வைரமாலை - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6904
“ஆமா... நல்லா ஞாபகத்துல இருக்கு...”
“ம்... அது என்கிட்ட இருந்து தொலைஞ்சிடுச்சு.”
“அது எப்படி? நீதான் அதை எனக்குத் திருப்பித் தந்துட்டியே!”
“அதே மாதிரி இருந்த இன்னொரு நெக்லஸைத்தான் நான் உனக்குத் திருப்பித் தந்தேன். அதனால் உண்டான கடன்களைத் தீர்க்க பத்து வருடங்கள் நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டியதாயிடுச்சு. எதுவுமே இல்லாத எங்களுக்கு அது எந்த அளவுக்கு மிகுந்த கஷ்டங்கள் நிறைந்த ஒண்ணா இருக்கும்னு உன்னால புரிஞ்சிக்க முடியும்னு நினைக்கிறேன். ஆனால், அந்தக் கடன்களெல்லாம் தீர்ந்திடுச்சு. நான் இப்போ நிம்மதியா இருக்கேன்.”
திருமதி. ஃபாராஸ்டியர் அடுத்த நிமிடம் தான் நடந்து கொண்டிருந்ததை நிறுத்தினாள். அவள் சொன்னாள் : “என் அந்த வைரக் கற்கள் பதிக்கப்பட்ட நெக்லஸுக்குப் பதிலாக நீ அதேமாதிரி இருந்த இன்னொரு நெக்லஸை எனக்கு வாங்கித் தந்ததாகவா சொன்னே?”
“ஆமாம் ... அப்போ உனக்கு அந்த விஷயமே தெரியாது... அப்படித்தானே? அது அச்சு அசலா உன்னோட நெக்லஸ் மாதிரியே இருக்கும்” - பெருமையுடன் சிறிது சந்தோஷத்துடன் அவள் புன்னகைத்தாள்.
அதைக் கேட்டு திருமதி ஃபாரஸ்டியர் அதிர்ச்சியில் உறைந்து*ய்விட்டாள். மெட்டில்டாவின் இரண்டு கைகளையும் தன்னுடைய கைகளில் வைத்துக்கொண்டு அவள் சொன்னாள்: “ஓ...! என் அப்பாவி மெட்டில்டா... நான் உனக்கு தந்த நெக்லஸ் ஒரு கவரிங் நகை... அதற்கு ஐந்நூறு ஃப்ராங்க்கிற்கு மேல்விலையே இருக்காது.”
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,