Lekha Books

A+ A A-

உலகப் புகழ் பெற்ற மூக்கு

ullaga pugal petra mooku

ச்சரியத்தை உண்டாக்கும் ஒரு வினோதமான செய்தி அது. ஒரு மூக்கு அறிவாளிகள் மத்தியிலும் தத்துவவாதிகள் மத்தியிலும் பெரியவொரு விவாதத்திற்குரிய விஷயமாக ஆகியிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற மூக்கு.

அந்த மூக்கைப் பற்றிய உண்மையான வரலாறு இங்கு பதிவு செய்யப்படுகிறது.

வரலாறு ஆரம்பமாகும்போது அவனுக்கு இருபத்து நான்கு வயது. அதுவரை அவனை யாருக்கும் தெரியாது. இந்த இருபத்து நான்கு வயதுக்கு ஏதாவது சிறப்பு இருக்கிறதோ என்னவோ! ஒன்று மட்டும் உண்மை. உலக சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டினால் பெரும்பாலான மேதைகளின் இருபத்து நான்காவது வயதில் சில முக்கிய விஷயங்கள் நடந்திருப்பதை நாம் பார்க்கலாம். வரலாற்று மாணவர்களிடம் இதைப் பற்றிக் கூறவேண்டிய தேவை இல்லையே!

நம்முடைய வரலாற்று நாயகன் ஒரு சமையல்காரனாக இருந்தான். அதாவது... குக். குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு அவன் ஒன்றும் அறிவாளியல்ல. எழுதவும் படிக்கவும் தெரியாது. சமையலறைதானே அவனுடைய உலகம்! அதற்கு வெளியே உள்ள விஷயங்களைப் பற்றி அவனுக்குச் சிறிதுகூட தெரியாது. அவற்றைத் தெரிந்து அவனுக்கு என்ன ஆகப்போகிறது?

மூக்குமுட்டச் சாப்பிடுவது, சுகம் கிடைக்கிற பொடி போடுவது, தூங்குவது, மீண்டும் எழுவது, சமையல் வேலைகளை மீண்டும் தொடங்குவது - இவைதான் அவனுடைய தினசரிச் செயல்கள்.

மாதங்களின் பெயர் அவனுக்குத் தெரியாது. சம்பளம் வாங்க வேண்டிய நாள் வரும்போது அவனுடைய தாய் வந்து சம்பளத்தை வாங்கிக் கொண்டு போவாள். பொடி தேவைப்படும் பட்சம், அவனின் தாயே அதை வாங்கியும் கொடுப்பாள். இப்படி சந்தோஷத்துடனும் முழுமையான திருப்தியுடனும் தன் வாழ்க்கையை அவன் நடத்திக் கொண்டிருந்தபோது அவனுக்கு இருபத்து நான்கு வயது ஆகிறது. அப்போதுதான் அந்த ஆச்சரியம் நடக்கிறது.

வேறொன்றும் விசேஷமாக நடந்துவிடவில்லை. மூக்கிற்கு மிகவும் நீளம் கூடி விட்டது. வாயைத் தாண்டி தாடி வரை அது நீளமாக வளர்ந்திருக்கிறது.

அந்த வகையில் அந்த மூக்கு தினமும் வளர்ந்து கொண்டிருந்தது. அது மறைத்து வைக்கக் கூடிய ஒரு விஷயமா என்ன? ஒரே மாதத்தில் அது தொப்புள் வரை வளர்ந்துவிட்டது. அதே நேரத்தில், அதனால் ஏதாவது கேடு உண்டாகிவிட்டதா என்ன? அது எதுவுமே இல்லை. சுவாசிக்கலாம். பொடி போடலாம். எல்லாவித வாசனைகளையும் அடையாளம் கண்டுபிடிக்கலாம். குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி எந்தவொரு பிரச்சினையுமில்லை.

ஆனால், இப்படிப்பட்ட மூக்குகள் வரலாற்றின் பக்கங்களில் இருக்கலாம்- இங்கு மங்குமாக. அதே நேரத்தில் அப்படிப்பட்ட புகழ்பெற்ற ஒன்றா இந்த மூக்கு? இந்த மூக்கு காரணமாக அந்த அப்பிராணிச் சமையல்காரனை வேலையை விட்டு அனுப்பி விட்டார்கள்.

என்ன காரணம்?

வேலையை விட்டு விலக்கப்பட்ட தொழிலாளியை மீண்டும் வேலையில் சேர்க்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்ய ஒரு சங்கத்தைச் சேர்ந்தவர்களும் முன்னால் வரவில்லை. அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்தக் கொடுமையான அநீதிக்கு முன்னால் கண்களை மூடிக்கொண்டிருந்தன.

‘எதற்கு அந்த ஆளை வேலையிலிருந்து போகச் சொன்னாங்க?’ - மனிதாபிமானம் கொண்டவர்கள் என்று கூறப்படும் யாரும் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. எங்கு சென்றார்கள் அப்போது அறிவாளிகளும் தத்துவவாதிகளும்?

பாவம் தொழிலாளி! பாவம் சமையல்காரன்!

வேலை எதனால் இல்லாமற் போனது என்பதற்கான காரணத்தை யாரும் அவனிடம் கூற வேண்டியதில்லை. வேலைக்கு வைத்திருந்த இல்லத்தைச் சேர்ந்தவர்களுக்கு நிம்மதி இல்லாமல் போனது தான் காரணம். மூக்கனைப் பார்ப்பதற்காக, மூக்கைப் பார்ப்பதற்காக, இரவு-பகல் எந்நேரமும் மக்கள் கூட்டம்! புகைப்படம் எடுப்பவர்கள், நேர்முக உரையாடல்கள், வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி, பத்திரிகையாளர்கள்... எந்நேரமும் சத்தங்களை உண்டாக்கிக் கொண்டிருந்த மானிடர்களின் கடல்!

அந்த வீட்டிலிருந்து பல பொருட்கள் காணாமல் போய் விட்டன. பதினெட்டு வயது கொண்ட அழகான இளம் பெண்ணைத் தள்ளிக் கொண்டு போவதற்கும் முயற்சி நடந்தது.

அந்த வகையில் வேலையை இழந்த அந்தச் சமையல்காரன் தன்னுடைய எளிமையான குடிசைக்குள் பட்டினி கிடந்த போது, ஒரு விஷயம் அவனுக்கு நன்றாகப் புரிந்தது. அவனும் அவனுடைய மூக்கும் மிகப் பெரிய புகழைப் பெற்றிருக்கிறார்கள்!

தூர இடங்களிலிருந்துகூட மனிதர்கள் அவனைப் பார்ப்பதற்காக வந்தார்கள். நீளமான மூக்கைப் பார்ததவாறு ஆச்சரியப்பட்டு அவர்கள் நின்றார்கள். சிலர் அதைத் தொட்டுப் பார்த்தார்கள். ஆனால் ஒருவர்... ஒருவர்கூட “நீங்க எதுவும் சாப்பிடலையா? ஏன் இப்படி சோர்வடைஞ்சி போயிருக்கீங்க?” என்று கேட்கவேயில்லை. ஒருமுறை பொடி போடுவதற்குக்கூட அந்த வீட்டில் ஒரு பைசா இல்லை. பட்டினி கிடக்கும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் மிருகமா அவன்? முட்டாளாக இருந்தாலும் அவனும் மனிதன்தானே? அவன் தன்னுடைய வயதான தாயை அழைத்து மெதுவான குரலில் சொன்னான்:

“இவங்க எல்லோரையும் வெளியே அடிச்சி விரட்டிக் கதவை மூடுங்க”

அவனுடைய தாய் தந்திரமாக அவர்கள் எல்லோரையும் வெளியே அனுப்பி, கதவை மூடினாள்.

அன்றிலிருந்து அவர்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. அவனுடைய தாய்க்கு லஞ்சம் தந்து சிலர் மகனின் மூக்கைப் பார்க்க ஆரம்பித்தார்கள். மக்கள் என்பது முட்டாள்களின் கூட்டம்தானே! இந்த லஞ்சம் கொடுக்கும் செயலுக்கு எதிராக சில நீதிமான்களான அறிவு ஜீவிகளும் தத்துவவாதிகளும் சத்தமாகக் குரலை உயர்த்தினார்கள். ஆனால், அரசாங்கம் இந்த விஷயத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைக் காதில் போட்டுக் கொண்டதாகவும் காட்டிக் கொள்ளவில்லை. அரசாங்கத்தின் இந்தக் கண்டு கொள்ளாத போக்கைக் கண்டித்து குற்றம் சுமத்திய பலரும், அரசாங்கத்திற்கு எதிராகப் பல ஆர்ப்பாட்டங்கள் செய்யும் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஒன்று சேர்ந்தனர்.

மூக்கனின் வருமானம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. அதற்கு மேல் என்ன சொல்ல இருக்கிறது? எழுத்து என்றால் என்னவென்று தெரியாத அந்தச் சமையல்காரன் ஆறே வருடங்களில் பல லட்சங்களுக்குச் சொந்தக்காரனாக ஆகிவிட்டான்.

அவன் மூன்று திரைப்படங்களில் நடித்தான். ‘தி ஹ்யூமன் சப்மரைன்’ என்ற டெக்னிக் கலரில் எடுக்கப்பட்ட திரைப்படம் எத்தனைக் கோடி பார்வையாளர்களின் மனதை ஈர்த்தது! வானுலகத்தைச் சேர்ந்த அபூர்வ மனிதன்! ஆறு மிகப்பெரிய கவிஞர்கள் மூக்கனின் பெருமைகளைப் புகழ்ந்து பாடி மகா காவியங்களை உருவாக்கினார்கள். ஒன்பது புகழ்பெற்ற இலக்கியவாதிகள் மூக்கனின் வாழ்க்கை வரலாற்றை எழுதி பணத்தையும் புகழையும் அடைந்தார்கள்.

மூக்கனின் இல்லம் விருந்தினர்கள் வரக்கூடிய ஒரு இடமாகவும் ஆகிவிட்டது. யாராக இருந்தாலும், அவர்களுக்கு எப்போதும் அங்கு உணவு உண்டு. சிறிது பொடியும் போட்டுக் கொள்ளலாம்.

அந்தச் சமயத்தில் அவனுக்கு இரண்டு செக்ரட்டரிகள் வேறு இருந்தார்கள். இரண்டு அழகிய இளம்பெண்கள். நன்கு படித்தவர்கள்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

தோழி

தோழி

August 8, 2012

பேய்

May 28, 2018

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel