மணலும் நுரையும் - Page 6
- Details
- Category: தத்துவம்
- Published Date
- Written by சுரா
- Hits: 8945
ஊர்வலம்
வாழ்க்கை என்பது ஒரு ஊர்வலம்.
காலுக்கு வேகம் கூடியவர்கள்
அதற்கு வேகம் குறைவு என்று குறைபட்டுக்கொண்டு
ஊர்வலத்தை விட்டு வெளியேறுவார்கள்.
காலுக்கு வேகம் குறைவாக உள்ளவர்களோ
அதற்கு வேகம் கூடுதல் என்று குறைபட்டு
ஊர்வலத்தை விட்டு வெளியேறுவார்கள்.
*****
மூன்று உண்மைகள்
நம்முடைய சகோதரர் இயேசு செய்ததும்
பைபிளில் குறிக்கப்பட்டதுமான
மூன்று அற்புதங்கள் இருக்கின்றனவே!
ஒன்று : என்னைப் போலவும் உன்னைப் போலவும்
அவர் ஒரு மனிதராக இருந்தார் என்பது.
இரண்டு : அவர் நகைச்சவை உணர்வு கொண்டவராக
இருந்தார் என்பது
மூன்று : அவர் தோல்வியடைந்தவராக இருந்தாலும்,
வெற்றி என்று மனதில்
புரிந்துகொண்டிருந்தார் என்பது.
*****
சாமர்த்தியம்
ஒருநாள் நான் ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்தேன்.
அவளுடைய பிறக்க இருக்கும்
எல்லா குழந்தைகளையும் நான் அந்த முகத்தில் பார்த்தேன்.
ஒருநாள் ஒரு பெண் என் முகத்தைப் பார்த்தாள்.
அவள் பிறப்பதற்கு முன்பே
இறந்து போயிருந்த என்னுடைய முன்னோர்களை முழுமையாக
அவள் தெரிந்து கொண்டாள்.
*****
ஒரு முறை மட்டும்
ஒருமுறை மட்டுமே நான்
ஊமையாக்கப்பட்டிருக்கிறேன்.
அது- ஒரு மனிதர் நீங்கள் யார்
என்று கேட்டபோது.
*****
மறதி
சொர்க்கம் அங்கே, அந்தக் கதவுக்குப் பின்னால்
உள்ள அடுத்த அறையில்.
ஆனால், சாவிகள் என்னிடம் இல்லை.
ஒருவேளை, நான் அவை இருக்கும்
இடத்தை மறந்திருக்கலாம்.
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,