வல்லிகாதேவி
- Details
- Category: புதினம்
- Written by சுரா
- Hits: 6914

மாதவமேனன் பரந்து கிடந்த அந்த வயல்வெளிகளின் வழியாக சுற்றி நடந்து, மாலை மயங்கும் நேரத்தில் தன் வீட்டிற்குத் திரும்பி வந்தார். வீட்டிற்கு முன்னாலிருந்த சிறிய பாதையில் நடந்து, வீட்டிற்குள் ஏறுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஏணியை நெருங்கியபோது, தன்னுடைய அறைக்குள்ளிருந்து பெண்களின் சிரிப்புச் சத்தமும், ஆரவாரமும் வந்து கொண்டிருப்பதை அவர் கேட்க நேர்ந்தது.