
சுராவின் முன்னுரை
‘பக்கத்து வீட்டு இளைஞன்’ (Pakkathu veettu ilaignan) - இளமை ததும்பும் இந்தக் கதையை மலையாளத்தில் படித்த நிமிடத்திலேயே அதைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். கெ.கெ.சுதாகரன் (K.K.Sudhakaran) ஒரு நூலகர். இந்த நாவலைத் தவிர, வேறு சில நல்ல நூல்களையும் இவர் எழுதியிருக்கிறார். இந்தப் புதினத்தின் கதாநாயகி ரேகா நம்மை ஆச்சரியப்பட வைக்கும் கதாபாத்திரம். அதை முழுமையாகச் செதுக்கியிருக்கிறார் சுதாகரன்.
அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆர்வம் இந்தப் புதினத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தைப் படிக்கும்போதும் நமக்கு உண்டாகும். இதன் இறுதிப் பகுதியை மொழிபெயர்க்கும்போது என் கண்களில் ஆனந்தத்தால் துளிர்த்த கண்ணீரை அடக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. புதினத்தின் வெற்றிக்கு அதுவே சான்று.
இன்றைய இளம் தலைமுறைக் கதாபாத்திரங்களைக் கொண்ட ஒரு புதினத்தை மொழிபெயர்க்க வேண்டும் என்னும் என் ஆசை இந்நூலை மொழிபெயர்த்ததன் மூலம் நிறைவேறியது குறித்து எனக்கு மகிழ்ச்சியே. இதை மொழிபெயர்க்கும்போது நானே 22 வயது இளைஞனாக மாறி இதில் வரும் கதாபாத்திரங்களுடன் சேர்ந்து பயணித்திருக்கிறேன் என்பதே ஒரு சுவாரசியமான அனுபவம்தானே! இவற்றை நீங்களும் உணர்வீர்கள் என நம்புகிறேன்.
இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook