பழம்
- Details
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 7504
‘‘பழத்தைப் பார்க்குறப்போ உங்களுக்கு என்ன தோணுது ? - அவர் கேட்டார். நாங்கள் அவரின் காரை விட்டு இறங்கி மலைச் சரிவில் சாலையோரத்தில் இருந்த கருங்கல்லின் மேல் போய் உட்கார்ந்தோம். கார் மலைச்சரிவில் சாலையோரத்தில் இருந்த அந்த ஒரே கடையின் அருகில் வந்ததும், காரை நிறுத்திவிட்டு அவர் வெளியே இறங்கிச் சென்று கடையில் இருந்து பத்து, பன்னிரெண்டு மைசூர் பூவன்பழங்களை வாங்கிக் கொண்டு வந்து, அவற்றில் இரண்டு பழங்களை டிரைவர் கையில் கொடுத்துவிட்டு என்னையும் உடன் அழைத்துக் கொண்டு போய் சாலையோரத்தில் இருந்த கருங்கல்லில் அமர்ந்தார். பழம் எங்களுக்கு முன்னால் ஒரு தாளில் சுற்றப்பட்டு இருந்தது. நான் சொன்னேன் :










