Lekha Books

A+ A A-

ஒரு காதல் கதை - Page 3

Oru Kadhal kathai

‘என்ன இங்கே, வெட்கமே இல்லாமல்..?’

அவன் இருப்பதைப் போலவே அவள் உணர்வாள். ‘டாலி...’ என்று காதுகளுக்குள் முணுமுணுக்கப்படுகிறது. அந்த மரங்களும் கொடிகளும் ‘டாலி... டாலி... என்று எதிரொலிக்கும். நாணம் கலந்த சிரிப்புடன் அவள் ஓடி மறைவாள்.

தன் தந்தைக்கு வரும் கடிதங்களில், அந்த கிராமத்து இளம்பெண்ணை சந்தோஷத்தில் ஆழ்த்துவதற்கு அந்த ஒரு வாக்கியம் போதும்.

‘டாலி நலமாக இருக்கிறாள் என்று நினைக்கிறேன்.’ அவளுக்கு அதுவே போதும்.

தான் ஒரு காமதேவனின் சொந்தம் என்பதை நினைத்து அவள் பெருமைப்பட்டுக் கொண்டாள். அனைத்துமே அவனுக்குச் சொந்தமானவையே.

காதல் உணர்வுகள் அவளிடம் சில சிறுசிறு மாற்றங்களை உண்டாக்கிவிட்டிருந்தன. அவளுடைய கன்னங்களின் நிறமும் அவளுடைய சரீரத்தில் பிரகாசமும் மெருகேறிக் காணப்பட்டன. அவள் வெறும் இளம்பெண்ணாகத் தோன்றவில்லை. பெண்ணாக ஆனதன் அழகு தெரிந்தது. முகத்தில் செம்பருத்தி மொட்டுகளைப்போல இரண்டு மூன்று முகப்பருக்கள் காணப்பட்டன. அங்கு முத்தங்கள் பதிந்திருக்கலாம். நினைத்து...நினைத்து... அமர்ந்துகொண்டிருந்த அவளுடைய நீலநிறக் கண்கள் முன்பிருந்த கள்ளங்கபடமற்றவளுக்குச் சொந்தமானவையாக இல்லை. காதலனுடன் சங்கமமாவதற்கு இடம் தீர்மானித்த சிந்தனையின் வெளிப்பாடு அந்தக் கண்களில் தெரிந்தது. அவளுடைய உறுப்புகளுக்கு ஒரு தளர்ச்சி உண்டாகி விட்டிருந்தது. அவள் கட்டியணைக்கப்பட்டவள் !

அவளிடம் உண்டாகியிருக்கும் மாறுதல்கள் அவளின் தாய்க்கு நன்கு தெரிந்தன. ஒரு சிறிய பெண்ணாக அல்ல; ஒரு பெண்ணாக அவள் அவளை நினைத்தாள். அன்னை கேட்டாள்:

“அவர் ஏன் வரவில்லை மகளே?”

“வேலை அதிகம் அம்மா!”

“எப்போ வர்றேன்னு சொல்லியிருக்காரு?”

“வேலை முடிஞ்சபிறகு வருவார்.”

தொழிற்சாலை உண்டாக்குவதற்கான ஆரம்ப வேலைகள் அனைத்தும் ஒரு வகையாக முடிவடைந்தன. வெகு சீக்கிரம் இயந்திரப் பொருட்கள் வந்து இறங்கும். செயல்படுத்தத் தேவையான பணம் வேண்டும்.

ஒரு நாள் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, அவனுடைய தந்தை கணக்குகளைக் கேட்டார். பல நாட்களுக்குப் பிறகு அவன் வீட்டிற்கு வந்திருக்கிறான். அவன் எல்லா விஷயங்களையும் கூறினான். ஒரு பெரிய தொகை வேண்டும்.

அவனுடைய தந்தை சொன்னார் :

“இங்கு இப்போ அவ்வளவு பணம் இல்லையே! கையில் பணம் இல்லை.”

பேபி சற்று பதைபதைப்பு அடைந்தான். அந்த பதைபதைப்பை அவனுடைய தந்தை பார்க்காமலில்லை.

உடனடியாக தேவைப்படும் பணம் எவ்வளவு என்பதை பேபி கணக்கு வட்டி விளக்கிக் கூறினான். அவனுடைய தந்தை அமைதியாக இருந்தார். பிறகு கூறினார்.

“அந்த நீதிபதி திருமண விஷயமாக வந்திருந்தார். பொண்ணு உன்னுடன் சேர்ந்து படிச்சவள்தானே! இருபத்தய்யாயிரம் ரூபாய் தர்றதா சொன்னாரு. அவங்க குடும்பம் நல்ல குடும்பம். நல்ல கட்டுப்பாடுகள் கொண்ட குடும்பமும் கூட”

உண்மையிலேயே பேபி அதிர்ச்சியடைந்து விட்டான். அந்த கிராமத்தின் எல்லையிலிருந்த செடிகளுக்கு மத்தியிலும், படர்ந்து கிடக்கும் கொடிகளுக்கு மத்தியிலும், காட்டாற்றின் பாறைகளிலும் எதிரொலித்து, காட்டு மலர்களில் மது அருந்திக் கொண்டிருந்த வண்டுகளை அதிர்ச்சியடையச் செய்து, ஒரு மென்மையான இதயம் வெடித்துச்சிதறி, குயிலின் குரலில் எழுப்பிய அழுகைச் சத்தத்தை அவன் கேட்டான். அதற்குப்பிறகு அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தொழிற்சாலையும் செயல்பாடுகளும் மறந்து போய்விட்டன. அவனுடைய தந்தை என்னென்னவோ கூறிக்கொண்டிருந்தார். அந்த திருமணத்தால் கிடைக்கக்கூடிய நல்ல விஷயங்கள்! சொந்தக்காரர்களின் மூலம் கிடைக்கக்கூடிய உதவிகள்! அவன் ‘சரி’ என்று சம்மதித்துவிட்டார். இனி சடங்குகள் நடந்தால் போதும். ஆனால், பேபி எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அவனுடைய அன்னையும் என்னென்னவோ கூறிக்கொண்டிருந்தாள். ஆனால், அவர் திடீரென்று தான் கூறிக்கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு, அவனையே கூர்ந்து பார்த்தாள். அவனுடைய முகத்தில் தெரிந்த மாறுதல்களை அவள் பார்த்தாள்.

பேபிக்கு மூச்சு அடைப்பதைப்போல இருந்தது. அவனால் எதுவுமே பேச முடியவில்லை. தொண்டை வறண்டுபோய்விட்டது. அவன் எதுவுமே பேசாமல், சுய உணர்வை இழந்துவிட்டவனைப்போல, ஒரு சாய்ந்துகொண்டிருக்கும் பொம்மையைப்போல எழுந்து சென்றான். எல்லாரும் அதைப் பார்த்தார்கள்.

அதற்கு காரணம் என்ன? அவன் எங்காவது சிக்கிக்கொண்டு விட்டானோ? மனைவியும் கணவரும் ஒருவரோடொருவர் கேட்டுக் கொண்டார்கள்.

அப்படி ஒரு இளைஞன் எங்கு செல்கிறான்? எங்குபோய் தன்னுடைய இதயச் சுமையை இறக்கி வைக்கிறான்? ஒரே ஒரு இடத்தில்தான் நிம்மதி கிடைக்கும். காதலி இருக்குமிடத்தில்! அவள் ஆறுதல் கூறுவாள்... அவள் சிரிக்கச் செய்வாள். அங்கு மனக் கஷ்டங்கள் மறக்கப்படும்.

பேபியின் கார் நேராக அந்த கிராமத்தை நோக்கி விரைந்தது.

ஆனால், அங்கு அவனுக்கு மன அமைதியும், சந்தோஷமும் கிடைக்கவில்லை. அவனுடைய மனம் குழப்பத்தில் இருந்தது. அவளுடைய இதயத்தை அபகரித்துச் சென்ற மென்மையான மனதைக் கொண்ட அந்த இளைஞனையல்ல அவள் இப்போது பார்ப்பது... மனதில் குழப்பங்களுடன், ஒரு இடத்தில் அமர முடியாமல், இரு இடத்தில் நிற்க முடியாமல், மறந்து கொண்டு நடந்து திரியும் இளைஞன்!

அந்த முத்தங்கள் மிகவும் உஷ்ணம் நிறைந்ததாக இருக்கும். இறுக அணைக்கும்போது அவள் ஒடுங்கிப்போய் விடுவாள். அந்த சமயத்தில் பற்களைக் கடித்துக்கொண்டு என்னென்னவோ அவள் முணுமுணுப்பாள்... அப்படி அவளை கொஞ்சுவதில்லை. செல்லமாகப் பேசுவதில்லை. இதயம் உணர்ச்சிவசப்படும்படி நடப்பதில்லை. விளையாட்டும் சிரிப்புமாக அப்படி தொட்டுத்தொட்டு ரசிப்பதில்லை. சற்று வாய்விட்டு சிரிக்க வேண்டுமென்று அவள் ஆசைப்பட்டாள்.

அவிழ்த்துவிடப்பட்ட கூந்தலுடன் அவள் அமர்ந்திருப்பாள் - அதில் அவன் விரலை நுழைத்து வருடவேண்டும் என்பதற்காக பாறையின் மீது தாடையில் கையைவைத்து அமர்ந்திருப்பாள் - பின்பக்கமாய் அவன் வந்து தலையை உயர்த்தி முத்தமிட வேண்டும் என்பதற்காக. அது எதுவுமே அவளுக்குக் கிடைக்காது. வெப்பம் நிறைந்த இரத்தத்தின் வெறிபிடித்த முரட்டுத்தனம்! அவளுடைய மலரைப் போன்ற மேனி பல நேரங்களில் வேதனைப்பட்டிருக்கிறது.

இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன? அதை அவன் அவளிடம் கூறவில்லை. அவனுடைய திருமண விஷயம்! கூற வேண்டுமென்று அவன் நினைக்கவுமில்லை. சாயங்காலமாகி விட்டது. மலர்வாடி விடும். அதற்குமுன்பே முடியும் வரையில் மதுவைப் பருகிவிட ÷ண்டும் என்ற வெறிகொண்ட உன்மத்த நிலையில் இருக்கும் பைத்தியக்காரனைப் போல அவன் இருந்தான். அந்த மலரின் மென்மையான இதழ்களில் அவனுடைய கொம்புகளால் காயங்கள் உண்டாகியிருக்கின்றன. கிறகடிப்புகள் பட்டு சில இடங்கள் வாடியும் போயிருக்கின்றன.  அதற்குப் பிறகும் அந்த மலர் அவனுக்காக மேலும் மேலும் மலர்ந்துகொண்டிருந்தது.

ஒருநாள் அவள் கேட்டாள் :

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

நான்

நான்

February 17, 2015

விரக்தி

விரக்தி

October 18, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel