
புதிய தலைமுறைக்கு திலகன் பாட புத்தகம்
- நடிகர் அசோகன்
தமிழில் : சுரா
முரட்டுத்தனமான குணங்களுக்கு உள்ளே கள்ளங்கபடமற்ற முகத்துடன் இருந்தார் திலகன். முதலில் பார்க்கும்போது மிகவும் தூரத்தில் இருப்பதைப் போல தோன்றினாலும், மேலும் மேலும் புரிந்து கொண்ட பிறகு அந்த சுத்தமான இதயத்துடன் மிகவும் நெருங்கிச் செல்லும் அனுபவம் என்னைப் போல பலருக்கும் உண்டாகியிருக்கிறது.
திரையுலகத்திற்கு முன்பே நாடக நடிகர் என்ற நிலையில் அவரை எனக்கு தெரியும். பிறகு ‘யவனிக’ திரைப்படத்தில் நடிப்பதற்காக வந்தபோதுதான் நாங்கள் ஒருவரையொருவர் முதல் தடவையாக பார்க்கிறோம். நாங்கள் ஒன்று சேர்ந்து நடிக்கக் கூடிய காட்சி ஒன்றே ஒன்றுதான். தொடர்ந்து பல திரைப்படங்களில் சேர்ந்து நடித்தோம். இதற்கிடையில் அவர் மீது கொண்ட ஈடுபாடும் அதிகரித்துக் கொண்டு வந்தது. நடிப்பிலும், வாழ்க்கையிலும் அவர் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உறுதியான கொள்கைகளைப் பின்பற்றினார். நடிப்பைத் தவிர, வேறு எந்த விஷயத்திலும் அவருக்கு அக்கறை இருந்ததில்லை. இதைப் போன்ற மிகச் சிறந்த நடிப்புத் திறமை கொண்ட ஒரு நடிகர், இனிமேல் மலையாளப் படவுலகில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதை காலம்தான் காட்ட வேண்டும். எல்லா காலங்களிலும் நடிப்புத் துறையில், புதிய தலைமுறைக்கு இருக்கக் கூடிய ஒரு பாட நூலாக திலகன் இருப்பார்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook