
பலம்மிக்க அலைகளை கரையை நோக்கி எறிந்து கொண்டு நுரைகளையும் குமிழிகளையும் துப்பியவாறு கடல் புரண்டு கொண்டிருந்தது. நீரிலும் கரையிலும் மழை சீறிப்பெய்து கொண்டிருந்தது. காற்று பலமாக அடித்தது. காற்றில் ஒரு முணுமுணுப்பு, ஒரு ஓலம், ஒரு சிறு சத்தம் கேட்டது. மழை கடலையும் வானத்தையும் பார்வையிலிருந்து மறைத்தது.
தாமதமில்லாமல் அந்தப் பெரும் மழை செல்க்காஷ் படுத்திருந்த இடத்திலிருந்த சிவப்புக் கறையையும் அவனுடைய பாதச் சுவடுகளையும் அழுத்தமான எட்டுகளுடன் நடந்து சென்ற அந்த இளைஞனின் பாதச்சுவடுகளையும் கழுவி ஒன்றுமில்லாமற் செய்தது. அந்த இரண்டு மனிதர்களும் சேர்ந்து நடித்த சிறிய நாடகத்திற்குச் சான்று கூற எந்தவொரு அடையாளமும் அந்த அமைதியான கடற்கரையில் எஞ்சியிருக்கவில்லை.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook