Lekha Books

A+ A A-

ஜலாலுத்தீன் ரூமியின் ஞானப் பெட்டகம் - Page 3

Jalaluddin-rumiyin-gnaanappettagam

அனைத்து மனித முகங்களையும்

உன் முகத்தில் வைத்திரு.

அவற்றைக் குறித்து

எந்த முடிவையும் எடுக்காதே.

*  *  *

உன் வெறுப்புகளை

கண்ணாடியிடம் காட்டி விட்டு அழு.

அப்போதுதான்- உண்மையான கலை பிறக்கிறது.

உண்மையான படைப்பு ஆரம்பமாகிறது.

*  *  *

ஒரு தையல்காரன்

ஒரு கிழிந்த சட்டையைக் கட்டாயம்

வைத்திருக்க வேண்டும் -

தன் நிபுணத்துவத்தை

அவன் அனுபவரீதியாக பெறுவதற்கு.

*  *  *

பிச்சைக்காரனின் காதில்

ஒரு குரல்

ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

அது கூறுகிறது -

அருகில் வா.

இரக்கம் உன்னைத் தேடுகிறது!

*  *  *

நம் கண்ணீர் துளிகள்

பூமியை வளரச் செய்யும்.

வெட்கப்படாதது எதுவோ,

எந்த உண்மையையும்

பார்த்து அச்சப்படுவது

எதுவோ அதை கூர்ந்து பார்.

*  *  *

யாராவது உங்களுக்காக

தங்கத்தை எண்ணிக் கொண்டிருந்தால்,

கைகளையோ தங்கத்தையோ பார்க்காதீர்கள்.

தருபவரை மட்டுமே பாருங்கள்.

*  *  *

எகிப்து நாட்டைச் சேர்ந்தவனுக்கு

நைல் நதி இருத்தல் நிறைந்ததாக தெரியும்.

அதுவே ஒரு இஸ்ரேல் நாட்டுக்காரனுக்கு

தெளிந்த நீரோட்டமாக தெரியும்.

ஒருவனுக்கு ஒரு நெடுஞ்சாலையாக தெரிவதே

இன்னொருவனுக்கு பேரழிவாக தெரிகிறது.

*  *  *

ஒரு ஆணுக்கும்

ஒரு பெண்ணுக்கும்

ஒரு உண்மையான புனித நாள் -

அவர்கள் தங்களைத் தாங்களே

தியாகத்திற்குள் கொண்டு வரும்

அந்த நாள்தான்.

*  *  *

நான் உன்னுடன்

எப்போதும் இருப்பேன்

என்பதற்கு அர்த்தம் -

நீ கடவுளை எதிர்பார்க்கும்போது

உன் கண்களின் பார்வையில்

கடவுள் இருக்கிறார்.

*  *  *

தங்களின் கைகளை

வெறுமையில் கொண்டுபோய்

யார் இருக்கச் செய்தவர்களோ,

அவர்களுக்கு பொய் -

உண்மை மனம் -

ஆன்மா எதனுடனும் இனி தொடர்பில்லை.

*  *  *

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

மகாலட்சுமி

March 22, 2013,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

மரணம்

மரணம்

May 23, 2012

மலை

மலை

September 24, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel