
அபிலாஷின் பாராமுகம் சரிதாவைத் தீயாக சுட்டது. என்றாலும் அவளது இதயத்திற்குள் சந்தேக வண்டுகள் துளைத்துக் கொண்டிருந்தன.
எனவே அவளும் அபிலாஷின் பாராமுகம் அவளை பாதிக்காதது போல நடித்துக் கொண்டிருந்தாள்.
அபிலாஷின் மௌனம், அவன் மீது சரிதா கொண்டிருந்த தவறான எண்ணங்களையும் மாறுபட்ட கருத்தையும் அதிகப்படுத்திக் கொண்டிருந்தது.
சந்தேகம் எனும் கொடிய பேய் தன்னுடைய வாழ்வில் எந்த அளவிற்கு தலைவிரித்து ஆடப் போகிறது என்பதை அறியாத பேதையாய் இருந்தாள் சரிதா.
ஏதோ பெயருக்கு சாப்பிடுவதும், மன அழுத்தத்தினால் ஏற்பட்ட துக்கத்தினால் படுக்கையில் குப்புறப்படுத்துக் கிடப்பதுவுமாக பொழுதை நகர்த்தினாள்.
பாவனா அங்கே வரும் சமயங்களில் மட்டும் அவளிடம் புலம்புவாள். அபிலாஷின் மீது சரிதாவிற்கு உருவாக்கிய சந்தேக ஏவுகணை சிறிது கூட வீரியம் குறையாமல் இருக்கும்படி தன்னால் இயன்ற வரை மிக்க கவனத்துடன் செயல்பட்டாள் பாவனா.
எரிகின்ற தணல் மீது மேலும் காற்றைப் பெருக்கி, சரிதாவின் மனம் முழுவதும் நெருப்பினால் ஏற்படும் புகை மண்டலமாக்கினாள் அவள். அந்த நடவடிக்கையில் இந்த அளவிற்கு அவள் துரிதமாக ஈடுபடுவதற்கு சுதாகரின் இடைவிடாத தொந்தரவும் அதனால் ஏற்பட்ட அயர்ச்சியும் காரணங்களாக இருந்தன.
எப்படியோ... அந்த வஞ்சக வலையில் இருந்து விடுபட்டு விட வேண்டும் என்ற துடிப்போடு அவள் நடத்திய நாடகத்திற்கு ஓர் உச்சக்கட்டமும் நேர்ந்தது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook