Lekha Books

A+ A A-

ஒட்டகம் - Page 6

Ottagam

என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றிருந்தார் நிர்வாகி. பலவந்தமாக கதவை உடைத்து அறைக்குள் நுழைகிற வேலையில், பயமுறுத்தியபடி ஒட்டகம் அந்தக் குழந்தையை தெருவில் வீசி எறிந்து விட்டால் விஷயம் மிகவும் மோசமாகிவிடும்.

குழந்தையின் உரத்த அழுகைச் சத்தம் மீண்டும் கேட்டது. ஒட்டகம் குழந்தையைத் தாலாட்டுகிறானா, இல்லாவிட்டால் கொல்கிறானா என்று எதையும் தெரிந்துகொள்ள முடியவில்லை.

"டேய், குழந்தையை உனக்கே தர்றேன். அது பசியால இப்படியே அழுதுச்சுன்னா, செத்துப்போயிடும். நீ கதவைத் திற. நான் ஒண்ணும் செய்ய மாட்டேன்'' நிர்வாகி அமைதியான குரலில் சொல்லிப் பார்த்தார். பதில் இல்லை.

குழந்தையின் அழுகைச் சத்தம் மட்டும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது.

"அவன் அப்படி கதவை மூடிக்கிட்டு உள்ளேயே இருக்கட்டும். பசி எடுத்திருச்சுன்னா, அவனே வெளியே வந்திடுவான்'' அங்கு நின்றிருந்தவர்களில் ஒருவர் சொன்னார்.

"மேற் கூரையின் ஓட்டை விலக்கி மெதுவா உள்ளே நுழைஞ்சா என்ன?'' இன்னொரு ஆள் சொன்னார்.

"ஆள் உள்ளே போறதுக்குள்ளே அந்த மிருகம் உள்ளே நுழையிற ஆளோட கதையை முடிச்சிடுவான்'' நிர்வாகி உறுதியான குரலில் சொன்னார்: "அவன் அங்கேயே எவ்வளவு நாட்கள் இருக்கான்னுதான் பார்த்திடுவோமே!''

"அவன் விஷயம் எப்படி வேணும்னாலும் இருக்கட்டும். அந்தக் குழந்தை! அது பசியால செத்துப் போகாதா?'' ஹோட்டல் ஏஜண்ட் கணாரன் சொன்னான்.

"எது எப்படியிருந்தாலும் நாளைக்குப் பொழுது விடியட்டும். அப்போ அவனோட நடவடிக்கை மாறாம இருக்காது!''

அப்படியொரு தீர்மானித்திற்கு வந்த நிர்வாகியும் மற்ற ஆட்களும் அங்கிருந்து புறப்பட்டார்கள். ஏஜண்ட் கணாரன் அறையின் கதவுக்குப் பக்கத்தில் காவலுக்கு  இருந்தான்.

மறுநாள் காலையில் நிர்வாகியும் மற்ற ஆட்களும் பத்தாம் எண் அறைக்கு வெளியே நின்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

உள்ளே படு அமைதி.

கடைசியில் அவர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைய முடிவெடுத்தார்கள்.

அவர்கள் கதவை உடைத்து உள்ளே எட்டிப் பார்த்தார்கள்.

மேற்கூரையின் விட்டத்தில் ஒட்டகத்தின் நிர்வாணமான உயிரற்ற உடல் தொங்கிக் கொண்டிருந்தது.

அவனுடைய மார்பில் அந்தக் குழந்தை இருந்தது. அதை அவன் தான் கட்டியிருந்த பழைய துணியை அவிழ்த்து தன் மார்போடு சேர்ந்து பத்திரமாகக் கட்டியிருந்தான். படுக்கை விரிப்பை விட்டத்தில் கட்டி அதில் அவன் தொங்கியிருந்தான்.

நிர்வாகி அறையிலிருந்த அலமாரி மீது ஏறி ஒட்டகத்தின் மார்பிலிருந்து அந்தக் குழந்தையை அவிழ்த்தார்.

குழந்தையின் உடல் குளிரவில்லை. இதயம் மெதுவாக அடித்துத் கொண்டிருந்தது.

"குழந்தை இறக்கல... குழந்தை இறக்கல...'' என்று கூறியவாறு நிர்வாகியும் அங்கு குழுமியிருந்த ஆட்களும் மகிழ்ச்சியுடன் கூறியவாறு வெளியே ஓடினார்கள்.

அந்த நீளமான கழுத்து சாய்ந்து, நாக்கு வெளியே நீட்டிய கோலத்தில், பாதி திறந்த கண்களுடன் ஒட்டகத்தின் நிர்வாணமான உயிரற்ற உடல், ஜன்னல் வழியாக உள்ளே வந்த காற்றின் உதவியுடன், அந்தக் குழந்தையைத் திரும்பிப் பார்த்தது.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

மகாலட்சுமி

March 22, 2013,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

தேன் மா

தேன் மா

March 8, 2012

பசி

பசி

May 7, 2014

அக்கா

அக்கா

November 10, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel