Lekha Books

A+ A A-

முன்னேற உதவும் 365 பொன்மொழிகள் - Page 8

munnera uthavum 365ponmozhigal

71

ஒவ்வொரு மனிதனும்

ஒரு முதலாளியும்,

ஒரு வேலைக்காரனும்....

இரண்டுமேதான்.

***

72

ஒரு கவலையில் இருக்கும் மனிதன்

எவ்வளவு நாட்கள் வாழ்கிறானோ,

அவ்வளவு நாட்கள்

ஒரு சந்தோஷத்தில் திளைக்கும்

மனிதனும் வாழ்கிறான்.

***

73

அவசரத்தால்தான்

தவறுகள் உண்டாகின்றன.

எதையும் நிதானமாக

செய்வதன் மூலம்

எந்த சமயத்திலும்

அது உண்டாவதில்லை.

***

74

பணம் தன்னுடைய

வேலைக்காரனாக

இல்லையென்றால்.

அது உன்னுடைய

முதலாளியாக இருக்கும்.

***

75

காதால் கேட்கும் பாடல்கள்

இனியனவாக இருக்கலாம்.

ஆனால்,

இன்னும் கேட்காமல் இருப்பவை,

கேட்ட பாடல்களை விட

மிகவும் இனிமையானவை.

***

76

பிறரை வேதனைப்பட

செய்யாதீர்கள்.

அதே போல

மற்றவர்களிடமிருந்து

வேதனைகளை

வாங்கவும் செய்யாதீர்கள்.

***

77

என்ன காரணத்திற்காக என்று

உனக்கு தெரியாமல் இருக்கும் பட்சம்,

நீ ஒரு மனிதனைப் பற்றி கேவலமாக

எந்த சமயத்திலும் பேசாதே.

அது ஒரு காரணத்திற்காகத்தான் என்று

உனக்கு தெரியும் பட்சம்,

உனக்குள் நீயே கேட்டுக் கொள்:

'நான் ஏன் இதை கூற வேண்டும்?'

***

78

நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில்

மிருகத்தனமாக நடந்து கொள்ள தயாராக இருக்கிறோம்.

ஒரு கெட்ட மனிதனுக்கும், ஒரு நல்ல மனிதனுக்குமிடையே

உள்ள வித்தியாசமே - அதை தேர்ந்தெடுப்பதற்கான

காரணத்தில்தான் இருக்கிறது.

***

79

இந்த வாழ்வின் பெரும்பாலான

நிழல்கள் நம்முடைய சொந்த சூரியோதயத்தில்

நிற்பதால் உண்டாகுபவைதான்.

***

80

ஒரு சிங்கத்தின் கர்ஜனையை விட

ஒரு அழகான பெண்ணின் முனகள்

சத்தம் நீண்ட தூரம் கேட்கும்.

***

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel