பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்
- Details
- Category: புதினம்
- Written by சுரா
- Hits: 11057
பத்மநாபன் கோயம்புத்தூரில் இருக்கிறான். ஒரு வீட்டில் அவன் வேலை பார்க்கிறான். அவன் இல்லாமல் இரண்டு ஓணம் பண்டிகைகள் கடந்துவிட்டன. பாப்பி அம்மாவிற்கும் கார்த்தியாயினிக்கும் அந்த இரண்டு ஓணங்களும் ஓணங்களாகவே இல்லை. அவன் வழக்கம்போல பணம் அனுப்பியிருந்தான். அதை வைத்துத்தான் ஓணமே நடந்தது. எனினும், திருவோண நாளன்று ஒரு ஆணுக்கு இலை போட்டு உணவுப் பொருட்களைப் பரப்பி வைத்து ஓணச் சாப்பாடு சாப்பிட முடியவில்லை. சமையலறையிலேயே தாயும் மகளும் அமர்ந்து சாப்பிட்டார்கள்.










