
பெண் பிள்ளைகளின் மீது பெற்றோருக்கு எப்போதும் ஒரு கண் உண்டு. ஆண் பிள்ளைகளின் விஷயத்தில் அப்படியில்லை. அவனுடைய குறும்புத்தனங்களுக்கு கடிவாளம் போடுவார்கள். பெண் பிள்ளைகளின் விஷயத்தில் அவளுடைய நடவடிக்கைகள் கவனிக்கப்படும். பார்வை, நடந்து கொள்ளும் முறை... அனைத்தும். வயது கூட... கூட... பெண்ணைப் பற்றி ஒரு பயம். அவளைத் தனியாக வெளியே விட மாட்டார்கள். தனியாக படுத்து தூங்க விட மாட்டார்கள். அவள் படுத்திருக்கும் அறையின் தாழ்ப்பாள் பத்திரமாக பூட்டப்பட்டிருக்கிறதா என்று தாய் பார்ப்பாள். அவள்தான் கைப்பிடியை விட்டு சாதாரணமாக விலகிச் செல்லக் கூடியவள். பெண்ணின் சதையைப் பற்றி தந்தைக்கும் தாய்க்கும் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். அதன் மடிப்புகளுக்கு மத்தியில் ஏதோ நமைச்சல்கள் உண்டாகி இருக்கலாம்.
அப்படித்தான் மாலதியும் வளர்ந்தாள். மற்றவர்களைவிட அந்த நாணமும், கண்களின் சுறுசுறுப்பும், அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், தன்னைத் தானே அடக்கிக் கொள்ள வேண்டும் என்ற ரசனையும் சற்று அதிகமாகவே இருந்திருக்கலாம். பரவாயில்லை... அவளும் ஒரு சாதாரண பெண்ணாகவே இருந்தாள். ஆனால், எங்கோ எப்படியோ உடலுறவு கொள்வதைப் பற்றி அவள் சற்று முன்கூட்டியே தெரிந்து கொண்டு விட்டாள் என்று தோன்றுகிறது. எப்படி அது நடக்கும் என்பதைப் பற்றி அவள் சிந்தனையில் மூழ்கியிருக்கிறாள். அது எல்லா பெண் பிள்ளைகளிடமும் இருக்கக் கூடியதாக இருந்திருக்கலாம். முளைத்து வரும் மார்பகத்தை அவள் தன்னிடமே பார்த்துக் கொண்டிருப்பாள். தன்னுடைய சரீரத்தை நிர்வாணமாக பார்ப்பதற்கு அவள் சூழ்நிலையை உண்டாக்குவாள்.
மற்ற பெண் பிள்ளைகளைப் போல அவளைப் பற்றி படிக்கும் காலத்தில் அடிப்படை இல்லாத நில கதைகளை சினேகிதிகள் கூறிக் கொண்டிருப்பார்கள். அந்த சினேகிதிகளைப் பற்றியும் கதைகள் பரவி விட்டிருந்தாலும்... அறிவியல் ஆசிரியர் புதிதாக வேலை கிடைத்திருக்கும், பார்த்தால் பரவாயில்லை என்று சொல்லிக் கொள்ளக் கூடிய அளவில் இருந்த ஒரு இளைஞன். அவனுடைய வகுப்பில், அவனுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டு, எல்லாவற்றையும் மறந்து விட்டு அவள் அமர்ந்திருப்பாள். ஒரு விஷயம் உண்மை. அவள் பாடத்தை கவனிப்பதில்லை என்பதென்னவோ உண்மை. அவன் தான் கூறி நிறுத்திய பாடத்தை அடுத்த நிமிடம் கேள்வியாக கேட்டால், அவள் பதில் கூற மாட்டாள். கணக்கு ஆசிரியர் அவளிடம் கேள்வி கேட்பார். தேர்வில் அவர் அவளுக்கு மதிப்பெண்களை அள்ளி வழங்குவார். ஆங்கிலப் பாட ஆசிரியர் அவளுக்கு அருகில் நின்று கொண்டுதான் பாடத்தையே நடத்துவார். அது அவருடைய ஒரு வழக்கமான செயலாக இருந்தது. அவ்வாறு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, தன்னுடைய முழங்கைகளை டெஸ்க்கின் மீது ஊன்றிய நிலையில், சற்று முன்னோக்கி நகர்ந்து அமர்ந்திருக்கும் மாலதியின் ரவிக்கைக்குள் அவருடைய கண்கள் பாய்ந்து இறங்குவதைப் பார்த்திருப்பதாக ஆண் பிள்ளைகள் கதை பரப்பினார்கள். ஒரு விஷயம் உண்மை. வயதைத் தாண்டி அந்த இடம் சற்று பெரிதாக இருந்தது. பக்கத்து வீட்டிலிருக்கும் கருணாகரன் அண்ணன் மீது அவளுக்குக் காதல் என்று ருக்மிணி கூறிக் கொண்டிருந்தாள். ருக்மினி கருணாகரனின் முறைப் பெண். இப்படிப்பட்ட கதைகள் அவளுடைய வயதைக் கொண்ட எல்லா பெண் பிள்ளைகளைப் பற்றியும் இருந்தன. ஒரே ஒரு வித்தியாசம்தான். மாலதியைப் பற்றி உருவாக்கப்பட்ட கதைகளில் சற்று அதிகமாகவே சதைகள் இருந்தன. அதற்கும் காரணம் இருக்கிறது. மற்ற பெண் பிள்ளைகளை விட மாலதிக்கு வளர்ச்சி இருந்தது. சொல்லப் போனால்- தானே பிடியை விட்டு விலகிச் செல்லக் கூடிய குணத்தைக் கொண்டவள்.
மாலதியின் தனித்துவ ரசனைகள் மற்றும் பழக்க வழக்கங்கள் அவளுடைய தாயின் கவனத்தில் பட்டதைப்போல தோன்றியது. எல்லா பெண்களின் ரசனைகளும் பழக்க வழக்கங்களும் அவளுடைய தாயின் கவனத்தில் விழுவதைப் போலத்தான். தாய்தானே அதை கவனிப்பாள்! தாய்க்குத்தானே அது தெரியும்? தந்தை மகனுடைய பழக்க வழக்கங்களைப் பற்றி....
ஒரு நாள் மாலதியின் தாய், மாலதியின் தந்தையிடம் சொன்னாள்:
'பொண்ணுக்கு யாரையாவது பார்க்க வேண்டாமா?'- அது ஒரு அவசரச் செயலாக மாலதியின் தந்தைக்குத் தோன்றவில்லை. தாய் கோபத்துடன் சொன்னாள்:
'என்ன... அவள் அப்படியே எவனையாவது... நான் ஒண்ணும் சொல்லல...'
தந்தை சற்று பதைபதைப்பு அடைந்தார்.
'என்ன... என்ன விஷயம்? அவளுக்கு பதினான்கு வயதுதானே நடக்குது?'
தாய் பதில் சொன்னாள்:
'வயது அவ்வளவுதான். ஆனால்...'
'என்ன ஆனால்?'
'அவளுடைய வளர்ச்சியையும் நடவடிக்கைகளையும் பார்த்தீர்கள் அல்லவா? அவள் ஒரு பெண் பிள்ளையாச்சே!'
அதற்குப் பிறகும் தாயின் வற்புறுத்தல் தொடர்ந்தது. மீண்டும் படுக்கையறையில் இருக்கும்போது, அந்த விஷயத்தைக் கூறினாள். ரகசியம்... மாலதியின் தாய் மாலதியின் தந்தையிடம் கூற நினைத்தது- அவள் ஏதாவது ஆணை கை காட்டி அழைத்தாள் என்பதோ, யாருடனாவது காதலில் ஈடுபட்டிருக்கிறாள் என்பதோ, குளிக்கும் முறை தவறி விட்டது என்பதோ அல்ல. தான் கண்டு பிடித்த அவளுடைய சில பழக்க வழக்கங்களைக் கூற நினைத்திருக்கலாம். ரகசியமாக அவள் தன் கணவனின் காதுக்குள் சொன்னாள். அனைத்தையும் அவர் கேட்டார். அவையெல்லாம் ஒரு ஆணுக்கு புதிய விஷயங்களாக இருந்தன. அவர் கேட்டார்:
'இந்த வயதில், எல்லா பெண் பிள்ளைகளும் அப்படித்தானா?'
தாய் கேட்டாள்:
'அவையெல்லாம் தெரிஞ்சு என்ன ஆகப் போகுது? அவளுக்கு ஒரு புருஷன் வேணும் என்ற விஷயத்தை மட்டும் புரிந்து கொண்டால் போதும்.'
மனைவியைச் சற்று கிண்டல் பண்ணிக் கொண்டே அவர் இன்னொரு கேள்வியைக் கேட்டார்:
'நீயும் இந்த வயதில் இப்படித்தான் இருந்தாயா?'
ஒரு எதிர் கேள்விதான் அதற்கான பதிலாக இருந்தது.
'மகனுடைய சரீரம் மெலிந்து கொண்டு வருவதற்கும், அவனுக்கு தன் மீதே ஒரு வெறுப்பும் நம்பிக்கையற்ற நிலையும் வருவதற்கான காரணம் என்ன என்று நீங்கதானே சொன்னீங்க! அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று. அந்த வயதில் நீங்களும் அப்படித்தான் இருந்தீங்களா?'
தந்தை அதற்கு கூச்சமே இல்லாமல் பதில் கூறினார்:
'ஆண்கள் எல்லோருமே அப்படித்தான் இருப்பாங்க.'
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook