Lekha Books

A+ A A-

பியாண்ட் தி நெக்ஸ்ட் மவுண்டன் - Page 3

கெனடாவின் Torontoவிலிருந்து ஒரு கடிதம் அவனைப் பற்றி விசாரித்து வருகிறது. கடிதத்தை எழுதியிருப்பவர் Watkin Roberts., அடுத்த சில நாட்களில் அவன் புகை வண்டி மூலம் டொரான்டோவிற்குப் பயணமாகிறான்.

Watkin Roberts இன் அறைக்கு முன்னால் அவன் காத்திருக்கிறான். அப்போது தான் சிறுவனாக இருந்த காலத்தை அவன் நினைத்துப் பார்க்கிறான். தன் கிராமத்திற்கு எந்தக் காலத்திலோ வந்து, பைபிளை மக்களிடம் பரப்பிய Mr.Young Manஐ அவன் சந்திக்கப் போகிறான்- வாழ்க்கையிலேயே முதல் தடவையாக.

அப்போது பக்கவாதத்தால் ஒரு பக்கம் பாதிக்கப்பட்ட ஒரு பெரியவர் அங்கு மாடிகளில் ஏறி வருகிறார். அவர்தான் Watkin Roberts. அவருடன் தேநீர் அருந்தியவாறு 'கடவுள் வெள்ளைக்காரர் அல்ல என்று கூறியவர் நீங்கள். நான் Chawngaவின் மகன். காட்டில் இருக்கும் ஒவ்வொரு இலையும் உங்களின் பெயரைக் கூறும். இந்தியாவின் சுதந்திரம் எங்களுக்கு மத சுதந்திரத்தை அளித்திருக்கிறது. இப்போது எங்களின் மலையில் 100 தேவாலயங்கள் இருக்கின்றன. நாங்கள் உங்களின் பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறோம்' என்று கூறும் ரோச்சுங்கா, பாடல் வரிகளைப் பாடுகிறான். அவனையே புன்னகையுடன் பார்க்கிறார் Watkin Roberts.

மணிப்பூர் மலைப் பகுதி-

ஒரு பெரிய பார்சல் வர, அதை படகில் வைத்து செலுத்துகிறான் Chawnga. அவை முழுவதும் பைபிள்கள்- Hmar மொழியில் மொழி பெயர்க்கப்பட்டவை.

உயரமான மலைப் பகுதி-

கையில் 'புதிய ஏற்பாடு' நூலுடன் உற்சாகத்துடன் நடந்து செல்கிறான் Chawnga. உணர்ச்சி வசப்பட்டு, தலையைத் தரையில் வைத்து, மண்டி போட்டு வணங்குகிறான். கடவுளுக்கு அவன் நன்றி கூறுகிறான்- அவன் ஆசைப்பட்டது அதுதானே!

ரோச்சுங்கா கேட்டுக் கொண்டபடி, தன் அண்ணனின் மூலம் தந்தையின் அனுமதியை, அவனைத் திருமணம் செய்து கொள்வதற்கு பெற்று விடுகிறாள் Mawii. அவள் காத்திருக்க, ரோச்சுங்கா வருகிறான். இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது.

பிரதம அமைச்சரிடமிருந்து ரோச்சுங்காவிற்கு ஒரு கடிதம் வருகிறது. மறுநாள் மாலை 3 மணிக்கு அவனை வரும்படி அவர் கூறியிருக்கிறார். பிரதம அமைச்சர் நேருவை அவன் போய் பார்க்கிறான். மலை வாழ் மக்கள் பயன்படும் வகையில் அவனுக்கு அரசாங்கத்தின் சார்பாக ஒரு பொறுப்பான பதவியை வழங்க தான் திட்டமிட்டிருப்பதாகவும், ஆனால் அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவை என்றும் அவர் கூறுகிறார். ஆனால், குடியரசுத் தலைவர் அதை நிராகரித்து விடுகிறார். ஸ்காட்லேண்ட், அமெரிக்கா ஆகிய இடங்களில் மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கற்றதாலும், பைபிளை Hmar மொழிக்கு மொழி பெயர்த்ததாலும், அவனை வெள்ளைக்காரர்களின் தூதுவன் என்று அவர் குற்றம் சாட்டுகிறார். அந்த மன வேதனையுடன், அவன் அங்கிருந்து வெளியேறுகிறான்.

பசுமையான மலைப் பகுதி. ரோச்சுங்கா நின்றிருக்கிறான். Mawii அவனை நோக்கி வருகிறாள். அவனுக்கு அருகில் அவள் புன்னகையுடன் வர, இருவரும் சந்தோஷத்துடன் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் படம் முடிவடைகிறது.

இப்போது வர்ணனையாளரின் குரல் மட்டும்-

ரோச்சுங்காவும், Mawiiயும் சேர்ந்து 80 பள்ளிக் கூடங்களையும், ஒரு மருத்துவமனையையும், ஒரு Vocational Training Centreஐயும் வட கிழக்கு இந்திய மக்களுக்காக உண்டாக்கினார்கள்.

இன்று 85 சதவிகித Hmar இன மக்களுக்கு படிக்கவும், எழுதவும் தெரியும்.

1972ஆம் ஆண்டிலிருந்து பலரின் ஆதரவுடன், கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து இலட்சக்கணக்கான பைபிள்களை இந்தியாவின் பெரும் நகரங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல- பாகிஸ்தான், பர்மா, இலங்கை, ஃபிலிப்பைன்ஸ், தாய்வான், தாய்லாண்ட், சிங்கப்பூர், ஜிம்பாப்வே, ஆஃப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய நாடுகளில் உள்ளவர்களுக்கும் இலவசமாக அனுப்பி வைத்தனர்.

அதற்கு என்றுமே முடிவு இல்லை. இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel