Lekha Books

A+ A A-

கன்யாகுமாரி - Page 12

kanyakumari

அவன் வேறு ஏதோ பொருளை எடுத்துக் காட்ட முயலும்போது அவள் கடையை விட்டுவெளியே வருகிறாள். அவளுக்கு முன்னால் ஜெயன் நின்றிருக்கிறான்.

ஜெயன்:   ஸாரி! நேத்தே கேக்கணும்னு நினைச்சேன். யுனிவர்ஸிட்டி காலேஜ்ல நீங்க படிச்சீங்களா?

பெண்:     இல்லை.

ஜெயன்:   எங்கேயோ பார்த்திருக்கோம்ன்றது மாதிரி மனசுல பட்டது. என் பேரு ஜெயன்...

‘ரஜனி!’

கிழவர் அழைப்பதைக் கேட்டு, அவளுடைய முகத்தில் அதிர்ச்சி. திரும்பிப் பார்த்தபோது கிழவர் மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு அவளுக்குப் பின்னால் நின்றிருக்கிறார்.

கிழவர்:    ப்ரேக்ஃபாஸ்டுக்கு நேரம் தள்ளியிருச்சுன்னா எனக்கு வயித்துல வலி வந்துடும்ன்ற விஷயம் உனக்குத் தெரியும்ல?

பெண்:     சரி... போகலாம்.

கிழவர்:    வேண்டாம்... சல்லாபம் தொடரட்டும்.

கிழவர்:    (அவன் கேட்கட்டும் என்று) ஒரு புடவையோட நிறத்தைப் பார்த்துட்டா போதும், அதுக்குப் பின்னாடி அலைய ஆரம்பிச்சிடுறானுங்க. குட் ஃபார் நத்திங் ஃபெல்லோஸ்!

பெண்:     மெதுவா பேசுங்க. அவர் காதுல விழுந்துடப் போகுது.

கிழவர்:    (உரத்த குரலில்) கேட்டா என்ன? தலையை எடுத்திடுவானா? எங்கே போனாலும் இந்த மாதிரி ஆளுங்களோட தொந்தரவைத் தாங்க முடியல...

நடக்கிறார்கள்.

ஜெயன் அவர்கள் போவதைப் பார்த்தவாறு தனியாக நின்றிருக்கிறான்.

ஜெயன்:   (தனக்குள்) ரஜனி... ரஜனி... எங்கே இவளைப் பார்த்திருப்பேன்...? எங்கேன்னே ஞாபகத்துல வரமாட்டேங்குதே!

34

சூரிய அஸ்தமனத்தின் ஆரம்பம்.

கடலுக்குப் பக்கத்தில் ஒரு பாறை மேல் அமர்ந்திருக்கிறார் சாமியார்.

ரிக்வேத சுலோகமோ சந்தியா வந்தனமோ ஏதோ ஒன்றைப் பாடுகிறார் சாமியார்.

அஸ்தமனத்தைப் பார்க்க வந்திருக்கும் சுற்றுலாப் பயணிகள்.

35

டகுகள் நிறுத்தும் இடம்.

கருங்கல்லில் வேலை செய்யும் ஆட்களை ஏற்றி வருகிற படகு, அது நிற்கும் இடத்திற்கு வருகிறது. கறுத்த உடம்பையும், கருங்கல்லின் உறுதியையும் கொண்ட பணியாளர்கள் கூட்டமாக படகிலிருந்து இறங்குகிறார்கள்.

அந்தக் கூட்டத்தில் சங்கரனும் இருக்கிறான்.

சங்கரன் நடக்கிறான். பாதையிலிருந்து கடற்கரையில் கால் வைக்கும்போது நின்று பார்க்கிறான்.

ஆங்காங்கே சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பதற்காக வந்திருக்கும் மக்கள் அமர்ந்திருக்கிறார்கள்.

அந்தக் கூட்டத்தில் இங்குமங்குமாய் ஓடி விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்- சிறுமிகள், பொருட்கள் விற்பவர்கள் ஆகியோரும் இருக்கிறார்கள். அவனின் கண்கள் பார்வதியைத் தேடுகின்றன.

மணலில் இருபதடி தூரம் நடந்த அவன் கடற்கரையில் அவளைத் தேடுகிறான்.

சாமியாரின் குரல்:    சீக்கிரமே வேலை முடிஞ்சிருச்சா?

சங்கரன் திகைத்து நிற்கிறான்.

சாமியார்:  (புன்னகைத்தவாறு) இங்கே ஓடி நடக்குறதைப் பார்த்தேன்...

சங்கரன் தயங்கி நிற்கிறான்.

சாமியார்:  பார்வதியை எனக்குத் தெரியும். நட....

சாமியார் நடக்கிறார். ஏதோ ஒரு சக்தியால் உந்தப்பட்டதைப் போல அவனும் அவருடன் சேர்ந்து நடக்கிறான். சாமியார் நிற்கிறார். சங்கரனும் நிற்கிறான்.

சாமியார்:  சங்கரா, உன் வீடு எங்கே இருக்கு?

சங்கரன்:  நாகர்கோவில்ல...

சாமியார்:  வீட்ல யாரெல்லாம் இருக்காங்க.

சங்கரன்:  தெரியாது...

சாமியார்:  போறது இல்லியா?

சங்கரன்:  பத்து வருஷத்துக்கு முன்னாடியே நான் வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன்.

சாமியார்:  அதுக்குப் பிறகு யாரும் தேடலியா?

சங்கரன்:  (தலைகுனிவுடன்) இல்ல...

சாமியார்:  அம்மா...?

சங்கரன்:  எனக்கு நாலு வயசு இருக்குறப்போ ரோட்டு வேலைக்கு வந்த மேஸ்திரி கூட அவங்க ஓடிப்போயிட்டாங்க.

சாமியார்:  அப்பா?

சங்கரன்:  செத்திருக்க மாட்டார்... (வெறுப்புடன்) கெட்டவங்க அவ்வளவு சீக்கிரம் சாக மாட்டாங்க.

சாமியார் சிந்தனையில் ஆழ்கிறார்.

அவர் மீண்டும் நடக்கிறார்.

ரெஸ்ட் ஹவுஸின் முன்னால் இருக்கும் கடற்கரையை அவர்கள் அடைந்தபோது சற்று தூரத்தில் பார்வதி சுற்றுலாப் பயணிகளுக்கு மத்தியில் ஓடி ஓடி மாலை விற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார்கள்.

சாமியார்: பாறையில வேலை எப்போ முடியும்?

சங்கரன்:  ஒரு மாசத்துல முடிஞ்சிடும். ஒருவேளை ரெண்டு மாசம் ஆனாலும் ஆகலாம்.

சாமியார்:  அதுக்குப் பிறகு?

சங்கரன்:  (யோசித்து) கல் இருக்குற இடத்துல வேலை இருக்கும்.

சாமியார்:  நீ போயிட்டா பார்வதிக்கு துணைன்னு யார் இருக்கா?

கறுத்து காமதேவனைப் போல அழகாக இருக்கும் அந்த இளைஞனின் முகத்தில் வெட்கம் ஒரு மலரைப் போல மலர்கின்றது.

சாமியார்:  (கடுமையான குரலில் - உபதேசம் செய்வது மாதிரி) அவளைக் கஷ்டப்படுத்தக் கூடாது. அவ மனசு கஷ்டப்படுறது மாதிரி எப்பவும் நடக்கக்கூடாது.

சாமியார் இன்னும் ஏதாவது சொல்வாரோ என்ற ஆர்வத்துடன் அவர் முகத்தையே அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

சாமியார்:  ம்... நட.

சாமியார் தனியாக நின்றிருக்கிறார். அவருக்கு முன்னால் கடல் கம்பீரமாக விரிந்து கிடக்கிறது. கடலைப் பார்த்தவாறு தனியாக நின்றிருக்கும் சாமியாரை மக்கள் கூட்டத்துடன் நடந்து போய்க் கொண்டிருந்த ஜெயன் பார்க்கிறான். அவன் அடுத்த நிமிடம் சாமியாருக்கு அருகில் வருகிறான்.

ஜெயன் அருகில் வந்தவுடன்-

சாமியார்:  ஞாபகத்தோட விளையாட்டு எந்த அளவுல இருக்கு?

ஜெயன்:   இன்னும் ஞாபகத்துல வரலியே!

சாமியார்:  (புன்னகைத்தவாறு) அப்படியா?

ஜெயன்:   காலையில அவங்க அறைக்குள் நுழைஞ்ச பிறகு, வெளியே வரவே இல்ல. கிழவன் சொத்தைக் காத்துக்கிட்டு இருக்குற பூதம்போலன்னு சொல்லலாம்.

சாமியார்:  சில கிழவர்கள் அப்படித்தான்.

36

டற்கரை.

கடலில் நீந்திக் கொண்டிருக்கும் ஆண்மைத்தனமான உடம்பைக் கொண்ட இளைஞனின் ஒவ்வொரு அசைவையும் வேடிக்கை பார்த்தவாறு குஜராத்தி பெண் பாக்கை மென்று கொண்டு கரையில் அமர்ந்திருக்கிறாள்.

சேட் அவளைக் கவனிக்காமல் ஏதோ வியாபாரம் சம்பந்தமான விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சேட் இடையில் நிறுத்தி அவளைப் பார்க்கும்போது, அவள் தனக்குத்தானே சிரித்துக் கொண்டிருக்கிறாள்.

சேட்: என்ன சிரிக்கிறே?

சேட்டின் மனைவி பதிலேதும் கூறாமல் இருக்கிறாள்.

சேட்: நீயாவது என் பிஸ்னஸ் விஷயங்கள்ல ஆர்வம் செலுத்துவேன்னு நினைச்சேன். கடவுளே... எனக்கு யாருமே இல்லியா?

37

ரெஸ்ட் ஹவுஸின் அறை. ஜன்னலருகில் நின்றிருக்கிறாள் இளம்பெண். தூரத்தில் கடற்கரை. ஆங்காங்கே சிதறிப்போய் மனிதர்கள் தெரிகிறார்கள். கிழவர் தலையில் மஃப்ளரைக் கட்டியவாறு அமைதியாக நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.

ரஜனி:     நாம கொஞ்சம் நடந்துட்டு வருவோம்.

கிழவர்:    நீ வேணும்னா போ. நான் வரல.

ரஜனி:     எனக்கு உடம்பு சரியில்ல...

கிழவர்:    (குரலை உயர்த்தி) நான் நல்லா இருந்தா உனக்கு என்ன? நல்லா இல்லாம இருந்தாத்தான் என்ன?

இளம் பெண் மன வேதனையுடன் அமைதியாக நின்றிருக்கிறாள். கிழவர் எதையோ வாயில் மென்றவாறு அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறார். அவள் அப்போதும் வெளியே பார்த்துக் கொண்டுதானிருக்கிறாள்.

கிழவர்:    ரஜனி!

அவள் மெதுவாக திரும்பி கிழவரைப் பார்க்கிறாள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel