Lekha Books

A+ A A-

நீ எங்கே? என் அன்பே ! - Page 28

“அதே சாரே. ஞான் கோவாக்கே போயிருன்னப்ப பீச்சிலே ஈ கப்பிளைக் கண்டு சினிமா நடிகர் நிரஞ்சன் ஒரு வித்தியாசமான செட்டப்-ல கண்டு. உடனே ஞான் அவரு ரெண்டு பேரையும் போட்டோ எடுத்து.”

“நிரஞ்சன் கூட இருக்கற இந்தப் பொண்ணு யார்னு தெரியுமா உங்களுக்கு?”

“எனக்கு அறியலில்லா சாரே. பச்சே இவளு சினிமாவுல நடிக்கான போகனுண்டுன்னு ஞான் கேட்டுட்டுண்டு.”

“எந்தக் கம்பெனின்னு தெரியுமா?”

அரை நிமிடம் யோசித்த அருண் உடனே சொன்னான். “த்ரீ எஸ் கம்பெனியா விஜாரிக்குன்ன. பட் ஷ்யூர் அல்ல.”

 “இந்தக் கம்பெனி நல்ல கம்பெனியா?”

“அதெல்லாம் எனிக்கு அறியில்லா சாரே.”

“கோவாவுல எடுத்த போட்டோன்னு சொல்றீங்க, கரெக்டா எந்த தேதின்னு சொல்ல முடியுமா?”

“ஓ. டுவன்டியத் சாரே.”

“ஓ.கே. மிஸ்டர் அருண். தாங்க்யூ.”

இருவரும் கீழே இறங்கி ஜீப்பின் அருகே வந்தார்கள்.

“பக்கத்துல டெலிபோன் பூத்ல இறங்கி டைரக்டரியைப் பார்த்து த்ரீ எஸ் சினிமா கம்பெனிக்கு போன் பண்ணித்தான் பார்க்கலாமே?”

“செபாஸ்டியன், நீங்க போய் போன் பண்ணி அட்ரஸ் கேட்டுப் பாருங்க.”

செபாஸ்டியன் இறங்கி பூத்திற்குள் சென்று தொலைபேசியில் எண்களைச் சுழற்றினான்.

“ஹலோ, டவுள் செவன் த்ரீ எய்ட் செவன்?”

மறுமுனையில் குரல் ஆமோதித்தது.

“த்ரீ எஸ் புரொடக்ஷன்ஸ்?” உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மீண்டும் கேட்டான் செபாஸ்டின்.

“ஆமா சார். த்ரீ எஸ்தான். அந்தக் கம்பெனி மேனேஜர் தான் பேசறேன். என்ன விஷயம்?”

‘சாதாரணமாக இரண்டு கேள்வி கேட்பதற்குள் படு டென்ஷனாகிறானே மனுஷன்’ செபாஸ்டியன் நினைத்துக் கொண்டான்.

‘இருய்யா, உனக்கு ஐஸ் வச்சே விஷயத்தை வாங்கறேன் பாரு’ தொடர்ந்து பேசினான் செபாஸ்டியன்.

“ஓ. மேனேஜர் சாரா? நீங்கதான் த்ரீ எஸ் கம்பெனியில ஆல் இன் ஆலாம். உங்களாலதான் கம்பெனி நிர்வாகம் வெற்றிகரமா நடக்குதுன்னு பேசிக்கிறாங்க சார்.”

“அதுக்கெல்லாம் தனி திறமை வேணும் சார். லட்சக்கணக்கா புழங்கற இடத்துல நாணயமா மேனேஜ் பண்ணனும்னா சும்மாவா சார்?” செபாஸ்டியன் அந்த ஆள் தலையில் வைத்த ஐஸ் நன்றாக உருகி வழிந்தது.

“சார், என்ன விஷயமா போன் பண்ணினீங்க? நீங்க யாரு?” மிகவும் குழைவாக மாறியது மேனேஜரின் குரல்.

“நானும் உங்களைப் போல ஒரு சினிமா கம்பெனி மேனேஜர்தான். ஆனா உங்களோடது பெரிய கம்பெனி. நான் வேலை பார்க்கற கம்பெனி சோட்டா சார். ரொம்ப சோட்டா. நமக்கு வேண்டிய ஒரு பொண்ணு ஷீலான்னு, அது ரொம்ப சான்ஸ் கேட்டு நடையா நடக்குது.”

“அட? ஷீலாவா? அது இப்ப எங்க கம்பெனி எடுக்கப் போற புதுப் படத்துல ஹீரோயின் சார். சினிமாவுக்காக மதுமதின்னு இப்பதான் பேரை மாத்திக்கிச்சு.”

“எங்க கம்பெனியிலயும் புது ஆளா தேடிக்கிட்டு இருக்காங்க. இந்தப் பொண்ணு ஞாபகம் வந்தது. ஆனா இதோட அட்ரஸ் தொலைச்சுட்டேன்.”

“அட இவ்வளவுதானா? உங்களுக்கென்ன மதுமதியோட அட்ரஸ் வேணும். அவ்வளவுதானே? எழுதிக்கோங்க. நம்பர் இருபத்தியெட்டு, பார்கவி விலாஸ், அசோக் நகர், சென்னை, எண்பத்தி மூணு.”

“ரொம்ப தாங்க்ஸ் சார்.”

“தாங்க்ஸ் இருக்கட்டும். நான்தான் உங்க கம்பெனி படத்துக்கு சிபாரிசு பண்ணினேன்னு மதுமதிகிட்ட நீங்களும் சொல்லுங்க.”

“உங்க பேரை சொல்லிதான் சார் எங்க படத்துல புக் பண்ணப் போறேன்.”

“ஹி... ஹி... ஹி...” ஏகப்பட்ட வழிசல் வழிந்தது. போனில் மறுமுனை. ரிசீவரைப் பொருத்திவிட்டு அட்ரசுடன் நடந்தான், ஜீப் நின்ற இடத்திற்கு.

பார்கவி விலாஸ், சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டிருந்த காம்பவுண்டு சுவரை ஒட்டி, தன் காரை நிறுத்திவிட்டு, இரும்பு கேட்டைத் திறந்து உள்ளே போனார் குணாளன். ஜன்னல் வழியாகப் பார்த்திருப்பாள் போலும், ஒரு சிறுமி ஓடி வந்தாள். “நீங்க யாருங்க?” கேட்டாள்.

“மதுமதியம்மா இருக்காங்களா?”

“இருக்காங்க. நீங்க யாருன்னு சொல்லுங்க.”

“நான் பத்திரிகையில இருந்து வந்திருக்கேன்னு மதுமதியம்மாகிட்ட சொல்லு.”

“நீங்க உட்காருங்க. நான் உள்ள போய் அம்மாகிட்ட சொல்லிட்டு வரேன்.”

பால்கனியில் போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலியைக் காண்பித்தாள்.

குணாளன் உட்கார்ந்தார். சுற்றிலும் நோட்டம் விட்டார். அது ஒரு மினி பங்களாவாக இருந்தது. ‘ஒரு படத்துக்கு அட்வான்ஸ் வாங்கின உடனே இவ்வளவு பெரிய வீட்டுக்கு வந்துட முடியுமா?’ சிந்தித்துக் கொண்டிருந்தவர் நிமிர்ந்தார்.

“வணக்கம் சார்” மதுமதி பவ்யமாக கும்பிடு போட்டாள்.

“நான் வெள்ளித் திரை பத்திரிகை நிருபர். என் பேர் மதன். நீங்க த்ரீ எஸ் ப்ரொடக்ஷன்ஸ் எடுக்கற படத்துல புதுமுகமா அறிமுகமாறீங்களாமே. புதுமுகம்- அறிமுகம்னு எங்க பத்திரிகையில ஒரு பகுதி இருக்கு. அதுக்காக உங்களை பேட்டி எடுக்க வந்திருக்கேன்.”

“ரொம்ப சந்தோஷம் சார். காபியா, கூல்டிரிங்ஸ்ஸா சார்? ஏதாவது குடிங்க சார்.”

“நோ, தாங்க்ஸ். நாம பேட்டியை ஆரம்பிக்கலாமா? நீங்களும் உட்காருங்க.”

மதுமதி எதிர்த்த நாற்காலியில் உட்கார்ந்தாள். அவசர ஒப்பனையிலும் அதிக அழகாகவே இருந்தாள்.

அவள் பேசும்பொழுது அடிக்கடி கண் இமைகளை மூடித் திறந்தாள்.

“மதுமதிங்கற பேர் நீங்க சினிமாவுக்காக வச்ச பேரா?”

“இல்லை சார். என் பேர் மதுமதிதான். சினிமாவுக்காக பேர் மாத்தலை.”

“உங்களுக்கு சொந்த ஊர்?”

“இதே மெட்ராஸ்தான்.”

“எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க? எங்க படிச்சீங்க?”

“ஸ்கூல் படிப்பு சர்ச் பார்க் கான்வென்ட்டில முடிச்சேன். மெடிக்கல் காலேஜ்ல சீட் கிடைச்சது. அதுக்குள்ள சினிமா சான்ஸ் கிடைச்சிட்டதால, மெடிக்கல் காலேஜ் போகலை.”

“சினிமான்னா உங்களுக்கு அத்தனை ஆர்வமா?”

“ஆமா சார். எனக்கு நடிப்புன்னா ரொம்ப இஷ்டம். அதனால படிப்பைக் கூட விட்டுட்டேன்.”

“உங்களுக்கு சினிமா சான்ஸ் எப்படி கிடைச்சது?”

“சோப் விளம்பரத்துக்கு மாடலிங் பண்ணி இருந்ததை ஒரு பத்திரிகையில பார்த்த டைரக்டர் பரத் எனக்கு சான்ஸ் குடுத்தார். பரத் கிட்ட அந்த விளம்பரத்தை காண்பிச்சு எனக்காக சிபாரிசு பண்ணியது நடிகர் ராம்குமார்.”

“எடுத்த உடனேயா கதாநாயகியா நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு?”

“ஆமா சார். இது எல்லோருக்குமே கிடைக்கறது இல்லை. அது மட்டும் இல்லை. என்னோட முதல் படத்துலயே நான் ராம்குமாருக்கு ஜோடியா நடிக்கறேன். என்னோட அழகும், முகவெட்டும் ரொம்ப நல்லா இருக்குன்னு ராம்குமார் சொல்வார்.”

“உங்களுக்கு தாய் மொழியே தமிழ்தானே?”

“ஆமா சார், நான் தமிழ்ப் பொண்ணுதான்.”

“சில பேர் பணம் சம்பாதிக்கறதுக்காக நடிக்க வருவாங்க. சிலர் கலை ஆர்வத்துக்காக இதுல ஈடுபடுவாங்க. நீங்க எப்படி?”

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

சரசு

சரசு

March 9, 2012

கமலம்

கமலம்

June 18, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel