ஆர்டினரி - Page 3
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 5705
தேவன் பேருந்தில் அடிபட்டானா? இல்லை… அதற்கு முன்பு யாரோ அடித்து, அவனை சாலையில் போட்டிருந்தார்களா? அந்த ஜீப் டிரைவர் தேவனை ஏன் மருத்துவமனையில் சேர்க்கவில்லை? அவனைக் கொன்று குட்டையில் வீசியது யார்? இரவியின் நிலைமை அதற்குப் பிறகு என்ன ஆனது? கண்டக்டரை பேருந்தை இயக்கச் செய்து விட்டு, போதையில் இருந்த ஓட்டுனர் சுகு என்ன செய்தான்? கொலைகாரப் பட்டம் பெற்றிருக்கும் இரவி மீது கல்யாணி கொண்ட காதல் என்ன ஆனது?
இந்த கேள்விகள் அனைத்திற்கும் மிகவும் அருமையாக பதில் கூறுகிறது ‘ஆர்டினரி.’ ‘கவி’ என்ற அந்த மலைப் பிரதேசத்திற்கு பத்தனம்திட்டயிலிருந்து தினமும் ஓடிக் கொண்டிருக்கும் அந்த ‘ஆர்டினரி’ பேருந்தையும், அதில் பயணிக்கும் பயணிகளையும் வைத்து இப்படி ஒரு திருப்பங்களும், மர்ம முடிச்சுகளும், எதிர்பாராத சம்பவங்களும், சஸ்பென்ஸ் நிறைந்த க்ளைமாக்ஸும் உள்ள ஒரு நல்ல படத்தைத் தர முடியும் என்பதைச் செயல் வடிவில் காட்டிய இயக்குநர் சுஜீத்திற்கு – ஒரு சபாஷ்!
அருமையான திரைக்கதை (நிஷாத் கே.கோயா, மனு பிரசாத்).
இயக்குநர் சுஜீத்தே கதையையும் எழுதியிருக்கிறார்.
வித்யா சாகரின் மிகச் சிறந்த இசையும், பாடல்களும் படத்திற்கு ப்ளஸ் பாய்ண்ட்.
ஃபைஸல் அலியின் ஒளிப்பதிவு – ஏ ஒன்! ‘கவி’ என்ற அந்த மலைப் பகுதி கிராமத்தை நம் இதயத்திற்குள் உலாவ விட்டதற்காக நாம் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
பேருந்தின் நடத்துனராக குஞ்சாக்கோ போபனும், ஓட்டுனராக பிஜுமேனனும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். Beautiful combination!
கதாநாயகி கல்யாணியாக வரும் Shritha Sivadas- உண்மையாகவே ஒரு அழகான தேவதைதான்! இயல்பான சிரிப்பு, இயற்கையான நடிப்பு!
வில்லனாக வரும் Asif Ali- தேவையற்ற செயற்கைத்தனமான நடிப்பு! மிகை என்று கூட கூறலாம்.
வேணு மாஸ்டராக வரும் லாலு அலெக்ஸ், ஆசானாக வரும் சலீம்குமார், குடிகார வக்கச்சனாக வரும் பாபுராஜ்- அனைவரும் பாத்திரங்களுக்கு தங்களின் அனுபவ நடிப்புத் திறமையால் உயிர் தந்திருக்கிறார்கள்.
‘கவி’ என்ற கவித்துவமான மலை உச்சி கிராமத்தையும், அங்கு பயணிக்கும் ‘ஆர்டினரி’ பேருந்தையும், அதன் ஓட்டுனர் மற்றும் நடத்துனரையும், பயணிகளையும், கல்யாணியும்) நம்மால் எப்படி மறக்க முடியும்?
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,