Lekha Books

A+ A A-

முன்னேற உதவும் 365 பொன்மொழிகள் - Page 32

munnera uthavum 365ponmozhigal

311

சந்தோஷம் என்பது

கொண்டாட்டத்திற்கு நிகரானது.

இரண்டு மோசமான நாட்களுக்கு

நடுவில் வரும் ஒரு நல்ல நாள்.

***

312

மிகவும் மென்மையான சட்டங்கள்

எந்தச் சமயத்திலும் மதிக்கப்படுவதில்லை.

மிகவும் கடுமையான சட்டங்கள்

எந்த காலத்திலும்

நிறைவேற்றப்படுவதில்லை.

***

313

அவன் மிகவும் கடுமையான

இதயத்தைக் கொண்டவன்.

அது 'மே' மாதத்தில் காதலிக்காது.

***

314

வானம் நீல நிறத்தில் இல்லை

என்பதை ஞாபகத்தில்

வைத்துக் கொள்.

ஏனென்றால்,

கண் பார்வை இல்லாதவர்கள்

அதை பார்க்க முடியாது.

***

315

அளவுக்கு அதிகமான சோம்பேறித்தனம்

ஒரு மனிதனின் நேரத்தை

முற்றிலும் எடுத்துக் கொள்கிறது.

எந்தவித வேலையையும் விட,

அது அவனை அவனுடைய

முதலாளிக்கு முன்னால் கேவலமாக

நிற்க வைக்கிறது.

***

316

வாழ்க்கை என்பதே ஒரு பயணம்தான்.

அது புறப்பட்ட இடத்திற்கே பயணிக்கிறது.

***

317

உண்மையிலேயே

வெளிச்சம் என்பது

மிகவும் இனிமையானது.

கண்களால்

சூரியனைப் பார்ப்பது

என்பது எவ்வளவு அருமையான

ஒரு விஷயம்!

***

318

நாம் கவலையில் இருக்கும்போது,

முன்பு சந்தோஷமாக

இருந்த நாட்களை

அசைபோட்டுப் பார்ப்பதை விட

துயரங்கள் தரக் கூடிய

விஷயம் வேறொன்றில்லை.

***

319

எந்தச் சமயத்திலும்

நாம் சந்தித்திராத

மோசமான சம்பவங்கள்தான்

தாங்கிக் கொள்வதற்கு

மிகவும் கஷ்டமானவையாக

இருக்கும்.

***

320

அன்பான சொற்கள்

நாக்கைக் களைப்படையச்

செய்யாது.

***

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel