Lekha Books

A+ A A-

நீல வெளிச்சம் - Page 4

Neela velicham

“என்னடா முட்டாள்தனமா நடந்திருக்கே! அந்தக் கட்டடத்துல பேயோட நடமாட்டம்  இருக்கு. சொல்லப் போனால் ஆண்களைத்தான் அந்தப் பேய் பயங்கரமாப் படாதபாடு படுத்துது.''

அவளுக்கு ஆண்கள்மேல் வெறுப்பு இருக்கலாம். அப்படி என்றால் அவள் செய்வது சரிதானே! நண்பர்களில் ஒருவன் சொன்னான்:

“பார்கவி நிலையத்தை வாடகைக்கு எடுக்குறதுக்கு முன்னாடி எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கக்கூடாதா?''

நான் சொன்னேன்:

“இந்த வீடு இப்படிப்பட்டதுன்னு எனக்கு அப்போ எப்படித் தெரியும்? எனக்கொண்ணு தெரியணும். அந்தப் பொண்ணு எதுக்காக கிணத்துல விழுந்து சாகணும்?''

இன்னொரு நண்பன் கூறினான்: “வேறென்ன? காதல்தான்... அவளோட பேரு பார்கவி. வயசு இருபத்தியொண்ணு. பி.ஏ. பாசானவள். அதற்கு முன்னாடியே ஒரு ஆளுக்கும் அவளுக்கும் காதல். ஆனா, நடந்தது என்னன்னா... பார்கவியால அந்த ஏமாற்றத் தைத் தாங்கிக்க முடியல.. கிணத்துல விழுந்து உயிரை விட்டுட்டா...''

என் பயம் பெரும்பாலும் போய்விட்டது என்றே சொல்லலாம். இதுதான் அவள் ஆண்களை வெறுப்பதற்குக் காரணமா?

நான் கூறினேன்:

“பார்கவி என்னை ஒண்ணும் செய்ய மாட்டாள்.''

“எதை வச்சுச் சொல்றே?''

நான் சொன்னேன்:

“மந்திரம்! மந்திரம்!''

“அதையும் பார்க்கத்தானே போறோம்... ராத்திரி அய்யோ அய்யோன்னு அழப்போற பாரு.''

நான் ஒன்றும் பதில் பேசவில்லை.

நான் திரும்பவும் மாளிகையைத் தேடி வந்தேன். கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்தேன். பிறகு கீழே இறங்கி கிணற்றின் அருகில் சென்றேன்.

“பார்கவிக் குட்டி..'' நான் மெல்ல அழைத்தேன். “உனக்கும் எனக்கும் பழக்கம் கிடையாது. நான் இங்க தங்குறதுக்காக வந்திருக்கேன். ரொம்ப நல்ல மனிதன்னு நான் என்னைப் பற்றி நினைச்சுக்கிட்டு இருக்கேன். கல்யாணம் ஆகாத பிரம்மச்சாரி நான். உன்னைப் பற்றி உண்மைகளைப் பலரும் சொன்னாங்க. இங்க யாராவது தங்க வந்தாங்கன்னா, அவுங்களத் நீ தங்க விட மாட்டேன்னு எல்லாரும் சொன்னாங்க. ராத்திரி தண்ணீர் குழாயைத் திறந்து விட்டுருவியாம். வாசல் கதவுகளைப் படார் படார்னு அடிக்க வைப்பியாம். ஆளுகளோட கழுத்தைப் பிடிச்சு நெரிப்பியாம். நான் பார்த்த ஆளுங்க உன்னைப் பற்றிச் சொன்ன விஷயங்கள்தாம் இதெல்லாம். நான் இப்போ என்ன செய்யிறது? ரெண்டு மாச வாடகையை முன்கூட்டியே கொடுத்திட்டேன். என் கையில் இப்போ பெரிசா காசு எதுவும் இல்ல. பார்கவிக் குட்டி... உன்னோட பேர்லதானே இந்த வீடே இருக்கு! பார்கவி நிலையம்...

எனக்கு இங்கே இருந்தே வேலை செய்யணும்னு ஆசை. அதாவது... கதைகள் நிறைய எழுத வேண்டியதிருக்கு. இப்போ ஒண்ணு கேட்கட்டுமா? உனக்குக் கதைகள் பிடிக்குமா? பிடிச்சி ருந்தா, நான் எழுதுற எல்லாக் கதைகளையும் உனக்கு படிச்சுக் காட்டுறேன். என்ன புரியுதா? பார்கவிக் குட்டி... உன்கூட எனக்கு எந்த தகராறும் இல்ல. இதுவரை அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடக்கவும் இல்ல. அறியாமல் நான் ஒரு கல்லை எடுத்து கிணத்துக்குள்ள போட்டுட்டேன். தெரியாம அதைச் செஞ்சிட்டேன். இனிமேல் நிச்சயம் அதுகூடச் செய்ய மாட்டேன். என்னை மன்னிச்சிடு. நான் சொல்றதை நீ கேட்டியா பார்கவிக் குட்டி? என்கிட்ட ஒரு அருமையான க்ராமஃபோன் இருக்கு. அருமையான இருநூறு பாட்டுகள் இருக்கு. உனக்கு இசை பிடிக்குமா?''

இவ்வளவும் பேசிவிட்டு நான் வெறுமனே நின்றிருந்தேன். நான் யாரிடம் இதுவரை பேசினேன்? எதையும் விழுங்குவதற்குத் தயாராக வாய் பிளந்து காட்சியளிக்கும் கிணற்றுடனா? மரங்கள், வீடு, வாயு, பூமி, ஆகாயம், பிரபஞ்சம்... இவற்றில் யாரோடு இதுவரை நான் பேசினேன்? என் மனதில் உண்டான பாதிப்பால் இப்படி எல்லாம் பேசினேனா? ஏன் அப்படிப் பேசினேன்? என்னை நானே ஆராய்ந்தேன். அப்படி நான் பேசியதில் ஒரு மனிதத்தனம் கலந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. பார்கவி... அவளை நான் இதுவரை பார்த்ததில்லை. இருபத்தொரு வயதே ஆன இளம்பெண்! அழகி! அவள் ஒரு ஆணைத் தீவிரமாகக் காதலித்திருக்கிறாள். அவனின் மனைவியாக, வாழ்நாள் முழுவதும் சிநேகிதியாக இருக்க வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்திருக்கிறாள். ஆனால், அந்தக் கனவு...? கனவாகவே நின்றுவிட்டது. விரக்தி அவளை ஆக்கிரமித்துவிட்டது. அதோடு அவமானமும்...

“பார்கவிக் குட்டி...'' நான் சொன்னேன்: “நீ இப்படிச் செத்திருக்கக்கூடாது. உன்னை நான் குற்றம் சுமத்துறேன்னு நினைக்காதே. நீ விரும்பிய ஆண் உன்னை அந்த அளவுக்கு உண்மையா காதலிக் கல. அந்த ஆள் உன்னை விட்டுட்டு, உன்னைவிட இன்னொரு பெண்ணை அதிகமாகக் காதலிச்சிருக்கான்.

அதனால உனக்கு வாழ்க்கைமேல ஒரு வெறுப்பு உண்டாயிருச்சு. வாழ்க்கையே கசந்து போச்சு. அதுக்காக வாழ்க்கை என்பதே கசப்பானதுதான்னு சொல்லிட முடியாது. என்னைப் பொறுத்த வரை நடந்த விஷயங்கள் நடந்தவைதாம். அவை திரும்பி இன்னொரு முறை வரப்போவதில்லை.

பார்கவிக் குட்டி... நான் உன்னைக் குறை சொல்றேன்னு நினைக்காதே. உண்மையாகவே நீ காதலுக்காகத்தான் உயிரை விட்டியா? காதல்ன்றது என்ன தெரியுமா? வாழ்க்கையோட பொன்னான விடியலே காதல்தான். முட்டாள் கழுதையான உனக்கு காதலைப்பற்றி ஒண்ணுமே தெரியலைன்னு நான் சொல்றேன். ஆண்களை நீ வெறுக்கிறே பாரு.... அதுலயே இது தெரியுது. உனக்கு மொத்தத்துல ஒரே ஒரு ஆணைத்தான் தெரியும். பேச்சுக்காக எடுத்துக்குவோம். அவன் உனக்குத் துரோகம் செஞ்சிட்டான்னே வச்சுக்குவோம். அதுக்காக அவன் மாதிரியே மற்ற எல்லா ஆண்களும் ஏமாற்றுப் பேர்வழிகள்தான்னு நினைச்சா எப்படி? அப்படி நினைச்சா சரியா? தற்கொலை பண்ணிக்காம இன்னும் கொஞ்ச நாள் உயிரோட இருந்திருந்தா, நீ எடுத்த முடிவு தப்பானதுன்னு உனக்கே தெரிஞ்சிருக்கும். உன்மேல் உயிருக்குயிரா அன்பு செலுத்தவும், "என் ஈஸ்வரி...'ன்னு பாசத்தோட கூப்பிடுற துக்கும் இந்த உலகத்துல ஆண்கள் இருக்கத்தான் செய்யிறாங்க. அதுதான் நான் சொன்னேன்... உன்னோட விஷயத்தைப் பொறுத்தவரை நடந்தது நடந்ததுதான். இனிமேல் திரும்பவும் அது வரப் போறதா என்ன? பார்கவிக் குட்டி... உன்னோட வாழ்க்கையை முழுசா நான் எப்படித் தெரிஞ்சிக்கிறது?

எது எப்படியானாலும் என்னைத் தொந்தரவு செய்யாதே. நான் இதைச் சவாலா சொல்லல. கட்டளையாகவும் சொல்லல. உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்குறேன். நீ இன்னைக்கு ராத்திரியே என் கழுத்தை நெரிச்சுக் கொன்னாலும், ஏன் இப்படிச் செஞ்சேன்னு உன்னைக் கேக்குறதுக்கு இங்கே யாரும் இல்ல... கேட்க முடியுமான்னு இதுக்கு அர்த்தம் இல்ல... யாரும் இங்கே இல்லைன்றதுதான் உண்மை. ஏன்னா... எனக்கு இந்த உலகத்துல சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்ல...

 

+Novels

சபதம்

சபதம்

March 10, 2012

வேதகிரி

வேதகிரி

March 13, 2012

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

பழம்

பழம்

July 25, 2012

பர்ர்ர்!!!

பர்ர்ர்!!!

February 15, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel