Lekha Books

A+ A A-
10 Nov

ஒரு பிறந்தநாள் ஞாபகம்

oru-piranthanaal-enabagam

நாளை என்னுடைய பிறந்த நாள்.

        எனக்கு இது ஞாபகத்திலேயே இல்லை. அவளுடைய கடிதத்தைப் பார்த்த பிறகுதான் எனக்கே இது தெரிய வந்தது.

அவள் எழுதியிருக்கிறாள்: "வரும் வியாழக்கிழமை பிறந்த நாள். காலையில் எழுந்து குளித்து முடித்தபிறகுதான் எதையும் சாப்பிட வேண்டும். வியாழக்கிழமை பிறந்தநாள் வருவது என்பது பொதுவாகவே நல்ல விஷயம். நான் சிவன்கோவிலில் சாதமும் பாயசமும் கொடுக்கத் தீர்மானித்திருக்கிறேன். அங்கு அருகில் கோவில் இருக்கிறது அல்லவா? இருந்தால், குளித்து முடித்து அங்கு போய் கடவுளைத் தொழ வேண்டும்..."

Read more: ஒரு பிறந்தநாள் ஞாபகம்

10 Nov

உன் நினைவாக...

un-ninaivaga

20.9.1954

சுமார் இருபது வருடங்களுக்குப் பிறகு நான் லீலாவைப் பற்றி இன்று நினைத்தேன்.

லீலா என்றதும் நீங்கள் திடீரென்று ஒரு எண்ணத்திற்கு வரலாம். தவறாக நீங்கள் நினைத்து விடுவதற்கு முன்னால் நானே சொல்லி விடுகிறேன்- அவள் என் சகோதரி.

இந்த உண்மையை அறிந்திருக்கும் நபர்கள் உலத்திலேயே மிகவும் குறைவான அளவிலேயே உள்ளனர்.

Read more: உன் நினைவாக...

10 Nov

அக்கா

akka

க்கா அழுது கொண்டிருக்கிறாள்.

             அக்கா அழுவதை எப்போதும் அப்பு விரும்பமாட்டான். வடக்குப் பக்கமிருக்கும் அறையின் ஜன்னல் படிமீது அமர்ந்து தன்னுடைய நெற்றியில் கையை வைத்துக் கொண்டு அக்கா அழுது கொண்டிருக்கிறாள். அவளுக்கு எப்போது பார்த்தாலும் அழுகைதான். ஒரு வேளை பெரியம்மா அவளை ஏதாவது திட்டியிருக்கலாம்.

பெரியம்மா அப்புவைக்கூட பல நேரங்களில் கண்டபடி பேசுவாள். அப்போது அவன் அழமாட்டான்.

Read more: அக்கா

10 Nov

மரணத்தின் சறுக்கல்

maranaththin-sarukkal

ப்ளாஸ்டிக் விரிப்பு போடப்பட்டிருந்த மேஜைக்கு இரு பக்கங்களிலும் அமர்ந்து 'அன்னபூர்ணா'வின் மாடியில் இருந்த அறையில் நாங்கள் உணவருந்திக் கொண்டிருந்தோம். எப்போதும் வரும் நேரத்தைவிட சற்று முன்பே வந்து விட்டது காரணமாக இருக்கலாம்& நாங்கள் மட்டுமே அங்கு இருந்தோம். என்னுடைய நண்பர் தனக்கு விருப்பமான இருக்கையில் அமர்ந்திருந்தார். பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் என் நண்பர் எதிரில் இருந்த கண்ணாடியில் தன்னுடைய சில்க் சட்டையின் அழகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.

கீழே தெரு இருக்கிறது. வண்டியிலிருந்து இறங்கி வரும் பயணிகள் அதன் வழியே நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

Read more: மரணத்தின் சறுக்கல்

10 Nov

வளர்ப்பு மிருகங்கள்

valarppu-mirugangal

ல்ல நிலவொளி திறந்திருந்த ஜன்னல்கள் வழியாக அறைக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. மங்கலான பனி மூட்டத்தினூடே தூரத்தில் மேற்கு திசையில் இருந்த மலை முகடுகள் தெளிவில்லாமல் நிழல்களைப் போல தெரிந்தன. இரவு நேரத்தின் உறைந்து போன அமைதி எங்கும் பரவியிருந்தது.

ஜானம்மா மெத்தையில் அசையாமல் படுத்திருந்தாள். பாதி இரவு தாண்டியிருக்கும். இருப்பினும், அவளுக்குத் தூக்கம் வரவில்லை. அமைதியின் மரத்துப்போன சரீரத்தை வேதனைப்படுத்திக் கொண்டு தூரத்திலிருந்த சர்க்கஸ் கொட்டகையிலிருந்து மெல்லிய பேண்ட் வாத்திய இசை காற்றில் மிதந்து வந்தது.

Read more: வளர்ப்பு மிருகங்கள்

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel