்டேயிச். ஒரு கட்டடத்தின் கீழ்ப் பகுதியில் அவனுக்கு ஒரு சிறிய அறை இருந்தது. அதன் ஒரு ஜன்னல் வழியாக தெருவைப் பார்க்கலாம். அதன் வழியாக தெருவில் நடந்து செல்பவர்களின் பாதங்களை மட்டும் ஒருவர் பார்க்கலாம். ஆனால், காலணிகளை வைத்தே மனிதர்களை அடையாளம் கண்டு பிடித்து விடுவான் மார்ட்டின்.