Lekha Books

A+ A A-

தி குட் ரோட்

The Good Road

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

தி குட் ரோட் - The Good Road

(குஜராத்தி மொழி திரைப்படம்)

2013ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். அந்த ஆண்டில் நடைபெற்ற ஆஸ்கார் திரைப்பட விழாவிற்காக இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஒரே படம் இதுதான். அந்த ஆண்டின் சிறந்த குஜராத்தி மொழி படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய விருதை இப்படம் பெற்றது.

Gyan Correa இயக்கிய இந்தப் படம் `hyper link format' என்ற உத்தியை பயன்படுத்தி எடுக்கப்பட்டது. அதாவது - ஒரு தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் கதையில், பல கிளைக் கதைகளும் அதனுடன் இணைக்கப்பட்ட திரைக்கதை. குஜராத்தின் Kutch பகுதியில் உள்ள ஒரு சிறிய நகரத்திற்கு அருகில் இருக்கும் கிராமப் பகுதிகளைத் தொட்டுக் கொண்டு ஓடும் தேசிய நெடுஞ்சாலைதான் இந்தப் படத்தின் கதை நடைபெறும் இடம்.

இந்தப் படத்தில் மொத்தம் மூன்று தனித் தனி கதைகள். ஒவ்வொரு கதையும் ஒன்றோடொன்று சம்பந்தப்படுத்தப்படுகின்றன. எப்படி?

பாப்பு- ஒரு லாரி ஓட்டுநர். தன்னுடைய பெற்றோரைக் காப்பாற்றிக் கொண்டு, குடும்பத்தையும் காப்பாற்றுவதென்பது அவனுடைய சக்திக்கு மீறிய ஒரு செயலாக இருக்கிறது. அவன் என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறான். அந்த நேரத்தில் அவனுக்கு ஒரு திட்டம் தீட்டப்பட்டு தரப்படுகிறது. அதன்படி செயற்கையாக ஒரு விபத்து நடத்தப்பட வேண்டும். அந்த  விபத்தில் பாப்பு இறந்து விடுவான். பிறகு என்ன? இன்சூரன்ஸ் பணம் வந்து சேரும். இது படத்தின் முதல் கதை.

இரண்டாவது கதை இது :

 டேவிட், கிரண் இருவரும் ஒரு வசதி படைத்த நகரத்து தம்பதிகள். அவர்கள் விடுமுறையில் தங்களின் மகன் ஆதித்யாவுடன் தங்களுடைய காரில் நெடுஞ்சாலையில் பயணிக்கிறார்கள். டேவிட் காரை ஓட்ட, அவனுக்கு அருகில் கிரண் அமர்ந்து கண்களை மூடி தூங்கியவாறு பயணிக்கிறாள். அவர்களுக்குப் பின்னால் இருக்கும் இருக்கையில் அமர்ந்திருந்த அவர்களுடைய செல்ல மகன் ஆதித்யாவும் தூங்கிக் கொண்டு வருகிறான். நெடுஞ்சாலையிலிருக்கும் ஒரு பெட்ரோல் பங்கில் கார் நிற்கிறது. டேவிட் கீழே இறங்கி பங்கிற்குள் இருக்கும் கடையில் என்னவோ வாங்கிக் கொண்டிருக்கிறான். அப்போது பின் இருக்கையில் படுத்திருந்த ஆதித்யா மெதுவாக எழுந்து கதவைத் திறந்து கீழே இறங்குகிறான். அவன் இறங்கியதை கண்களை மூடி முன் இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த அவனுடைய தாய் கவனிக்கவில்லை. சிறிது தூரம் நடந்து செல்கிறான் ஆதித்யா. அங்கு ஒரு நாய்க் குட்டி வாலை ஆட்டிக் கொண்டு நின்று கொண்டிருக்கிறது. அதைத் தடவியவாறு அவன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அந்த இடத்திலிருந்து கடையில் நின்று கொண்டிருக்கும் ஆதித்யாவின் தந்தை டேவிட் காட்டப்படுகிறான்.

டேவிட் வந்து காரின் கதவைத் திறக்கிறான். அப்போதும் அவன் மனைவி கண்களை மூடிய நிலையிலேயே இருக்கிறாள். அவளை அவன் எழுப்பவில்லை. தன் இருக்கையில் வந்து அமர்கிறான். பின் இருக்கையில் தன் மகன் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்ற நினைப்பு அவனுக்கு. காரை 'ஸ்டார்ட்' செய்கிறான். கார் இரைச்சலுடன் அங்கிருந்து கிளம்பி, நெடுஞ்சாலையில் போய் சேர்கிறது. 

கார் கிளம்பிச் செல்வதை நாயுடன் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் ஆதித்யா பார்க்கிறான். கையை உயர்த்தி கத்துகிறான். அதை அவனுடைய தந்தை பார்க்கவில்லை. கார் வேகமாக அங்கிருந்து பயணிக்க, என்ன செய்வது என்று தெரியாமல் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நின்றிருக்கிறான் பையன். 

அங்கிருக்கும் ஒரு மனிதர் சிறுவனைப் பார்க்கிறார். சிறுவனை அங்கு விட்டுவிட்டு, பெற்றோர்கள் காரில் கிளம்பிச் சென்று விட்ட தகவலை அவர் தெரிந்து கொள்கிறார். இப்போது ஒரு `நேஷனல் பெர்மிட்' கொண்ட ஒரு லாரி அங்கு வந்து நிற்கிறது. நாம் ஏற்கெனவே கூறிய பாப்பு ஓட்டுநராக இருக்கும் லாரிதான் அது. முகத்தில் ஏகப்பட்ட கவலையுடனும், நீண்ட தூரம் லாரியை ஓட்டியதால் உண்டான களைப்புடனும் அவன் அமர்ந்திருக்கிறான். அவனுக்கு அருகில் உதவியாளராக ஒரு இளைஞன். பாப்புவிடம் பையனை ஒப்படைக்கும் பங்கில் இருந்த ஆள் `இந்த பையனோட அப்பாவும், அம்மாவும் காரில் கிளம்பிப் போயிட்டாங்க. தேசிய நெடுஞ்சாலையில் எங்காவது காரை நிறுத்தி விட்டு, கலங்கிப் போய் நின்று கொண்டிருப்பார்கள். இந்தச் சிறுவனை அவர்களிடம் ஒப்படைத்து விடு' என்று கூறுகிறார். அரை மனதுடன் அதற்கு ஒத்துக் கொண்ட பாப்பு, அங்கிருந்து லாரியைக் கிளப்புகிறான். க்ளீனர் இளைஞனுக்கும், ஓட்டுநர் பாப்புவிற்கும் நடுவில் எதைப் பற்றியும் கவலைப் படாததைப் போல தைரியமாக அமர்ந்திருக்கிறான் சிறுவன் ஆதித்யா.

தேசிய நெடுஞ்சாலையில் லாரி விரைந்து போய்க் கொண்டிருக்கிறது. லாரி என்றாலே என்னவென்று தெரியாமல் வளர்ந்த, வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த ஆதித்யா அழுக்கடைந்த நிலையில் இருக்கும் லாரியின் கேபினில் அழுக்கடைந்த ஆடைகளுடன் காட்சியளிக்கும் ஓட்டுநருக்கும், க்ளீனருக்கும் நடுவில் அமர்ந்து தன்னுடைய புதுமைப் பயணத்தைத் தொடர்கிறான். 

டேவிட்டும், அவன் மனைவி கிரணும் தேசிய நெடுஞ்சாலையில் மேலும் சில கிலோ மீட்டர் பயணிக்கிறார்கள். ஒரு இடத்தில் செல்லும்போது, டேவிட் தன் மகன் ஆதித்யாவை அழைக்கிறான். பின்னாலிருந்து எந்த பதிலும் இல்லை. திரும்பவும் அழைக்கிறான். இப்போதும் பதில் இல்லை. இதற்குள் கிரணும் கண் விழிக்கிறாள். இருவரும் திடுக்கிட்டு பின்னால் பார்க்கிறார்கள். பின் இருக்கை காலியாக இருக்கிறது. பையன் இல்லை. அவ்வளவுதான்- ஆடிப் போய் விடுகிறார்கள்.

டேவிட் நெடுஞ்சாலையில் இருக்கும் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் காரைக் கொண்டு போய் நிறுத்துகிறான். அங்கு விஷயத்தைக் கூறுகிறான். `வழியில் எங்காவது காரை நிறுத்தினீர்களா?' என்று இன்ஸ்பெக்டர் கேட்க, தான் காரை நிறுத்திய இடத்தை டேவிட் கூறுகிறான். உடனே இன்ஸ்பெக்டர் `காரும், உங்களுடைய மனைவியும் இங்கேயே இருக்கட்டும். நான் கான்ஸ்டபிளை அனுப்புகிறேன். அவர் டூ வீலர் வைத்திருக்கிறார். அவருக்குப் பின்னால் நீங்கள் அமர்ந்து, வந்த வழியிலேயே செல்லுங்கள், உங்கள் பையனைத் தேடிச் செல்வதற்கு அதுதான் வசதியாக இருக்கும்' என்கிறார். அதைத் தொடர்ந்து கான்ஸ்டபிளும், அவருக்குப் பின்னால் டேவிட்டும் சிறிய டூ வீலரில் அமர்ந்து தேடும் பயணத்தைத் தொடங்குகிறார்கள். வந்த வழியிலேயே திரும்பவும் டூ வீலரில் மகனைத் தேடியபடி பயணிக்கிறான் டேவிட்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel