Lekha Books

A+ A A-

கவிதை எழுதும் பெண் - Page 6

kavithai ezhudum pen

அவள் அதற்கு ஒன்றும் பதில் கூறவில்லை. அவள் மடியில் வாடிப்போன ஒரு இலை வந்து விழுந்தது.

...வாழ்க்கை ஒரே குழப்பமாக இருக்கிறது. ஆனால், தாறுமாறாகக் கிடக்கும் அந்த வாழ்க்கையைச் சீப்பு எடுத்து நான் கட்டுக்களை அவிழ்க்கவோ வாரி முறைப்படுத்தவோ தயாராக இல்லை...

நான் போகும்போது இந்தக் கட்டுகள் எஞ்சி இருக்கும். இந்த மினுமினுப்பில்லாத முடியில் முன்பு எப்போதோ சூடிய முல்லை மலர்கள் காய்ந்து ஒட்டிக்கொண்டிருக்கும்...

"ஓ... நீங்க ரெண்டு பேரும் இங்கேதான் இருக்கீங்கள்ல...?

ரஸ்ஸா திரும்பி வந்தான்.

"புறப்பட்ட இடத்திற்குத் திரும்பி வந்தப்போதான் சீனாக்காரன் தன்னுடைய பொடி டப்பாவைக் கண்டுபிடித்தான். அந்த விஷயம் தெரியும்ல?"

"தெரியாது..."

"சீனாக்காரனோட பொடி டப்பா காணாமல் போய்விட்டது. அவன் உலகம் முழுக்க பயணம் செய்தான். பொடி டப்பாவை எல்லா இடங்களிலும் தேடினான். எங்கேயும் கிடைக்கல. வயசான பிறகு, வீட்டிற்குத்திரும்பி வந்தான். அப்போ தன்னோட படுக்கைக்குக் கீழே பொடி டப்பா கிடக்குறதை அவன் பார்த்தான்..."

ரஸ்ஸா தன் தலையைப் பின்னோக்கி சாய்ந்தவாறு சிரிக்கும்போது, அவனுடைய கழுத்து நரம்புகள் புடைத்து முகம் பயங்கரமாகத் தோற்றம் தந்தது. அப்போதுதான் தன்னைச் சுற்றியுள்ள வாழ்க்கையின் கொடூர உருவமே அவனுக்குத் தெரிய வந்தது. உடல்நலம் பாதிக்கப்பட்ட தன்னுடைய குழந்தையையும், மனைவியையும் தன்னுடைய வீட்டில் விட்டுவிட்டு விருந்திற்கு வந்த ஒரு ஓவியன், நட்பு என்றால் என்னவென்று தெரியாத நண்பர்கள், பொய்யான சிரிப்புகள், புதுமையான வெற்று வார்த்தைகள், ஒரு மனிதனும் அவனின் மனைவியும் மனப்பூர்வமாக தகர்க்கப் பார்க்கும் அவர்களின் குடும்ப வாழ்க்கை, மேஜைமேல் கொஞ்சம் கொஞ்சமாகக் குளிர்ந்து கொண்டிருக்கும் உணவுப்பொருட்கள்...

"நான் உள்ளே போறேன். நான் கொஞ்சம் ஓய்வு எடுக்கணும்..."

அவள் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய கணவன் அருகில் நின்றிருந்த ஆளிடம் சொன்னான்: "என் மனைவியின் குணத்தை இதுவரை என்னால புரிஞ்சிக்கவே முடியல. எட்டு வருடமா நாங்க ஒண்ணா வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்..."

அவளின் உருவம் திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்தபோது ரஸ்ஸா தாழ்ந்த குரலில் சொன்னான்: "அவங்க ஒரு கவிதை எழுதும் பெண்."

படுக்கை அறையில் பட்டுத்தலையணையை ஒரு குழந்தையைப் போல கட்டிப்பிடித்துக் கொண்டு குப்புறப்படுத்தவாறு அவள் தேம்பித் தேம்பி அழுதாள்.

...நான் போகும்போது இந்தக்கட்டுகள் எஞ்சி இருக்கும். இந்த மினுமினுப்பில்லாத முடியில் முன்பு எப்போதோ சூடிய முல்லைமலர்கள் காய்ந்து ஒட்டிக்கொண்டிருக்கும்...

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel