Lekha Books

A+ A A-

விருந்தாளி

virunthali-sakkariya

கொஞ்சமும் எதிர்பார்க்காமல் அவர்களின் பேச்சு தற்கொலை என்ற விஷயத்தைப் பற்றித் திரும்பியது. நண்பர்கள் பலரும் ஒன்று சேர்ந்து உட்கார்ந்துகொண்டு மது அருந்திக் கொண்டிருந்தார்கள். அந்த சிறிய அறைக்குள் மது என்ற விஷயம் ஒரு மாய உலகத்தை சிருஷ்டித்து விட்டிருந்தது. அங்கே நினைவுகளும், ஆலோசனைகளும், மவுனங்களும், பேச்சும் பரவலாக நிரம்பியிருந்தன. பொதுவாக எல்லாருமே எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் வாழ்க்கையில் திருப்தியடைந்த மனிதர்கள் மாதிரி இருந்தனர். வலையை விரிக்க, கொஞ்சமும் எதிர்பாராமல் வலையில் மீன் சிக்கியது மாதிரி இந்த தற்கொலை என்ற விஷயம் பேசப்படும் ஒரு விஷயமாக ஆனது.

டாக்டர் சொன்னார்: "தற்கொலை பண்ணிக்கணும்னு நெனைச்சா, தண்ணீர்ல மூழ்கி சாகுறதுதான் பிரச்சினை இல்லாதது. அதைத் தேர்ந்தெடுக்குறதே நல்லது. சொல்லப் போனா, சாகுறதிலேயே அதுதான் சிறந்தவழி. தண்ணீர்ல மூழ்கி சாகுறப்போ, கனவு காணுறது மாதிரி தோணும். அவ்வளவுதான்...'' 

"நிமோனியா வந்து மூச்சுக்குழல் பெருசாகி மரணத்தைத் தழுவுறவங்களுக்கும் இதே அனுபவம்தான் உண்டாகும். நாம மறைஞ்சு போற குமிழ்போலவோ, உருமாறிப்போற சாம்பலாகவோ, வற்றிக் காய்ந்து போற கண்ணீர்போலவோ கடைசில ஆயிடுறோம்ன்றதுதான் உண்மை. மரணத்தோட இடத்துல கொஞ்ச நேரத்துக்கு கனவு தன்னோட முகத்தைக் காட்டிட்டு மறைஞ்சு போயிடும்.''

"அந்த சோடாவை இங்கே கொஞ்சம் எடு...'' ஒரு ஆள் சொன்னான்.

"தண்ணீர்ல முங்கி சாகுறதுன்னா, அப்போ உண்டாகுற மூச்சு முட்டலை இப்ப நினைச்சுப் பார்த்தாக்கூட பயமா இருக்கு!'' இன்னொரு ஆள் சொன்னான்.

டாக்டர் தொடர்ந்தார்: "அப்படின்னா நான் ஒண்ணு சொல்லட்டுமா? தன்னைத்தானே சுட்டுக்குறது- இதுதான் தற்கொலை பண்ணிக்கிறதுலயே உயர்ந்தது...''

"ஹா... ஹா... ஹா...'' ஒரு ஆள் உரத்த குரலில் சிரித்தான்: "நல்ல ஒரு துப்பாக்கி வாங்கணும்னா அம்பதாயிரம் ரூபா ஆகும். நம்ம கையில அம்பதாயிரம் ரூபா இருந்தா, எதுக்கு தற்கொலை பண்ணணும்?''

"உடம்புல எந்த உறுப்புல துப்பாக்கியால் சுட்டுக்கிட்டா நல்லது?'' கட்டிலில் படுத்திருந்த ஆள் கேட்டான். அவன் சாய்ந்து படுத்தவாறு டாக்டரைப் பார்த்தான்.

அப்போது சிரித்த ஆள் சொன்னான்: "சினிமாவுலதான் நாம பார்த்திருக்கமே! கண்ணோட ஒரு பக்கத்துல துப்பாக்கியை வச்சிக்கிட்டு தலைக்குள்ளே நுழையிற மாதிரி ஒரு அழுத்து...''

டாக்டர் சொன்னார்: "அது சரியான முறை இல்ல... அந்த இடத்துல இருக்கற எலும்பு ரொம்பவும் பெருசா இருக்கும். குண்டு வெடிக்கிறப்போ, சரியா எலும்பைத் துளைக்க முடியாமப் போகலாம். கடைசில என்ன நடக்கும்? சாகவும் செய்யாம உடம்புலயும் ஏதாவது காயங்களை உண்டாக்கிட்டு நடைப்பிணமா வாழ்ந்துக்கிட்டு இருக்கணும். உண்மையிலேயே எப்படிச் செய்தா சரியா இருக்கும் தெரியுமா? துப்பாக்கியை வாய்க்குள்ளே நுழைச்சு, அதோட முனையை வாயோட உள் மேல் பகுதியில் வச்சு சுடணும். அப்படிச் செஞ்சா, குண்டு நேரா எந்தவித தடங்கலும் இல்லாம மூளையில போய் அடிக்கும். நமக்கு ஒண்ணுமே தெரியாது. இந்த குப்பி தீர்ந்திடுச்சு. இன்னொரு குப்பி எங்கே?'' ஒரு ஆள் புதிய குப்பியை எடுக்க, பாட்டு ஒன்றை வாயில் முணுமுணுத்தவாறு சமையலறையைத் தேடிப் போனான்.

"அது எப்படி நடக்குது?''

"ட்டே... ஒரே சத்தம்! அதோட மூளை சிதறிடும்... மூளையே போன பிறகு சிந்தனைக்கும் அறிவுக்கும் அங்கே என்ன வேலை? எல்லாமே காலி. இந்த நிமிஷம் கையில துப்பாக்கியைப் பிடிச்சுக்கிட்டு நிற்கிற மனிதன் அடுத்த நிமிஷம் இல்ல... துப்பாக்கியோட ஒரு சத்தம்... அதோட எதிரொலி... துப்பாக்கி கீழே கிடக்கும். மனிதனோட செத்துப்போன உடலும்தான்... அவ்வளவு தான். ஒரே நிமிஷத்துல எல்லாமே முடிஞ்சிடும்.''

"நம்மோட முகத்துக்குக் கேடு வராதா?'' ஒரு ஆள் கேட்டான்.

"கொஞ்சம் கேடு வரத்தான் செய்யும்.'' டாக்டர் சொன்னார்: "அதனால என்ன?''

"எனக்கு அது சரியா ஒத்துவராது. என்னோட முகம் பாதிக்கப்படுறதை நான் விரும்பல...'' அவன் சொன்னான்.

"செத்துப்போன பிறகு, உன் முகம் எப்படி ஆனா உனக்கென்ன?'' அவன் நண்பன் கேட்டான்.

"செத்துப்போன பிணத்துக்கு முகம் அழகா எப்பவும் இருக்கணும்னு ஒரு ஆசை.'' மற்றொரு நண்பன் சிரித்தான்.

மது அருந்தும் பழக்கமில்லாத ஒரு இளைஞன் டாக்டரைப் பார்த்துக் கேட்டான்: "சார்... தூக்குப்போட்டு சாகுற அனுபவம் எப்படி இருக்கும்? அதைச் செய்றப்போ வலி அதிகமா இருக்குமா?''

அப்போது நான் சொன்னேன்: "வேதனையே இல்லாம ஒரு மரணத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டதைச் சொல்லட்டுமா? என்னோட சித்தப்பாவோட மரணம்தான் அது. அவர் மரணப் படுக்கையில் படுத்த படுக்கையா கிடந்தாரு. அப்போ தன் பிள்ளைகளையும், பேரப் பிள்ளைகளையும் பக்கத்துல வச்சுக்கிட்டு வாய் வலிக்க பேசிக்கிட்டு இருந்தாரு. ஒருநேரத்துல அவரே சொன்னாரு: "நான் கொஞ்சம் கண்ணை மூடட்டுமா? நீங்க யாரும் இப்போ போகக்கூடாது. இங்கேயே இருங்க'ன்னு சொல்லிட்டு சுவருக்கு நேரே திரும்பிப் படுத்து, கண்களை மூடினாரு. ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாரு. மகள் சந்தேகம் வந்து அவரைத் தொட்டு எழுப்பினா, "அப்பா... அப்பா...'ன்னு. அந்த நீண்ட பெருமூச்சோட சேர்ந்து அவர் இந்த உலகத்தைவிட்டே போயிட்டாரு. என்னோட சித்தப்பா மரணம் எப்படி?''

டாக்டர் சொன்னார்: "இதைத்தான் உடம்போட ஒரு டைமிங்னு சொல்றது. உண்மையிலேயே அது ஒரு அதிர்ஷ்டமான மரணம்தான்.''

அந்த இளைஞன் மீண்டும் கேட்டான்: "சார்... தூக்குல மாட்டி இறக்குற அனுபவம் எப்படி இருக்கும்?''

அப்போது இன்னொரு ஆள் சொன்னான்: "உடலைப் பற்றிய விஞ்ஞானமோ, வேறு எந்தவிதமான வித்தைகளையோ தெரியாமலே, சாதாரண வீட்டு அம்மாக்களும், வயசானவங்களும், மற்றவங்களும் சரியான முறையில் கயிறுல முடிச்சு போடுறதும், சரியான உயரத்துல கயிறைக் கட்டுறதும், கொஞ்சம்கூட தப்பாம குதிக்கிறதும்... எப்படி இவையெல்லாம் நடக்குது? ஹா... ஹா... ஹா... நான் ஒண்ணு சொல்லட்டுமா? எனக்குத் தோணுறது என்னன்னா, தூக்குல மாட்டி சாக முயற்சி பண்றவங்கள்ல பாதிப்பேர் அந்த முயற்சியில் தோல்வி அடைஞ்சவங்களாத்தான் இருக்கும்... ஹா.... ஹா... ஹா...''

"ஒரு குப்பி தண்ணி...'' ஒரு ஆள் கேட்டான்.

"சோடா இருக்கு...'' மற்றொருவன் சொன்னான்.

"சோடா வேண்டாம்.''

அந்த ஆள் சொன்னான்: "சோடால கேஸ் இருக்கும். எனக்கு தண்ணி போதும்!''

டாக்டர் சொன்னார்: "தூக்குல மாட்டி சாகுறதுக்கு பெரிய படிப்பறிவு ஒண்ணும் தேவையில்லை. உடம்போட கனத்தை வச்சுத்தான் போட்டிருக்கிற முடிச்சே இறுகும். அதை வச்சுத்தான் கழுத்துச் சங்கு ஒடியிறதே. தூக்குல கழுத்து இறுகின உடனே மூளைக்குள்ள தொடர்பு அறுந்துடும். பொதுவா தூக்குல தொங்குறதுக்கு நைலான் கயிறு நல்லது. பொதுவா மூளையோடு உள்ள தொடர்பை வச்சுத்தான் எல்லாமே.''

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel