
எவன் ஏழைகளுக்கு
கடன் தருகிறானோ,
அவனுக்கு
கடவுளிடமிருந்து
வட்டி கிடைக்கும்.
***
வாழ்வின் ரகசியம் என்பது -
நீ என்ன நினைக்கிறாயோ,
அதை செய்யாமல்
இருப்பது அல்ல.
எதை செய்யப் போகிறாயோ,
அதை விரும்புவதுதான்.
***
அதிர்ஷ்டத்தின்
விளையாட்டுதான்
ஒரு மனிதனின்
வாழ்க்கை.
***
மனித வாழ்க்கை மீது
ஆண் கொள்ளும் விருப்பம்
ஒரு பகுதியாக இருக்கலாம்.
ஆனால், முழு இருத்தலுமே
பெண்ணுக்கு
அதில்தான் இருக்கிறது.
***
பழக்க, வழக்கங்களும்
சம்பிரதாயங்களும்
வேறுபடலாம்.
ஆனால், மனிதனின்
இயற்கை குணம் ஒன்றுதான்.
***
கடவுள்
எவற்றையெல்லாம்
ஒன்று சேர்த்து வைத்திருக்கிறாரோ,
அதை மனிதன்
பிரிக்காமல் இருக்க வேண்டும்.
***
ஒரு மனிதன்
ஒரு பெண்ணை காதலிக்க,
ஒரு பெண் ஒரு ஆணைக் காதலிக்க -
அப்போது சொர்க்கத்திலிருந்து
தேவதைகள் புறப்பட்டு வந்து
அவர்கள் இருக்கும் வீட்டில் அமர்ந்து,
அவர்களின் சந்தோஷத்திற்காக பாடுவார்கள்.
***
பிறரின் வீழ்ச்சியிலிருந்து,
நீ தவிர்க்க வேண்டிய
பாவங்கள் என்ன என்பதைக்
கற்றுக் கொள்.
***
இது காலி பர்ஸ்தான்.
ஏனென்றால்,
இது முழுக்க
மற்ற மனிதர்களின்
பணம்தான் இருக்கிறது.
***
கடவுள்
எல்லா இடங்களிலும்
இருக்க முடியாது.
அதனால்தான் அவர்
அன்னைமார்களைப் படைத்தார்.
***
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook